Friday, July 7, 2017

நற்குணத்தின் தாயகம் நபிகள் நாயகம் (ஸல்) வாழ்வில் நடந்த ஓர் நிகழ்வு

ஒரு நாள் காலைப் பொழுது, ஒரு பெரிய மூட்டையை சுமந்து கொண்டு ஒரு வயது முதிர்ந்த மூதாட்டி மக்கா நகரின் ஓரமாக தள்ளாடித் தள்ளாடி வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே நபிகள் நாயகம் (ஸல்) வந்தார்கள்.
பிறருக்கு உதவும் உள்ளம் கொண்ட நாயகம் (ஸல்) அவர்கள் வழமை போல அம்மூதாட்டியை அணுகி, “தாயே..! நீங்கள் விரும்பினால் உங்கள் துணி மூட்டைகளை என்னிடம் தாருங்கள். நான் அதை உங்களுக்காக சுமந்து வருகிறேன்” என்று சொன்னார்கள்.

இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலி

இஸ்லாமிய பேரரசின் ஜனாதிபதி உமர் ரலி யிடம் ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது
கொலை செய்யப்பட்டவரின் மகன், பழிக்கு பழி வாங்குவதில் தீவிரமாக இருக்கிறார்.
குற்றம் சாட்டப்பட்டவர், தனக்கு இரண்டு நாள் அவகாசம் வேண்டும் "நான் ஒருவருக்கு காசு கொடுக்க வேண்டியுள்ளது. அதை திருப்பிக்கொடுத்து விட்டு, என் மகனை என் குடும்பத்தில் யாராவது ஒரு பொறுப்பானவரிடம் ஒப்படைத்து விட்டு வருகிறேன்" என வேண்டுதல் வைக்கிறார்...
அதற்கு குற்றம் சாட்டியவர், "இல்லை இவர் நம்மை ஏமாற்றி விட்டு தப்பிக்க பார்க்கிறார்" என்கிறார்...

"தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை".



மதுரை மங்கம்மாள் சத்திரத்தில் தங்கிய முதல்வரின் அன்னை சிவகாமி அம்மாள்
ஒரு நாள் மதுரை ராணி மங்கம்மாள் சத்திரத்தில் ஒரு வயதான பெரியம்மாள் சாதாரண வெள்ளைச் சேலையைக் கட்டிக் கொண்டு சத்திரத்தின் குழாயைத் திறந்து முகம், கை,கால்களைக் கழுவிக் கொண்டிருந்தார். அந்த அம்மையார் கழுத்திலே தங்கச் சங்கிலிகள் தொங்கிக் கொண்டிருக்கவில்லை.காதில் மட்டும் ஏதோ ஒரு வகையான பழங்கால நகையொன்று தொங்கிக் கொண்டிருந்தது.அழுக்கடைந்த கோலத்தில் தம் மரியாதையைக் காக்க ஆடம்பரமில்லாமல் அடக்க ஒடுக்கமாகத் தென்பட்டார்கள் அந்த வயதான பெரியம்மாள்.
அப்போது அங்கு வந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், அந்த அம்மாளிடம் விரைந்து சென்று, "அம்மா, எப்போது வந்தீர்கள்? எங்கே தங்கி இருக்கின்றீர்கள்? எங்கே போகவேண்டும்?" என்ற கேள்விகளை மிக ஆர்வத்தோடு கேட்டார்.

Thursday, July 6, 2017

தந்தை தன் மகனுக்கு நல்லொழுக்கம் கற்றுக் கொடுப்பதே

நபி (ஸல்) கூறினார்கள் இரண்டு கை நிறைய பொருட்களை தினமும் தர்மம் செய்வதை விட ஒரு தந்தை தன் மகனுக்கு #நல்லொழுக்கம் கற்றுக் கொடுப்பதே அல்லாஹ்விடம் சிறந்தது (திர்மிதி)
ஆயிரம் அறிவுரைகளை விட ஆயிரக்கணக்கான வகுப்பறைப் பாடங்களை விட நம் #செயல்கள் #வலிமையானவை

Wednesday, July 5, 2017

ஸ்டெதஸ்கோப்

நோய்களுக்கு எதிரான போராட்டத்தில் மருந்து மாத்திரைகளையும் தாண்டி, ஸ்டெதஸ்கோப்பின் கண்டுபிடிப்பு மிக முக்கியமான திருப்புமுனை!
என்ன பிரச்னை என்று புரிந்துகொள்ள முடிந்தாலே பாதிக்கிணறு தாண்டிய மாதிரிதான். ஸ்டெதஸ்கோப் விஷயத்தில் மருத்துவர்களுக்குப் பெரிதும் உதவி செய்தது இந்த பாதிக்கிணறு ஃபார்முலாதான்.
இதயத்துடிப்பு, நுரையீரலின் அசைவுகள் போன்றவை ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் காரணிகளாக இருப்பதைப் புரிந்துகொண்ட மருத்துவர்கள், நோயாளியின் மார்புப் பகுதியில் காது கொடுத்துக் கேட்டு சிகிச்சை அளிக்க ஆரம்பித்தார்கள்.

பொது குளியலறையில் ( குளிப்பது ) என் சமுதாயத்து பெண்களின் மீது ஹராமாகும்

*ஆயிஷா ( ரலி ) அவர்கள் கூறினார்கள் நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள். பொது குளியலறையில்         ( குளிப்பது ) என் சமுதாயத்து பெண்களின் மீது ஹராமாகும் 
அறிவிப்பவர் ஆயிஷா ( ரலி ) அவர்கள் நூல் : ஹாகிம் : 7784*
*உம்முதர்தா அவர்கள் கூறினார்கள் நான் பொது குளியலறையிலிருந்து வெளியே வந்தேன்..அப்போது என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சந்தித்து நீ எங்கிருந்து வருகின்றாய் ? என கேட்டார்கள். பொது குளியலறையிலிந்து என்று சொன்னேன்...அப்போது அவர்கள் எவனது கையில் என் உயிர் உள்ளதோ அவன் மீது சத்தியமாக ! எந்த பெண் தன் ஆடைகளை தனது தாய்மார்களில் ஒருவரது வீடு அல்லாததில் களைகின்றாரோ அவள் தமக்கும் ரஹ்மானுக்கும் இடையேயுள்ள ஒவ்வொரு திறையையும் கிழித்து விட்டாள் என்று கூறினார்கள்.
 நூல் : அஹ்மத் : 27086*

கர்ம வீரர் காமராஜர்

காமராஜர் அவர்கள் முதல்வராக இருந்தபொழுது, ஒருமுறைஎண்ணை தேய்த்துக் கொண்டு, குற்றால அருவிக்குச்சென்றாராம். அருவியில் யாரும் குளித்துக் கொண்டிருக்கவில்லையாம். மக்கள் கூட்டம் ஒரு ஓரமாக காவலர்களால் தடுத்தி நிற்க வைக்கப்பட்டிருந்தனர்.
ஏன்யா அருவி காலியா இருக்கு? சுற்றுலாப் பயணிகள் யாரும் குளிக்கலையா?என்று 
கேட்டிருக்கிறார்...
இல்லைங்கய்யா,, முக்கியஸ்தர்கள் வந்தால்,யாரையும் அருவியில் அனுமதிப்பதில்லை, இது வெள்ளைக்காரன் காலத்திலிருந்து வரும் வழக்கம் என்றனராம் அதிகாரிகள்.

உடனே காமராஜர் கோபம் கொண்டு, அது வெள்ளைக்காரன் ஆட்சி. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஆட்சியைய்யா, மக்களுக்காகத்தான் நாம் இருக்கிறோமே ஒழிய நமக்காக மக்கள் இல்லை. உடனே அருவியில் குளிக்க மக்களை அனுமதிங்கய்யா என்று சொல்லிவிட்டு, மக்களோடு மக்களாகக் குளித்து மகிழ்ந்திருக்கிறார்.
அதனால்தான் அவர் இன்றைக்கும் கர்ம வீரர் காமராஜர் என்று உள்ளன்போடு மக்களால் அழைக்கப்படுகிறார்.

நீருக்குள் பிரசவம் நடப்பது தாய்க்கும் சேய்க்கும் நல்லது

நீருக்குள் பிரசவம் நடப்பது தாய்க்கும் பிள்ளைக்கும் சிறந்தது என்று 1400 ஆண்டுகளுக்கு முன்பே இறைவன் தனது திருமறையில் கூறியிருப்பது திருகுர்ஆன் இறைவேதம் என்பதற்கு மாபெரும் சான்றாகும்.
"பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா?'' என்று அவர் கூறினார்.
கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்'' என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார்".  திருக்குர்ஆன் 19:23.24

Monday, July 3, 2017

சூராகளும் அதன் சிறப்புகளும்

சூரா ஹூத்:

سنن الدارمي (4/ 2142)

عَنْ كَعْبٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اقْرَءُوا سُورَةَ هُودٍ يَوْمَ الْجُمُعَةِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் வெள்ளிக் கிழமையில் சூரா ஹூதை ஓதிக்கொள்ளுங்கள் .
இந்த ஹதீஸ் ஸுனன் தாரிமியில் பதியப்பட்டுள்ளது, 

மஸ்ஜீதுன்னபவியின் கதவுகள் எப்போது திறக்கும்?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 
கண்மணி நாயகம் (ஸல்) அவர்களும்,  ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களும் மஸ்ஜீதுன்னபவியில் தொழுது கொண்டிருக்கையில் மழை வந்த காரணத்தால் அந்த பேரித்தம் பழ மரத்தின் ஓலையில் மேய்ந்த கூரையில் ஓழிகிய தண்ணிரில் பள்ளிவாசல் சேரும் சகதியுமாக ஆகிவிட்டது. அப்போழுது ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் அல்லாஹவுடைய தூதரிடத்தில்... யா ரஸூலுல்லாஹ்! இந்த ஈச்சை மரத்தின் ஓலைகளை மாற்ற வேண்டும். யா ரஸூலுல்லாஹ்! பாருங்கள பள்ளியினுல் முழூவதும் தண்ணிராக இருக்கின்றது என்றார்கள்..(அன்று மிக சிறிய பள்ளிவாசல் தான் மஸ்ஜீதுன்னபவி) கண்மணி நாயகம் (ஸல்)  அவர்கள் அப்படியே செய்வோம் உமரே! என்று கூறிவிட்டு.. உமரே! உனக்கு ஒன்று தெரியுமா?.. ஒரு காலம வரும் அன்று இந்த பள்ளிவாசல் இரவு தொழுகையான (தஹஜ்ஜுத்) தொழுகைகாக இதன் கதவுகள் எப்போது திறக்கும்? என்று காத்திருப்பார்கள் அப்போழுது நீ உயிரோடு இருந்தால் அதை காணலாம் என்றார்கள்.. ஆனால் அதை காண ஹஜ்ரத் உமர் (ரலி) உயிரோடு இல்லை, உயரினும் மேலான கண்மணி நாயகம்(ஸல்) அவர்கள் கூறிய முன்னரிவிப்பை காண வாய்பளித்து இந்த பொற்காலத்தில் வாழச்செய்த அல்லாஹுவிற்கே எல்லா புகழும்... 
அல்ஹம்துலில்லாஹ்!!! அல்ஹம்துலில்லாஹ்!! அல்ஹம்துலில்லாஹ்!,