Showing posts with label அழகு குறிப்புக்கள். Show all posts
Showing posts with label அழகு குறிப்புக்கள். Show all posts

Sunday, September 21, 2014

ஒட்டிய கன்னங்கள் அழகாக மாற பயிற்சிகள்

உங்களுடைய அழகை அதிகரித்து காட்டுவதில் முகம், கன்னம் முக்கிய பங்கை வகிக்கிறது. ஒரு சிலர் பார்க்க அழகாக இருந்தாலும் அவர்களுடைய கன்னம் ஒட்டி போய் களையிழந்து அவர்களது அழகை பாதியாக குறைத்து விடும். 

Tuesday, September 9, 2014

முகப்பரு

முகப்பரு போக்க இயற்கை மருத்துவ வழிகள்
1. வெந்தயக் கீரை - 1 கைப்பிடி
துளசி இலை - சிறிதளவு
கொத்துமல்லி இலை - சிறிதளவு
எடுத்து நீர்விட்டு அரைத்து முகத்தில் உள்ள பருக்கள் மீது தடவினால் முகப்பரு மாறும். கொழுப்பு சார்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.

Wednesday, September 3, 2014

பயத்தம் பருப்பு தரும் பளபளப்பு

பெரியவர்கள், இளையவர்கள் என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல் பச்சிளங்குழந்தைகளின் சருமத்துக்கும் கூட பளபளப்பு தந்து பாதுகாப்பு வளையத்தையும் போனஸாக வழங்குகிறது பயத்தம் பருப்பு! 

Friday, August 22, 2014

வறண்ட கூந்தலை மின்ன வைக்கும் கொய்யா

ஜீரண பிரச்சினைகளுக்கு சிறந்த 10 வீட்டு வைத்தியங்கள் :-
அனைவரும் வாழ்க்கையில் ஏதோ ஒரு சமயத்தில் கண்டிப்பாக அசிடிட்டி பிரச்சினை யால் அவதியுற் றிருப்போம் என்பது 100% உண்மை. வயிற்றில் அமிலம் சுரக்கும் செயல்பாட்டிற்கும், அதிகளவில் அமிலம் சுரப்பதை தடுக்கும் செயல்பாட்டிற்கும் இடையேயான ஏற்றத்தாழ்வால் ஏற்படும் அறிகுறிகள் தான் அசிடிட்டி ஆகும்.

Saturday, August 16, 2014

அழகு குறிப்புக்கள்



பெண்களுக்கான அழகு குறிப்புக்கள். ஆண்களும் பயன்படுத்தலாம்.
தலை முடி:
வாரத்திற்கு 2 முறை தலை குளிக்க வேண்டும்.
தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய் மூன்றையும் சரிபாதியாக எடுத்து லேசாக சூடு பண்ணி தலையில் மசாஜ் செய்து 1மணி ஊறிய பிறகு தலை குளிக்க வேண்டும்.
தயிர், எலுமிச்சை சாறு சரிபாதி எடுத்து தலையில் தேய்த்து 1/2மணி நேரத்திற்கு பிறகு குளிக்கலாம்.
முட்டையின் வெள்ளை கருவை நன்கு நுரை வரும் அடித்து தலையில் தேய்த்து 1/2மணி நேரத்திற்கு பிறகு குளிக்கலாம்.
மருதாணி பொடி அல்லது மருதாணியை அரைத்து தலையில் தடவி 1/2மணி நேரத்திற்கு பிறகு குளிக்கலாம்.
வெந்தயத்தை இரவில் ஊறவைத்து காலையில் அரைத்து தலையில் தடவி 1/2மணி நேரத்திற்கு பிறகு குளிக்கலாம்.
- இவற்றால் பொடுகு வராது; தலைமுடியும் பளபளப்பாகும்.
முகம்:
புளித்த தயிர், மஞ்சள் தூள் சரி அளவு எடுத்து முகத்தில் தடவி 1/2 மணி நேரத்திற்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.
வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் தடவி 1/2 மணி நேரத்திற்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.
சந்தனத்தை முகத்தில் தடவி 1/2 மணி நேரத்திற்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.
சிறிது ஆலிவ் ஆயில் எடுத்து முகத்தில் தடவி 1/2 மணி நேரத்திற்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.
தினமும் அல்லது 1 நாள் விட்டு கஸ்தூரி மஞ்சள் தேய்க்கலாம்.
- இவற்றால் முகம் பொலிவாகும். பருக்கள் வராது. கரும்புள்ளிகள் மறையும். முகமும் பளபளக்கும்.
உதடு:
பிட்ரூட்டை அரைத்து உதட்டில் தடவி 1/2 மணி நேரத்திற்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.
கொத்தமல்லி இழையை அரைத்து உதட்டில் தடவி 1/2 மணி நேரத்திற்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.
- இவற்றால் உதடு சிவப்பாகும்.

முகத்தில் உள்ள முடியை நீக்க உதவும் முட்டை

* உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும். 

* முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும். 

* முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும். 

* பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும். 

* தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும். 

* மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும். பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும். 

* ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

Friday, August 15, 2014

பளிங்கு முகத்துக்கு...


பளிங்கு முகத்துக்கு பச்சை திராட்சை  சருமத்தை மிருதுவாக்கி பளீரிட வைக்கிறது பச்சை திராட்சை. தினமும் 4 பச்சை திராட்சையை கைகளால் கசக்கி சாறு எடுத்து, முகத்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிருதுவாகும்.



எண்ணெய்ப் பசை சருமமாக இருந்தால், அரை டீஸ்பூன் பச்சை திராட்சைச் சாறுடன்

அரை டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள். இதனால், தோலில் உள்ள அதிகப்படியான எண்ணெய்
நீங்கி, பளிங்குபோல் முகம் பிரகாசிக்கும்.



பருத்தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், பருக்கள் வராமலும் தடுக்கிறது பச்சை திராட்சைச் சாறு. இரண்டு புதினா இலைகளை இடித்து எடுத்த சாறுடன் அரை டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் கலந்து கொள்ளுங்கள். இது பேஸ்ட்டாகும் அளவுக்கு சிறிது திராட்சைச்சாறு, எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவினால், முகத்தில் இருக்கும் பருக்கள் மறையும். மேற்கொண்டு பருக்கள் வராமல் தடுக்கும். சருமமும் மிருதுவாகும்.



தொய்வடைந்த தோலை இறுக்கமாக்கி, இளமைத் தோற்றம் தருகிறது பச்சை திராட்சைச் சாறு. ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை ஒரு கிண்ணத்தில் எடுங்கள்.

அதே அளவுக்கு திராட்சைச் சாறையும் எலுமிச்சைச் சாறையும் எடுத்து, வெள்ளைக் கருவுடன் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். இதை முகம், கழுத்து, கை ஆகிய

பகுதிகளில் `பேக்’ ஆகப் போட்டு 20 நிமிடம் காயவிட்டு கழுவுங்கள். பச்சை திராட்சை,

சருமத்தை மிருதுவாக்கும். எலுமிச்சைச் சாறு, சருமத்தை சுத்தப்படுத்தும். முட்டை,
தொய்வடைந்த தோலை இறுக்கமாக்கும். இதுபோல வாரம் இருமுறை செய்துவர
முதுமைத் தோற்றம் மறைந்து இளமை மிளிரும்.


சிவப்பழகை ஜொலிக்கச் செய்யும் தன்மையும் பச்சை திராட்சைக்கு உண்டு. ஆரஞ்சு பழத்தோலை உலர்த்தி பவுடராக்குங்கள். ஒரு டீஸ்பூன் இந்தப் பவுடருடன்,  ஒரு டீஸ்பூன் திராட்சை ஜுஸ் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பூசி கழுவுங்கள். இப்படிச் செய்வதால் தோலின் முரட்டுத்தன்மை நீங்குவதுடன் நிறமும் கூடும்.


அழகுக்கு ஆதரவு தருவதில் காய்ந்த திராட்சைக்கும் கணிசமான பங்கு இருக்கிறது. காய்ந்த திராட்சையுடன், பீட்ரூட் சாறை கலந்து தினமும் உதடுகளில் பூசி வர, உதடுகள் கோவைப்பழம் போல சிவக்கும்.



காய்ந்த திராட்சை, பாதாம் பருப்பு இரண்டையும் சம அளவு எடுத்து மிக்ஸியில் நைசாக

அரைத்துக் கொள்ளுங்கள். இதை முகத்தில் பூசி, சிறிது நேரம் ஊறவிட்டு கழுவினால், ஃபேஷியல் செய்தது போல முகம் ஜொலிக்கும்.