Monday, March 28, 2016

திருக்குர்ஆன்,

அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காதுஹு
1 எனது பெயர் :-
குர்ஆன், நூர், தன்ஸீல், புர்கான்
2.எனது மொழி :- ♋அரபு
முதலில் இருந்த இடம் :-   லவ்ஹூல் மஹ்பூல்

அவ்வாபீன் தொழுகை

அவ்வாபீன் தொழுகை என்றால் என்ன? 
இது மக்ரிபுக்கும், இஷாவுக்கும் இடையில் தொழும் ஸுன்னத்தான தொழுகையாகும். இது இருபது ரக்அத்துகள் கொண்டது. இதை ஆறு, நான்கு, இரண்டு ரக்அத்துகளாகவும் தொழலாம். 
இதன் முக்கியத்துவம்
கண்மணி நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"மஃரிப்பிக்கு பின் யார் ஆறு ரக்அத்கள் தொழுது அவற்றிக்கிடையே எந்த தீய பேச்சுக்களும் பேசாமல் இருக்கிறாரோ அவரது அத்தொழுகை பன்னிரென்டு வருடத்து வணக்கத்துக்கு நிகரானவை"
நூல் - திர்மிதி, இப்னு மாஜா

Sunday, March 27, 2016

குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது ஏன் தெரியுமா?

நம் நாட்டில் நிறைய பழக்கவழக்கங்கள் காரணம் தெரியாமலேயே மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆனால் அப்படி பின்பற்றப்படும் பழக்கவழக்கங்களுக்கு பின்னணியில் நிச்சயம் ஓர் உண்மை மறைந்திருக்கும்.
முறையாக சொன்னால் யாரும் பின்பற்றமாட்டார்கள் என்று நம் முன்னோர்கள் செய்த வேலை தான் இது.
அதில் குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது என்பது ஒன்று.
பலரும் இது ஓர் குடும்ப வழக்கம், நேர்த்திக்கடன் என்று நினைத்து பின்பற்றி வருகிறார்கள்.
ஆனால் இதற்கு பின்னணியில் உள்ள உண்மையான காரணம் என்னவென்று யாருக்காவது தெரியுமா?
தெரியாதெனில், உங்களது எண்ணத்தை மாற்றி, இனிமேலாவது உண்மையான காரணத்தைத் தெரிந்து கொண்டு பின்பற்றுங்கள்.

"கைவிரல் நகங்களைத் தேய்த்தால்" தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம் என்பது தெரியுமா ?

 " கைவிரல் நகங்களைத் தேய்த்தால் " தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம் என்பது தெரியுமா ? 
💅 💅 💅 💅 💅 💅 💅 💅 💅 💅 💅
💅 💅 " Rubbing Nails " 💅 💅 ✔ ✔
🔰 " தலைமுடி உதிர்வதற்கு எத்தனையோ மருத்துவர்களை நாடி, அவர்கள் கொடுக்கும் மருந்துகள் மற்றும் எண்ணெய்களைப் பின்பற்றி இருப்போம். ஆனால் அந்த தலைமுடி உதிர்வதற்கு ஏராளமான இயற்கை வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் கைவிரல் நகங்களைத் தேய்ப்பது . .

🔰 " என்ன நம்ப முடியவில்லையா ?

தாழ்வு மனப்பான்மை - துடைத்தெரிந்தவர் பெருந்தலைவர்....

மதிய உணவுத்திட்டம் அமல்படுத்தியபின் கலெக்டர்கள் மீட்டிங்கைக் கூட்டினார் முதல்வர் காமராஜ். "ஏண்ணே, இப்போ எல்லா பசங்களும் பள்ளிக்கூடத்துக்கு வர்றாங்களா?" என்று கேட்க, அதற்கு கலெக்டர்கள் "எல்லாரும் வரலை, ஓரளவுக்கு வர்றாங்க. காரணம் என்னன்னா, பணக்கார வீட்டுப்பசங்க பளபளன்னு சட்டை போட்டுக்கிட்டு வர்றாங்க. இவனுங்களோ கோவணாண்டிகள். அவங்களோடு உட்கார கூச்சப்படுறாங்க" என்று சொன்னதும் தலைவர் யோசித்தார்.
"சரி, இனிமேல் எல்லாரும் ஒரேமாதிரி யூனிபார்ம் போட்டுக்கிட்டு வரணும்னு சட்டம் போட்டுடறேன். வசதியுள்ளவர்கள் அவர்களே வாங்கிக்கட்டும். ஏழைகளுக்கு அரசாங்க சார்பில் இலவச சீருடை வழங்குவோம்" என்று சொன்னதோடு சட்டமும் பிறப்பித்தார்.
இலவச சீருடை அணிந்து பள்ளிக்குச்சென்ற ஏழை மாணவனுக்கு அங்கே ஆச்சரியம். நேற்று வரை தங்க ஜரிகை சட்டை போட்டு வந்த பஸ் கம்பெனி முதலாளி மகனும் தன்னைப் போலவே சீருடை அணிந்திருப்பதைப் பார்க்கிறான். அவனுடைய தாழ்வு மனப்பான்மை துடைத்தெரியப் படுகிறது.
துடைத்தெரிந்தவர் பெருந்தலைவர்....

.ஹதீஸ்கள்-உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் தங்குமிடம்

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் தங்குமிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும்.
அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்திலிருப்பதாகவும் நரகவாசியாக இருந்தால் நரகத்திலிருப்பதாகவும் (எடுத்துக் காட்டப்படும்.)
மேலும், அல்லாஹ் மறுமை நாளில் உன்னை எழுப்புகிற வரை இதுவே (கப்ரே) உன்னுடைய தங்குமிடம் என்றும் கூறப்படும்.” அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி 1379   அத்தியாயம் : 23. ஜனாஸாவின் சட்டங்கள்
மரணத்திற்கு வயது கிடையாது எப்பொழுது வேண்டும் என்றாலும் என் நிலையிலும் அது நம்மை அடையலாம் ...
யா அல்லாஹ் எங்களை உனக்கு பிடித்த நிலையில் மரணிக்க செய்வாயாக