Monday, May 8, 2017

இந்திய பிரதமர்க்கு வழிகாட்டிய பச்சை தமிழர் காமராஜர்

இந்திய பிரதமர்க்கு வழிகாட்டிய பச்சை தமிழர் காமராஜர்
பொற்காலம் அன்று 
பிரதமர் நேருக்கு என்னென்ன சிக்கல்கள், தொந்தரவுகள் வந்தாலும் அதைத் தீரத்தில் காமராஜர் முதல் மனிதராக இருந்தார்.
எதேச்சையாகக் காரிய கமிட்டி கூட்டத்துக்காக டெல்லி சென்ற அவர் , நேரு முகத்தை பார்த்த போது பெரும் சோர்வு தென்பட்டதை கவனித்து " உடம்புக்கு சரியில்லையா ?" என்றார். காமராஜரின் கேள்விக்கு பதில் சொல்லும் மனநிலையில் இல்லாத நேரு " இல்ல சரியாக தூங்காததால் ஏற்ப்பட்ட சோர்வு " என்றார். ஆனால், காமராஜர் விடாமல் கேட்டவே வேறு வழி இன்றி நேரு பேசினார். 

அலறிய காமராஜர் அய்யா...

நிகழ்ச்சியோ, பொதுகூட்டமோ. நடந்தால் மக்களோ, தொண்டர்களோ. காலணா அரையணா, ஒரு அணா என்று கொடுப்பார்கள். அதை வாங்கி பையில் போட்டுக்கொள்வார் காமராசர்.
சென்னை வந்ததும் பார்ப்பார். ஐந்து ரூபாய், எட்டு ரூபாய் என்று சேர்ந்திருக்கும். அப்படியே கொண்டு போய் தன் நண்பரான ‘இந்து’ பத்திரிகை முதலாளி கஸ்தூரி ரங்கனிடம் கொடுத்து விடுவார். நீண்ட காலம் அப்படி நீடித்தது.