Friday, July 28, 2017

துன்பம் நேரும்போது ஓதும் துஆ

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் துன்பம் நேரும்போது,
'லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வ ரப்புல் அர்ளி வரப்புல் அர்ஷில் கரீம்' என்று ஓதுவார்கள். 
(பொருள்: கண்ணியமிக்கோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. மாபெரும் அரியாசனத்தின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் சிறப்பான அரியாசனத்தின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.

அறிவிப்பவர் - இப்னு அப்பாஸ்(ரலி)                                                         நூல் : ஸஹீஹ் புகாரி.

Wednesday, July 26, 2017

எதிர்பாராத கஷ்டம், நோய், சோதனையில் போது அல்லாஹ்விடம் நாம் பாதுகாப்பு கேட்க துஆ...

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”  (அல்குர்ஆன் : 2:286)

Wednesday, July 12, 2017

உலக இறுதி நாட்களில் ஏற்படும் அடையாளங்கள்

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
உலக இறுதி நாட்களில் ஏற்படும் அடையாளங்கள் என்று ஹஜ்ரத் நபிகள் நாயகம்  முஹம்மது (ஸல்) அவர்கள் குறிப்பிட்டவைகள்.
*
*
*
* அநீதி பெருகிவிடும்.
* பொய் உண்மையாகும்.
* தீர்ப்புகள் நியாயமானதாக இருக்காது.
* மனித உள்ளங்கள் மாசு படிந்திருக்கும்.
* இலேசன விஷயத்திற்கெல்லாம் கொலை செய்வார்கள்.

அற்புத துஆக்கள்

பெற்றோருடன் ஹஜ் செய்ய கூடிய பாக்கியத்தை நம் அனைவர்க்கும் அல்லாஹ் தந்து அருள் புரிவானாக ...!  ஆமீன் .... 

Monday, July 10, 2017

அற்புத துஆக்கள்

யா அல்லாஹ்! நீ அளித்த எங்கள் குழந்தை செல்வங்களை உன் பாதையில் போராடும் முஜாஹிதீன்களாகவும், உனக்கு மட்டுமே ஸஜ்தா செய்யும் வணக்கசாலிகளாகவும், இஸ்லாத்திற்கும், முஸ்லிம் உம்மாவிற்கும் சேவைசெய்பவர்களாகவும் ஆக்குவாயாக!
எங்களையும் அவர்களையும் இல்லிய்யீன் எனும் சுவனத்தில் ஒன்றிணைப்பாயாக ! 
ஆமீன்  

Sunday, July 9, 2017

மழைநீர் பிராணன்


மழை நீரில் குளிக்கும் ஒருவனுக்கு ஒருவேளை சளிபிடித்து, காய்ச்சல் வந்தால், அவன் ஆரோக்கியமாக இல்லை, எனவே அவை ஆரோக்கியத்தை ஏற்ப்படுத்துகிறது என்று அர்த்தம்.
சுத்தமான மழை தண்ணீரில் அளவுக்கு அதிகமாக பிராணன் இருக்கிறது. மழைநீரில் நனையும்போது பலருக்கும் சளி பிடிக்கிறது. தும்மல் வருகிறது, காய்ச்சல் வருகிறது. இது ஏன் வருகிறது அதாவது மழைநீரில் அளவுக்கு அதிகமான பிராணன் இருப்பதால் நமது உடலில் உள்ள அனைத்து செல்களும் அந்த பிராணனை உறிய ஆரம்பிக்கிறது.

மகத்தான அரசியல் தலைவர் காயிதே மில்லத்

இந்தியாவின் ஆட்சி மொழியாக எந்தமொழி இருக்க வேண்டும்? என்ற விவாதம் நடத்தப்பட்டபோது. இந்தியப் பாராளுமன்றத்திற்குள் தமிழே! ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்! என்று முதல் முதலில் முழங்கிய பெருந்தகை.
நீங்கள் இசுலாமியர் ஆயிற்றே! ஏன் தமிழை ஆட்சி மொழியாகக் கேட்கிறிர்கள்? என்று கேள்வி எழுப்பியதற்கு, நான் அல்லா! என்று அழைப்பதற்கு முன்பே, அம்மா! என்று அழைத்தவன்.
இசுலாம் எங்கள் வழி! இன்பத் தமிழே! எங்கள் மொழி! என்று இந்த உலகம் கேட்க உரக்க முழங்கிய மானத் தமிழர்.
இந்தத் தலைமுறை தமிழ்ப் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக விளங்கக்கூடிய உண்மையும் நேர்மையும் தூய்மையும் எளிமையுமான மகத்தான அரசியல் தலைவர் நமது ஐயா காயிதே மில்லத்.