Saturday, August 26, 2017

இருபெருநாள்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ......
955. பராஃ(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள்தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) 'நம்முடைய தொழுகையைத் தொழுது, (அதன் பிறகு) நாம் குர்பானி கொடுப்பதுபோன்று கொடுக்கிறவரே 'உண்மையில் குர்பானி கொடுத்தவராவார். தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறவர் தொழுகைக்கு முன் (தமக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவரல்லர்.' என்று குறிப்பிட்டார்கள். 

Friday, August 25, 2017

ஹராமான, தடுக்கப்பட்ட, பாவமான காரியத்தைப் போன்ற செயல்களை செய்வது

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ......
உங்களில் யாரேனும் மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத ஹராமாக அறிவிக்கப்பட்ட இரத்தம், பன்றியின் இறைச்சி, தாமாக செத்தபிராணிகள் மற்றும் அல்லாஹ்வின் பெயர் சொல்லப்படாமல் அறுக்கப்பட்ட மாமிசத்தை உண்ண விரும்புவாரா?
அல்லது
இறந்த தனது சகோதரரது மாமிசத்தை உண்ண விரும்புவாரா?
கலிமா ஓதும் உங்கள் பதில் இல்லை என்றுதான் இருக்கும்!
ஆனால் மேற்கண்ட ஹராமான, தடுக்கப்பட்ட, பாவமான காரியத்தைப் போன்ற செயல்களை உங்களில் பலர் உங்களை அறியாமலேயே செய்து வருகிறீர் அதுதான்.

இகாமத் சொல்ல மறந்தால் தொழுகை கூடுமா?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ......
இகாமத்_சொல்ல_மறந்தால்_தொழுகை_கூடுமா?
கடமையான தொழுகையில் இகாமத் சொல்ல மறந்த நிலையில் தக்பீர் கட்டி, தொழுது விட்டோம். இந்தத் தொழுகை கூடுமா? கூடாதா?
பதில் : கூடும். ஒரு நன்மையை இழந்து விடுகின்றோம்.

ஜும்ஆ தொழுகையின் ஒழுங்கும் சிறப்பும் :

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு
மூன்று பேர்கள் ஜும்ஆவிற்கு வருகின்றார்கள். ஒருவர் ஜும்ஆவிற்கு வந்து (குத்பாவின் போது பேசி) வீணாக்குகின்றார். இதுவே அவரது ஜும்ஆவில் கிடைத்த அவருடைய பங்காகும்.
இன்னொருவர் ஜும்ஆவிற்கு வந்து பிரார்த்திக்கின்றார். இவர் மகத்துவமும், கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தவராவார். அவன் நாடினால் அவருக்கு வழங்குவான். அவன் நாடினால் அவருக்கு (கொடுக்காமல்) தடுக்கின்றான்.

Thursday, August 24, 2017

குர்பானியின் சட்டங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு
🕋கிப்லாவை முன்னோக்கித் தான் அறுக்க வேண்டுமா
💢🐄குர்பானிப் பிராணியை *கிப்லாவை முன்னோக்கித்தான்* அறுக்க வேண்டும் என்று *கூறுவதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்* எதுவும் இல்லை. இது தொடர்பாக பைஹகியில் இடம் *பெறுகின்ற ஹதீஸை இமாம் பைஹகீ அவர்களே பலவீனமானது* என்று குறிப்பிட்டுள்ளார்கள். எனவே *எந்தத் திசை* அறுப்பவருக்கு *தோதுவாக* உள்ளதோ அந்தத் திசையில் அறுக்கலாம்.
💢🐫சில ஊர்களில் அறுப்பதற்கு முன்னால் பிராணியைக் *குளிப்பாட்டுவது, மஞ்சள் பூசுவது, கண்களில் சுர்மா இடுவது, கொம்புகளில் பூச்சுற்றுவது* போன்ற செயல்களைச் செய்கின்ற னர். *இவை எல்லாம் மாற்றுமதக் கலாச்சாரங்களாகும்* . மேலும் நபி(ஸல்) அவர்கள் காட்டித் தராத *மார்க்கத்தில் புதிதாக நுழைக்கப்பட்ட பித்அத்'தான* நடைமுறைகளாகும். இவற்றைத் தவிர்ப்பது மிகவும் அவசியமானதாகும்.

வெள்ளிக்கிழமை அன்று அரஃபா நோன்பு வைக்கலாமா?...



🗣
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு
கேள்வி : வெள்ளிக்கிழமை அன்று அரஃபா நோன்பு வைக்கலாமா ?
 பதில் : 🍁 துல்ஹஜ் மாதம் பிறை 9 அன்று அரஃபா நோன்பு நோற்குமாறு நபிகளார் வழிகாட்டியுள்ளார்கள். இதற்கு நன்மையையும் குறிப்பிட்டுள்ளார்கள்.

🍁 துல்ஹஜ் ஒன்பதாவது நாள் (அரஃபா) அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: உமர் (ரலி), நூல்: முஸ்லிம் (2151)
🍁 முந்தைய பிந்தைய பாவங்கள் மன்னிப்பதற்கு காரணமாக இருக்கும் இந்த அரஃபா நோன்பு இந்த வருடம் வெள்ளிக்கிழமை வருகிறது. எனவே வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு வைக்கலாமா? அல்லது முந்தைய ஒரு நாள்அல்லது பிந்தைய ஒரு நாள் சேர்த்து வைக்க வேண்டுமா? என்று ஐயம் பின்வரும் நபிமொழிகளை பார்க்கும் போது எழலாம்.

சில உளவியல் உண்மைகள்!


1. அதிகம் சிரிப்பவர்கள்..... தனிமையில் வாடுபவர்கள்..
2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள்..
3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்..
4. அழுகையை அடக்குபவர்கள்... மனதால் பலவீனமானவர்கள்..
5. முரட்டுத்தனமாக உண்பவர்கள்..!!! மன அழுத்தத்தில் இருப்பவர்கள்..
6. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள்!!!! அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள்..
7. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள்... அன்புக்காக ஏங்குபவர்கள்...!!!!

மனைவிக்காக துஆ செய்வதும் ஒரு சுன்னத்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு
ஒரு தடவை அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள், அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் தமக்காகத் துஆ செய்யுமாறு கேட்டுக் கொண்டார்களாம். நபியவர்களும் இவ்வாறு துஆ கேட்டார்களாம்:
“யா அல்லாஹ்! ஆயிஷாவின் கடந்த காலப் பாவங்களையும், அவருடைய எதிர்காலப் பாவங்களையும் நீ மன்னிப்பாயாக!”
ஆயிஷா அவர்களுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை! முகம் மலரச் சிரித்து விட்டார்கள்!
“எனது இந்த துஆ உனக்கு மகிழ்ச்சி அளிக்கிறதா?” என்றார்கள் அண்ணலார் அவர்கள். “நான் மகிழ்ச்சி அடையாமல் எப்படி இருக்க முடியும்?” என்று பதில் அளித்தார்கள் ஆயிஷா அவர்கள்
“அல்லாஹ்வின் மீது ஆணையாக, இதே துஆவைத்தான் எனது (உம்மத்) சமூகத்துக்காக நான் ஒவ்வொரு தொழுகையிலும் கேட்டுக் கொண்டிருக்கின்றேன் என்றார்களாம் அண்ணலார் அவர்கள்! (நூல்: இப்னு ஹிப்பான்)
மனைவி, கணவனிடம் துஆ செய்யச் சொல்லிக் கேட்பதுவும், மனைவிக்காக கணவன் துஆ செய்வதும் சுன்னத் தான் என்பதை நினைவில் கொள்வோம்!

Tuesday, August 22, 2017

ஸஜ்தாவின் போது ஓத வேண்டிய துஆ

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு
குர்ஆனில் ஸஜ்தா வசனத்தை ஓதும்போது செய்யும் ஸஜ்தாவின் போது ஓத வேண்டிய துஆ
سَجَدَ وَجْهِى لِلَّذِى خَلَقَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ تَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ
ஸஜத வஜ்ஹிய லில்லதீ கலகஹு, வஷக்க ஸம்அஹு, வபசரஹு பிஹவ்லிஹி வகுவ்வதிஹி ஃப தபாரகல்லாஹு அஹ்ஸனுல் காலிகீன்.
பொருள் : எனது முகம், அதனை படைத்து, தனது ஆற்றலாலும் சக்தியாலும் அதன் காது-கண் புலன்களுக்கு வழி அமைத்துக் கொடுத்து இறைவனுக்கு ஸஜ்தா செய்துவிட்டது. படைப்பாளர்களில் மிகச் சிறந்தவனாகிய அல்லாஹ் பாக்கியம் உடையவன்.
ஆதாரம் : திர்மிதி, அஹ்மத்

திருக்குர்ஆன் கூறும் அறிவியல் கண்டு பிடிப்புகள் - பெருவெடிப்புக் கொள்கை(Big-Bang Theory)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு
திருக்குர்ஆன் கூறும் அறிவியல் கண்டு பிடிப்புகள்
பெருவெடிப்புக் கொள்கை(Big-Bang Theory)
இந்த உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்பது பற்றி பலவிதமான கட்டுக் கதைகளைத் தான் முந்திய நூல்கள் கூறுகின்றன...

ஏன் இன்றும்கூட பலபேர் உலகம் எவ்வாறு உருவானது என்பதில் குழப்பமாகவும் சந்தேகமாகவும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
ஆனால் எந்த குழப்பமும் இல்லாமல் மிக தெளிவாக திருக்குர்ஆன் மட்டுமே கூறுகிறது.

Monday, August 21, 2017

தொழுகையில் மறதிக்கான ஸஜ்தா

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு
1. தொழுகையில் ரக்அத்தின் எண்ணிக்கையை குறைத்து தொழுதுவிட்டால், விடுபட்ட ரக்அத்தை மட்டும் தொழுதுவிட்டு ஸலாம் கூறி தொழுகையை முடிக்க வேண்டும். பின்பு அதே நிலையிருந்து கொண்டு "அல்லாஹு அக்பர்" என்று சொல்லி ஸஜ்தா செய்ய வேண்டும். பின்பு இருப்புக்கு வந்து மீண்டும் ஸஜ்தா செய்து விட்டு ஸலாம் கூறி முடிப்பது போதுமானது.

482. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மாலை நேரத் தொழுகைகளில் ஒன்றை இரண்டு ரக்அத்களாக எங்களுக்குத் தொழுகை நடத்திவிட்டு ஸலாம் கொடுத்துவிட்டார்கள். பள்ளியில் நாட்டப்பட்டுள்ள மரத்தினருகே சென்று கோபமுற்றவர்களைப் போல் அதில் சாய்ந்தார்கள். தங்களின் வலது கரத்தை இடது கரத்தின் மேல் வைத்துக் கை விரல்களைக் கோர்த்தார்கள். தம் வலது கன்னத்தை இடக்கையின் மீது வைத்தார்கள்.

நல்ல நண்பர்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு
யார் நல்லவர்களை நண்பர்களாக ஆக்கிக் கொண்டார்களோ அவர்கள் மறுமை நாளில் கவலைப்பட மாட்டார்கள் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ قَالَ

قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ لَأُنَاسًا مَا هُمْ بِأَنْبِيَاءَ وَلَا شُهَدَاءَ يَغْبِطُهُمْ الْأَنْبِيَاءُ وَالشُّهَدَاءُ يَوْمَ الْقِيَامَةِ بِمَكَانِهِمْ مِنْ اللَّهِ تَعَالَى قَالُوا يَا رَسُولَ اللَّهِ تُخْبِرُنَا مَنْ هُمْ قَالَ هُمْ قَوْمٌ تَحَابُّوا بِرُوحِ اللَّهِ عَلَى غَيْرِ أَرْحَامٍ بَيْنَهُمْ وَلَا أَمْوَالٍ يَتَعَاطَوْنَهَا فَوَاللَّهِ إِنَّ وُجُوهَهُمْ لَنُورٌ وَإِنَّهُمْ عَلَى نُورٍ لَا يَخَافُونَ إِذَا خَافَ النَّاسُ وَلَا يَحْزَنُونَ إِذَا حَزِنَ النَّاسُ وَقَرَأَ هَذِهِ الْآيَةَ
{ أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ }

அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் நபிமார்களும் அல்ல. இறைவனின் பாதையில் உயிர் நீத்தவர்களும் அல்ல. இவர்களுக்கு அல்லாஹ் விடத்தில் கிடைக்கும் அந்தஸ்தைப் பார்த்து நபிமார்களும் தியாகிகளும் பொறாமைப்படுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். சஹாபாக்கள், அவர்கள் யார்? என எங்களுக்குக் கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் தங்களுக்கிடையே இரத்த உறவிற்காகவோ, கொடுத்து வாங்கிக் கொள்ளும் செல்வங்களுக்காகவோ அல்லாமல் அல்லாஹ்விற்காக ஒருவரையொருவர் நேசித்துக் கொண்டவர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயமாக அவர்களுடைய முகங்கள் ஒளியாக இருக்கும். அவர்கள் ஒளியின் மீது இருப்பார்கள். மக்கள் அஞ்சும் போது அவர்கள் அஞ்சமாட்டார்கள். மக்கள் கவலைப்படும் போது அவர்கள் கவலைப்பட மாட்டார்கள் என்று கூறி விட்டு அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்த பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்ற வசனத்தை படித்துக் காட்டினார்கள்.

Sunday, August 20, 2017

குர்ஆன் மனிதர்களுக்கு போதிப்பது என்ன? சிறு தொகுப்பு!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு
1. அல்லாஹ்வுக்கு எதையும்/எவரையும் இணையாக்க கூடாது
குர்ஆன் 17:23
2. ஒப்பந்தங்களை முறித்து மாறு செய்ய கூடாது.
*குர்ஆன் 2:27,16:92*
3. இரத்த உறவுகளை முறிக்க கூடாது. சேர்ந்து வாழ வேண்டும்.
*குர்ஆன் 2:27,47:22*
4. உண்மையை பொய்யுடன் கலக்க கூடாது. உண்மையை மறைக்கவும் கூடாது.
*குர்ஆன் 2:42*
5. நீங்கள் செய்யாமல், ஊருக்கு மட்டும் உபதேசம் செய்ய கூடாது.
*குர்ஆன் 2:44 61:2*

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்



1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்.
2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான்.
3. நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை ‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர்.
4. நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் காமராஜர் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். அதுபோல திருமணம் செய்தால் அறிவியல் வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது என்று திருமணம் செய்ய மறுத்தார் அப்துல் கலாம்.
5. இவரது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் காந்திய கொள்கைகளை பிரதிபலித்தது.

முதுகுத்தண்டின் வேர்ப்பகுதி அழியாது....இதை அழிக்கவும் முடியாது

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்) சுபஹானல்லாஹ்!! உலகம் பெரும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது.  
நபிமொழியை மெய்ப்பித்தது.
இன்றைய விஞ்ஞானம்!
சொர்க்கம் நரகம் உண்டா..???
மீண்டும் மனிதன் படைக்கப்பட்டு உயிர் கொடுக்கப்பட்டு கேள்விகள் கேட்கப்படுவானா...???
1400...ஆண்டுகளுக்கு முன்பு...முகமது நபி(ஸல்) அவர்களுக்கு யார் சொல்லிக்             கொ டுத்தது. எழுத படிக்கத்தெரியாத முகமது நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம்
இருந்து... தனக்கு செய்தி வருவதாக சொன்னார்கள்.

துஆ - குழந்தை பேறு வேண்டிஓதும் துஆ...

அஸ்ஸலாமு அலைக்கும்  (வரஹ்) 
رَبِّ لاَ تَذَرْنِيْ فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِيْنَ
ரப்பி லா ததர்னீ ஃபர்தன் வ அன்த்த ஃஹைருல் வாரிஸீன்
பொருள் : என் இறைவனே! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே! நீயே வாரிசுரிமை கொள்வோரில் மிக்க மேலானவன் - அல் குர்ஆன் (21:89)
இந்த ஆயத்தை ஒவ்வொரு தொழுகையிலும் அதிக அதிகமாக ஓதுங்கள் அல்லாஹ் பரகத் செய்வானாக ...