Monday, June 5, 2017

கண்ணியமிகு காயிதே மில்லத்

காயிதேமில்லத் மரணித்தபோது புதுக்கல்லூரி வளாகத்தில் அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கே இறுதி மரியாதை செலுத்த வந்த தந்தைப் பெரியார், 'தம்பி போயிட்டீங்களா..' என குலுங்கினார். 'நான் போயி இந்தத் தம்பி வாழ்ந்திருக்கக்கூடாதா' என விசும்பினார். 'இனி இந்தச் சமுதாயத்தை யார் காப்பாற்றுவார்' என குமுறினார். 'முஸ்லிம் சமுதாயத்திற்கு இவர் போல ஒரு தலைவர் கிடைக்கமாட்டார்' என கருத்துரைத்தார். 
பெரியார் அப்படிச் சொல்லும் அளவுக்கு காயிதே மில்லத் அப்படி என்ன செய்தார்?
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ் 
சுப்ஹானல்லாஹ்! மெய் சிலிர்த்த சம்பவம் ......

ஒரு சமயம் ஹஸ்ரத் பாத்திமா (ரலி) அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் மூன்று நாட்கள்வரை தொடர்ந்து எதுவும் சாப்பிடாமல் பட்டினியாக இருந்தார்கள்.
குடும்பத்தின் பசி, பட்டினி பொறுக்க முடியாமல் தங்களின் பிரியமான புதுத்துணியொன்றை தனது அருமைக் கணவர் ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களிடம் கொடுத்து இத்துணியை விற்றுப் பணம் கொண்டு வாருங்கள் என்று சொன்னார்கள்.

Sunday, June 4, 2017

சதகாவின் சிறப்பு - எகிப்தில் நடந்த உண்மை சம்பவம்

எகிப்தியருக்கு நடந்த உண்மை சம்பவம்:
எகிப்தில் ஒரு மனிதர் இருந்தார். அவர் இருதய வலி காரணமாக வைத்தியரிடம் சென்ற வேளை, 'உங்களுடைய இதயத்துக்கு செல்லும் இரத்த குழாய்களில் அதிகமான அடைப்புகள் காணப்படுகின்றன" என்று வைத்தியர் கூறினார். அதற்கு அந்த மனிதர், 'உங்களுக்கு அதை ஆபரேஷன் பண்ண முடியுமா" என்று கேட்டார். அதற்கு வைத்தியர், 'இதனை ஆபரேஷன் பண்ணுவது மிகவும் கடினமாகும். இன்னும் அது மிகவும் ஆபத்தானதுமாகும். உங்களுக்கு இருக்கும் சிறந்த தீர்வு ஜெர்மன் நாட்டுக்கு சென்று அங்கே இந்த ஆபரேஷனை செய்வதாகும்' என்று கூறினார்.

அகழ் தோண்டுகையில் வெளிப்பட்ட நபித்துவத்தின் அத்தாட்சிகள்


இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அகழ்ப்போரின் போது அகழ் வெட்டும் பணி நடக்கும் இடத்தை நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது முஹாஜிர்களும் அன்சாரிகளும் கடும் குளிரான காலை நேரத்தில் அகழ் தோண்டிக் கொண்டிருந்தார்கள். முஹாஜிர் என்றால் மக்காவில் இருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றவர்கள். அன்ஸாரி என்றால் உதவியாளர்கள் என்பது அர்த்தமாகும். மக்காவிலிருந்து மதீனா வந்தவர்களுக்காக அர்ப்பணிப்புக்களைச் செய்த மதீனாவாசிகளே அன்ஸாரிகள். அவர்களுக்கு ஏற்பட்டிருந்த களைப்பையும் பசியையும் கண்டபோது நபி(ஸல்) அவர்களுக்காகப் பிரார்த்தித்தார்கள். மக்களோடு சேர்ந்து நபிகளாரும் அகழ் தோண்டலானார்கள்.