பேகம்பூர் மஹல்லாஹ்வாசிகள் மற்றும் அனைத்து முஸ்லீம் சமுதாய மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த #ரமலான் பெருநாள் (ஈதுல் பித்ர்) நல்வாழ்த்துகள் ...
TAMIL MUSLIM SONGS
Sunday, June 25, 2017
கர்மவீரரின் நகைச்சுவை
#கர்மவீரர்_காமராஜர் ஒரு முறை, தஞ்சை மாவட்டத்தில் இருந்த பழைமையான கோயில் ஒன்றைப் பார்வையிடச் சென்றார். சிதிலம் அடைந்திருந்தாலும் புராதனமான அந்தக் கோயிலின் கட்டுமானம் அவரை வியக்க வைத்தது.
ஓர் இடத்தில் நின்றவர், "இந்தக் கோயிலைக் கட்டுனது யாரு?'' எனக் கேட்டார்.
உடன் வந்த அதிகாரிகளுக்கு அதுபற்றி தெரிய வில்லை. பதில் சொல்லத் தெரியாமல் விழித்தனர்.
உடன் வந்த அதிகாரிகளுக்கு அதுபற்றி தெரிய வில்லை. பதில் சொல்லத் தெரியாமல் விழித்தனர்.
உடனே, சிரித்துக் கொண்டே மேலே இருந்த டியூப் லைட்டை சுட்டிக்காட்டிய காமராஜர், "இவ்வளவு காலம் நிலைச்சு நிக்கிற இந்தக் கோயிலைக் கட்டியவர் யாருன்னு தெரியலே...ஆனா, ஒரு மாதம்கூட ஒழுங்கா எரியாத இந்த டியூப் லைட்ல உபயதாரர் யாருன்னு எவ்வளவு பெரிசா எழுதி வெச்சிருக்காங்கன்னு பாருங்களேன்'' என்று கூற... உடன் வந்தவர்கள் வாய்விட்டுச் சிரித்தார்களாம்!
பெருநாள் தொழுகையை பள்ளிகளில் நிறைவேற்றுவது வழிகேடா???
பெருநாள் தொழுகையை பள்ளிகளில் நிறைவேற்றுவது வழிகேடா??
-வஹ்ஹாபிச சலபிகளின் வாதங்கள் ஓர் அலசல்
**********************************************************
நோன்புப் பெருநாளுக்கு இன்னும் ஒரு சில தினங்களே எஞ்சியிருக்கின்ற நிலையில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றும் இடம் தொடர்பில்( முஸல்லா) வாதப்பிரதிவாதங்களும் கருத்து மோதல்களும் பல தளங்களிலும் பற்றியெரிந்துகொண்டிருக்கிறது.
பெருநாள் தொழுகையை திடலில் மட்டும்தான் தொழவேண்டும் என்றும் பள்ளிகளில் தொழுவது கூடாது, வழிகேடென்றும் கருத்துக்கள் அதிகளவில் வஹ்ஹாபிச,சலபிக்கூட்டத்தினரால் பரப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது.எனவே இது பற்றிய ஒரு தெளிவை வழங்கும் நோக்கில் இக்கட்டுரை வரையப்படுகிறது.
Monday, June 5, 2017
கண்ணியமிகு காயிதே மில்லத்
காயிதேமில்லத் மரணித்தபோது புதுக்கல்லூரி வளாகத்தில் அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கே இறுதி மரியாதை செலுத்த வந்த தந்தைப் பெரியார், 'தம்பி போயிட்டீங்களா..' என குலுங்கினார். 'நான் போயி இந்தத் தம்பி வாழ்ந்திருக்கக்கூடாதா' என விசும்பினார். 'இனி இந்தச் சமுதாயத்தை யார் காப்பாற்றுவார்' என குமுறினார். 'முஸ்லிம் சமுதாயத்திற்கு இவர் போல ஒரு தலைவர் கிடைக்கமாட்டார்' என கருத்துரைத்தார்.
பெரியார் அப்படிச் சொல்லும் அளவுக்கு காயிதே மில்லத் அப்படி என்ன செய்தார்?
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்
சுப்ஹானல்லாஹ்! மெய் சிலிர்த்த சம்பவம் ......
ஒரு சமயம் ஹஸ்ரத் பாத்திமா (ரலி) அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் மூன்று நாட்கள்வரை தொடர்ந்து எதுவும் சாப்பிடாமல் பட்டினியாக இருந்தார்கள்.
குடும்பத்தின் பசி, பட்டினி பொறுக்க முடியாமல் தங்களின் பிரியமான புதுத்துணியொன்றை தனது அருமைக் கணவர் ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களிடம் கொடுத்து இத்துணியை விற்றுப் பணம் கொண்டு வாருங்கள் என்று சொன்னார்கள்.
Sunday, June 4, 2017
சதகாவின் சிறப்பு - எகிப்தில் நடந்த உண்மை சம்பவம்
எகிப்தியருக்கு நடந்த உண்மை சம்பவம்:
எகிப்தில் ஒரு மனிதர் இருந்தார். அவர் இருதய வலி காரணமாக வைத்தியரிடம் சென்ற வேளை, 'உங்களுடைய இதயத்துக்கு செல்லும் இரத்த குழாய்களில் அதிகமான அடைப்புகள் காணப்படுகின்றன" என்று வைத்தியர் கூறினார். அதற்கு அந்த மனிதர், 'உங்களுக்கு அதை ஆபரேஷன் பண்ண முடியுமா" என்று கேட்டார். அதற்கு வைத்தியர், 'இதனை ஆபரேஷன் பண்ணுவது மிகவும் கடினமாகும். இன்னும் அது மிகவும் ஆபத்தானதுமாகும். உங்களுக்கு இருக்கும் சிறந்த தீர்வு ஜெர்மன் நாட்டுக்கு சென்று அங்கே இந்த ஆபரேஷனை செய்வதாகும்' என்று கூறினார்.
அகழ் தோண்டுகையில் வெளிப்பட்ட நபித்துவத்தின் அத்தாட்சிகள்
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அகழ்ப்போரின் போது அகழ் வெட்டும் பணி நடக்கும் இடத்தை நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது முஹாஜிர்களும் அன்சாரிகளும் கடும் குளிரான காலை நேரத்தில் அகழ் தோண்டிக் கொண்டிருந்தார்கள். முஹாஜிர் என்றால் மக்காவில் இருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றவர்கள். அன்ஸாரி என்றால் உதவியாளர்கள் என்பது அர்த்தமாகும். மக்காவிலிருந்து மதீனா வந்தவர்களுக்காக அர்ப்பணிப்புக்களைச் செய்த மதீனாவாசிகளே அன்ஸாரிகள். அவர்களுக்கு ஏற்பட்டிருந்த களைப்பையும் பசியையும் கண்டபோது நபி(ஸல்) அவர்களுக்காகப் பிரார்த்தித்தார்கள். மக்களோடு சேர்ந்து நபிகளாரும் அகழ் தோண்டலானார்கள்.
Subscribe to:
Posts (Atom)

