Thursday, September 7, 2017

سْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
          அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு...
🗣 கேள்வி : ஸலவாத் எப்படி கூறுவது ?
{நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் எவ்வாறு கூறுவது என்பது அறிவோம் ஆனால் நாம் ஒவ்வொரு தடவையும் நபி (ஸல்) அவர்கள் பெயர் செவியுறும் போது நாம் எவ்வாறு பதில்கூறுவது! முழு ஸலவாத்தைக்கூற வேண்டுமா? அல்லது வெறுமனே ஸல்லலாஹூஅலைஹிவஸல்லம் என்று கூறினால் போதுமா ?}

 பதில் :
 தொழுகையில் அத்தஹிய்யாத் இருப்பில் ஸலவாத் ஓதும் போது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்தைத் தான் ஓத வேண்டும். மற்ற நேரங்களில் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றோ அலைஹிஸ் ஸலாது வஸ்ஸலாம் என்றோ கூறிக் கொள்ளலாம்.
பின்வரும் ஹதீஸ் இதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது.

ஐந்து விசயத்தை தினமும் செய்யாமல் உறங்கவேண்டாம்

سْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
          அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு...
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது மருமகன் ஹழ்ரத் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு உபதேசம் செய்தார்கள்.
“அலியே! ஐந்து விசயத்தை தினமும் செய்யாமல் உறங்கவேண்டாம்.
1. முழு குர்ஆனை ஓதாமல் உறங்காதே.
2. தினமும் 4000 தீனார்கள் தர்மம் செய்யாமல் உறங்காதே.
3. கஃபதுல்லாஹ்வை தவாபு செய்யாமல் உறங்காதே.

Wednesday, September 6, 2017

வீரமங்கையின் வீரவரலாறு - **அஸ்மா பின்த்தி அபீபக்கர் ரலியல்லாஹூ அன்ஹா**

سْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
          அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு...

அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஆருயிர் தோழர்  அபூபக்கர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின் மூத்த மகளும், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் வாழும்போது சுவர்க்கத்தின் 
நற்செய்தி சொல்லப்பட்டவர்களில் ஒருவரான ஜுபைர் இப்னுல் அவ்வாம் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின் மனைவியும், வீர தியாகி அப்துல்லாஹ் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின் அன்னையுமான மரியாதைக்குரிய அஸ்மா ரலியல்லாஹூ அன்ஹா அவர்கள் தான்...!!

Tuesday, September 5, 2017

விபச்சாரத்திற்கு ஈட்டு தொகை கிடையாது. தண்டனையே சட்டம்.

سْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
          அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு...
7260. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம்  இருந்தபோது கிராமவாசிகளில் ஒருவர் எழுந்து நின்று, “இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் சட்டப்படி எனக்குத் தீர்ப்பளியுங்கள்“ என்றார். உடனே அவரின் எதிரி (பிரதிவாதி) எழுந்து, “இவர் சொல்வது உண்மையே; இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் சட்டப்படியே அவருக்குத் தீர்ப்பளியுங்கள். எனக்கு (என் தரப்பு நியாயத்தை எடுத்துச்சொல்ல) அனுமதியளியுங்கள்“ என்றார். 

இஸ்லாம் கூறுகின்ற முறையில் உயிரினங்களை அறுக்கும்போது அவற்றுக்கு எந்த வேதனையும் தெரியாது என்று சோதனை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

سْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

                      அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு...
உயிரினங்களை உணவாகக் கொள்ளும் முஸ்லிமல்லாதவர்கள் அவற்றைத் தண்ணீரில் மூழ்கடித்தோ, அல்லது கழுத்தை நெரித்தோ, தடியால் அடித்தோ, ஈட்டியால் குத்தியோ இன்னும் இது போன்ற வழிகளிலோ பிராணிகளின் உயிரைப் போக்குகின்றனர்.

ஆனால் இந்த வழிமுறைகளில் பிராணிகளைக் கொல்வதை இஸ்லாம் கண்டிக்கிறது. பிராணிகளின் குரல்வளையில் கூர்மையான கத்தி மூலம் அறுத்துத்தான் பிராணிகளைக் கொல்ல வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.
குரல்வளை மிக விரைவாக அறுக்கப்படுவதால் மூளையுடன் உள்ள தொடர்பு கொண்ட உணர்ச்சி நரம்பு அறுந்து போகின்றது. இதனால் அப்பிராணிகளால் வலியை உணர முடியாது. இரத்தத்தை வெளியேற்றுவதற்காக உடல் துடிக்கிறது; வேதனையால் அல்ல என்பதை சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Monday, September 4, 2017

மரணத்திற்கு நிகரான துன்பத்தின் போது

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபாராகாத்துஹூ....
மரணத்திற்கு நிகரான துன்பத்தின் போது:
اَللّهُمَّ أَحْيِنِيْ مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِيْ وَتَوَفَّنِيْ إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لِيْ
அல்லாஹும்ம அஹ்யினீ மா கான(த்)தில் ஹயா(த்)து கைரன்லீ வதவப்ஃபனீ இதா கான(த்)தில் வஃபா(த்)து கைரன் லீ..

பொருள் : இறைவா! வாழ்வது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை வாழச் செய்! மரணம் எனக்கு நல்லதாக இருந்தால் மரணிக்கச் செய்!    ஆதாரம்: புகாரி.
நன்றி : உமர் முக்தர் - துஆக்களின் தொகுப்பு