Saturday, August 2, 2014

பொன்மொழிகள்-11

1. மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை. -ஹெலன் கெல்லர்.
2. நாம் செய்யும் சேவை கடலின் ஒரு துளி போன்றதுதான். ஆனால் அதை நாம் செய்யாவிட்டால் கடலில் ஒரு துளி குறைந்துவிடும் அல்லவா? -அன்னை தெரசா.
3. மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடையமுடியும்.
-அம்பேத்கர்.
4. வீரன் ஒரு முறைதான் சாகிறான். கோழை ஒவ்வொரு நிமிடமும் செத்துக் கொண்டேயிருக்கிறான். -ஷேக்ஸ்பியர்.
5. கல்வியின் வேரானது கசக்கும். ஆனால் அதன் விளைச்சல் இனிக்கும். -அரிஸ்டாட்டில்.
6. சோம்பல் மாவீரனையும் வீழ்த்திவிடும். - பார்ட்டன்.
7. பழிவாங்குதல் வீரமன்று. ஆனால் பொறுப்பதே வீரம். - ஸ்ரீ ராமகிருஷ்ணர்.
8. ஊக்கத்தைக் கைவிடாதே. அதுதான் வெற்றியின் முதல் படிக்கட்டு. -அண்ணா.
9. கோபத்தைக் கொன்று விடு. இல்லையேல் அது உன்னைக் கொன்றுவிடும். -குருநானக்.
10. உயர்ந்த எண்ணங்களை உடையார் ஒரு நாளும் துன்பம் அடையார். - காந்தியடிகள்.

No comments:

Post a Comment