Thursday, August 17, 2017

ஹதீஸ் - மைய்யத்துக்கு கஷ்டமான கவலையான நேரம் எது?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் 
நபி(ஸல்) அவர்கள் தனது மனைவி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கிறார்கள்..
ஆயிஷாவே ஒரு மனிதன் உலகை விட்டு பிரிந்தால், அந்த மைய்யத்துக்கு கஷ்டமான
கவலையான நேரம் எது?
ஆயிஷா(ரலி): யா ரஸூல்லாஹ் அந்த மையத்தை வீட்டிலிருந்து வெளியே எடுத்துப்போகும் நேரம்
நபி(ஸல்): "இல்லை"
ஆயிஷா(ரலி): அந்த மையத்தை கபுரில் அடக்கி விட்டு தன்னந்தனியாக விட்டுவிட்டு
வருகிறோமே அதுதான் துயரமானது.

ஹதீஸ் - உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் 
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு 'உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு' என்றார்கள். 
(அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) 
'நீ மாலை நேரத்தை அடைந்தால் காலைவேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறிது நேரத்தைச் செலவிடு. உன்னுடைய இறப்புக்குப் பிந்திய நாளு)க்காக உன்னுடைய வாழ்நாளில் சிறிது நேரத்தைச் செலவிடு' என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள்.
ஸஹீஹ் புகாரி    

Tuesday, August 15, 2017

இரண்டு வயது வரை குழந்தைக்கு தலையணை வைப்பதை தவிர்க்கவும்

தலையணை வைத்தால் குழந்தை நன்றாக தூங்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதுவே குழந்தைக்கு மூச்சுத்திணறலை உண்டாக்கும்.
குழந்தைகள் பிறந்தது முதல் ஒரு வயது வரையில் அதிகமாக தூங்குவார்கள். அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. அந்நேரத்தில் இடைஞ்சல் இல்லாமல் தூங்குவதற்கான முன்னேற்பாடுகளை செய்யும் போது பெரும்பாலானோர் செய்யும் தவறுகளில் ஒன்று குழந்தைக்கு தலையணை வைப்பது. குழந்தைக்கு இரண்டு வயதாகும் வரை தலையனை போட வேண்டிய அவசியமில்லை. அதற்கு மேல் உயரமான தலையணை போட வேண்டாம்.

Saturday, August 12, 2017

01 முதல் 10 மாதம் வரை குழந்தை வளர்ப்பு (பிறந்த குழந்தை)

குழந்தையைக் கதகதப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிகமாகப் போர்த்தவும் கூடாது. எடை குறைவாகப் பிறந்த குழந்தை என்றால், குளிர்காலம் இல்லை என்றாலும்கூட சாக்ஸ், கிளவுஸ் போட்டு வைப்பது நல்லது.

குழந்தை பிறந்ததும், அதன் முதல் உணவு சீம்பாலாகத்தான் இருக்க வேண்டும். அதுவும், பிறந்த அரைமணி நேரத்துக்குள் கொடுக்க ஆரம்பிக்கவேண்டும். சிஸேரியன் என்றால், தாய்க்கு மயக்கம் சிறிது தெளிந்ததும், 3 அல்லது 4 மணி நேர த்தில் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது; அதனால் இரண்டு நாள் கழித்துகொடுக்கலாம் என்று சிலர் தள்ளி ப்போடுவார்கள். அது தவறு. ‘கொலோஸ் ட்ரம்’ எனப்படும் சீம்பாலில் தான், நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான விஷயங்கள் அதிகம் இருக்கின்றன. இன்குபேட்டரில் வைக்கப்படும் குழந்தைக்குக்கூட, தாயிடமிருந்து பெறப்படும் சீம்பால் டியூப் வழியாகக் கொடுக்கப்படுகிறது.
•••✺✦✿ ﺑِﺴْــــــــــــــــــﻢِ ﺍﷲِﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﺍﺭَّﺣِﻴﻢ ✿✦✺•••
#குர்_ஆனில் உலகம் (الدنيا) என்கின்ற வார்த்தை 115 தடவை  வருகிறது =மறுமை(الاخرة) என்கின்ற வார்த்தையும் 115 தடவை வருகிறது
#மலக்குகள்(வானவர்கள்) (المليکة)என்கின்ற வார்த்தை 88 தடவை வருகிறது = ஷைத்தான்(الشيطين) என்கின்ற வார்த்தையும் 88 தடவை வருகிறது
#வாழ்க்கை(الحيوة) என்கின்ற வார்த்தை 145தடவை வருகிறது = மரணம் என்கின்ற வார்த்தையும் 145 தடவை வருகிறது
#நல்ல செயல்கள் (الصلحت)என்கின்ற வார்த்தை 167தடவை வருகிறது = கெட்ட செயல்கள் (السيات) என்கின்ற வார்த்தை 167 தடவை வருகிறது
#நம்பிக்கை என்கின்ற வார்த்தை 17 தடவை வருகிறது = மறுப்பு என்கின்ற வார்த்தையும் 17 தடவை வருகிறது
#இப்லீஸ் (ابليس) என்கின்ற வார்த்தை 11தடவை வருகிறது = இப்லீஸைவிட்டும் பாதுகாவல் தேடுகிறேன் என்கின்ற வார்த்தை 11 தடவை வருகிறது
#அவர்கள் சொன்னார்கள் என்கின்ற வார்த்தை 332தடவை வருகிறது = நபியே சொல் என்கின்ற வார்த்தை 332 தடவை வருகிறது.
#வருடத்திற்கு மொத்தம் 365 நாட்கள் தானே ???
குர்'ஆனில் நாள் என்கின்ற வார்த்தை 365 தடவை வந்துள்ளது...
#வருடத்திற்கு 12 மாதங்கள் தானே ???
மாதம் என்கின்ற வார்த்தை 12 தடவை வந்துள்ளது...
இதை யாரால் செய்யமுடியும்
குர்'ஆன் இறைவனின் வேதம் என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்.


உம்மத்தின் மேல் கொண்ட நேசம்

•••✺✦✿ ﺑِﺴْــــــــــــــــــﻢِ ﺍﷲِﺍﻟﺮَّﺣْﻤَﻦِ ﺍﺍﺭَّﺣِﻴﻢ ✿✦✺•••
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ஒரு முறை ஆயிஷா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடத்திலே கேட்கிறார்கள்… அல்லாஹ்வுடைய தூதரே எனக்காக அல்லாஹ்விடத்திலே ஒரு முறை பிரார்த்தனையை செய்யுங்களேன்…
அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள்… 
யா அல்லாஹ்…
ஆயிஷா (ரலி) யை மன்னித்துவிடு… அவர்கள் முன் செய்த பாவத்தை, பின் செய்த பாவத்தை, அவர்கள் மறைத்து செய்ததை, வெளிப்படையாக செய்ததை என எல்லா பாவங்களையும் மன்னித்துவிடு என்றார்கள்…

Tuesday, August 8, 2017

திருக்குர்ஆன் இறை வேதம்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ...
இறை வேதம் என்பதற்கான சான்றுகள்:
அறிவியல் சான்றுகள்
1400 ஆண்டுகளுக்கு முன்னால் எந்த மனிதனுக்கும் தெரியாத அன்றைக்கு இறைவனுக்கு மட்டுமே தெரிந்த பல விஷயங்கள் திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளன.
முஹம்மது நபியால் இதைச் சொல்லி இருக்கவே முடியாது என்பதையும், இறைவன் தான் சொல்லி இருக்க முடியும் என்பதையும் நேர்மையான பார்வையுடையவர்களால் அறிந்து கொள்ள இயலும். அது போன்ற வசனங்களைக் கீழே தந்துள்ளோம்.
இவ்வசனங்களை வாசியுங்கள். அத்துடன் இந்த வசனங்களின் குறிப்பு எண்ணுக்கான விளக்கத்தையும் வாசித்தால் இதை இன்னும் நன்றாக அறிந்து கொள்ள இயலும்.