Saturday, November 1, 2014

‪#‎இல்லவே‬ " இல்லாத" நாடுகள்

1) "திரையரங்குகள்" இல்லாத நாடு - ‪#‎பூட்டான்‬
2) "தினசரி பத்திரிகைகள் " இல்லாத நாடு - ‪#‎காம்பியா‬

ஒளூவின் அவசியம்

தூய்மை ஈமானில் பாதி நிலையாகும். தூய்மை அற்றவனின் தொழுகை இறைவனால் 
ஏற்றுக்கொள்ளப்படாது. திருக்குர்ஆனில் அல்லாஹ் சுப்ஹானஹுதஆலா இவ்வாறு குறிப்பிட்டுள்ளான்.

ஹதீஸ்

ஒரு கிராமவாசி நபி (ஸல்)
அவர்களிடம் வந்து கேட்டார்கள்.
யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில
கேள்விகள் கேட்கலாமா ? என்றவுடன்
நபியவர்கள் ‘கேளுங்கள்’ என்றார்கள்.
1.நான் பணக்காரனாக என்ன செய்ய
வேண்டும் ?
· நீங்கள் போதுமென்ற
தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள்.
பணக்கார்ராகிவிடுவீர்கள்.
2. மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி ?
· தக்வாவை கடைப்பிடித்துக்
கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள்.
3. நான் கண்ணியமுடையவனாக வாழ
வழி என்ன ?
· ஜனங்களிடம்
கையேந்துவதை விட்டும் தவிர்த்துக்
கொள்ளுங்கள்
4. நான் ஒரு நல்ல மனிதராக ஆக
விரும்புகிறேன்.
·
ஜனங்களுக்கு உங்களை கொண்டு பிரயோஜனம்
ஏற்படட்டும். நல்ல மனிதராக
ஆகி விடுவீர்கள்.
5. நான் நீதியுள்ளவனாக
விரும்புகிறேன் ?
· நீங்கள் எதை விரும்புகிறீர்களோ,
அதை மற்றவருக்கும் விரும்புங்கள்
6. நான் சக்தியுடையவனாக ஆக என்ன
வழி ?
· அல்லாஹ்வின்
மீது நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்
7. அல்லாஹ்வுடைய தர்பாரில்
விசேஷ அந்தஸ்து கிடைக்க
விரும்புகிறேன் ?
· அதிகமாக திக்ரு ( தியானம் )
செய்யுங்கள்
8. ரிஸ்கில் அபிவிருத்தி ஏற்பட என்ன
வழி ?
· எப்பொழுதும் நிரந்தரமாக ஒழுவுடன்
இருங்கள்
9. துஆ அங்கீகரிக்கப்பட என்ன வழி ?
· ஹராமான
பொருளாதாரத்தை உண்பதை விட்டும்
தவிர்த்துக் கொள்ளுங்கள்.
10. முழுமையான ஈமானுடையவராக
என்ன வழி ?
· நற்குணமுடையவராக
ஆகி விடுங்கள்
11. கியாமத்தில் அல்லாஹ்விடன்
பாவமற்றவனாக பரிசுத்த நிலையில்
சந்திக்க விரும்புகிறேன் ?
· குளிப்பு கடமையானவுடன்
குளித்து விடுங்கள்
12. பாவங்கள் குறைய வழி என்ன ?
· அதிகமாக அல்லாஹ்விடன் பாவ
மன்னிப்புத் தேடுங்கள்
13. கியாமத் நாளில் எனக்கு பிரகாசம்
ஏற்பட வழி என்ன ?
· அநீதம் செய்வதை விட்டு விடுங்கள்.
பிரகாசம் கிடைக்கும்
14. அல்லாஹ் என்
குறைகளை மறைக்க வழி என்ன ?
· பிறருடைய குறைகளை இவ்வுலகில்
மறைத்து விடுங்கள்
15. உலகத்தில்
இழிவடைவதை விட்டும்
பாதுகாப்பு எதில் உள்ளது ?
· விபச்சாரம் செய்வதை விட்டும்
தவிர்ந்து கொள்ளுங்கள்.
இழிவடையாமல் பாதுகாக்கப்படுவீர்
16. அல்லாஹ், ரசூல் உடைய
பிரியனாக வழி என்ன ?
· அல்லாஹ், ரசூல் பிரியப்படக்கூடி
யவர்களை பிரியபடுங்கள்
17. அல்லாஹ்,
ரசூலுக்கு வழிப்பட்டவனாக ஆக
வழி என்ன ?
· (F) பர்ளை பேணுதலாக
கடைப்பிடியுங்கள்
18. நான் இறைத் தொடர்புடையவனாக
ஆக வழி என்ன ?
· அல்லாஹ்வை பார்ப்பதாக
என்ணி வணங்குங்கள் ( அல்லது )
அல்லாஹ் உங்களை பார்ப்பதாக
எண்ணி வணங்குங்கள்
19. பாவத்தை விட்டும் மன்னிப்பளிக்கக்
கூடிய வஸ்த்துக்கள் என்ன ?
· கண்ணீர், பலஹீனம், நோய்
20. நரகத்தின் நெருப்பை குளிர
வைக்கக் கூடியது எது ?
· இவ்வுலகில் ஏற்படும் முஸிபத்தின்
மீது பொறுமையாக இருப்பது
21. அல்லாஹ்வுடைய
கோபத்தை எது குளிர வைக்கும் ?
· மறைவான நிலையில் தர்மம்
செய்வது – சொந்த
பந்தங்களை ஆதரிப்பது
22. எல்லாவற்றிலும் மிகப்பெரிய
தீமை எது ?
· கெட்ட குணம் – கஞ்சத்தனம்
23. எல்லாவற்றிலும் மிகப்பெரிய
நன்மை எது ?
· நற்குணம் – பொறுமை – பணிவு
24. அல்லாஹ்வுடைய
கோபத்தை விட்டும் தவிர்த்துக்
கொள்ள வழி என்ன ?
· மனிதர்களிடம்
கோபப்படுவதை விட்டு விடுங்கள்
( ஆதாரம் : முஸ்னது அஹ்மது –
கன்ஸுல் உம்மால் )

Friday, October 31, 2014

ஹதீஸ்-கப்ர் ஸியாரத்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸியாரத் செய்துள்ளார்கள்.

ஹதீஸ்-இறந்துபோனவரைப் பின்தொடர்ந்து மூன்று

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்கள் கூறினார்கள்:
இறந்துபோனவரைப் பின்தொடர்ந்து மூன்று பொருட்கள் செல்கின்றன. அவற்றில் இரண்டு திரும்பிவிடுகின்றன; ஒன்று மட்டுமே அவருடன் தங்கிவிடுகிறது. அவரை அவருடைய குடும்பமும் செல்வமும் அவர் செய்த செயல்களும் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) அவருடைய குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவருடைய செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடுகின்றன.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
முஸ்லிம் :5667.

ஹதீஸ்-ஸலவாத்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
வெள்ளிக்கிழமை நாளில் அதிகம் இல்முகளை (கல்வி) போதனை செய்யுங்கள். இல்முக்கு ஆபத்தை ஏற்படுத்துவது மறதியாகும். எனவே (மறதிக்கு மருந்தான) ஸலவாத்தினை வெள்ளிக்கிழமை நாளில் அதிகம் ஓதுங்கள்.
நூல்: இப்னு பிஷ்குவால், கவ்லுள் பதிஃ
ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

Thursday, October 30, 2014

ஒரு முஸ்லிம் மேல் உள்ள ஐந்து உரிமைகள்

முஸ்லிம்களாகிய நமக்கு மற்றவர்கள் மீது குறிப்பிட்ட உரிமைகள் இருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா?  உங்களுக்குத் தெரிந்திருந்தால், அவற்றை உங்கள் தினசரி வாழ்வில் உங்களால் இயன்ற அளவு சிறப்பாக நிறைவேற்றுகிறீர்களா?

ஹதீஸ்-மறுமை நாளின் அடையாளங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு...,
மறுமை நாளின் அடையாளங்கள்
ஆடை அணிந்தும் நிர்வாணம்
ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள் இனி மேல்
தோன்றுவார்கள் என்பதும் நபிமொழியாகும்.
நூல் : முஸ்லிம் 3971, 5098
பெண்களே இவர்களை போல் நீங்களும் சென்றுவிடாதீர்கள் அல்லாஹ் உங்களையும், எங்களையும் பாதுகாக்க வேண்டும் 

ஹதீஸ்-பராமரிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு... 
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) நவின்றார்கள்:
நீங்கள் ஒவ்வொருவரும் பராமரிப்பாளர்கள். உங்கள் பராமரிப்பு பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஒரு ஆண் தனது குடும்பத்தை பராமரிக்க வேண்டியவன். அது பற்றி விசாரிக்கப்படுவான்.
நூல்:புகாரி

ஹதீஸ்-ஆஷூரா நோன்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு... 
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலியல்லாஹு அன்ஹு)                                           ஸஹிஹ் முஸ்லிம் 1976

Wednesday, October 29, 2014

மீன் வளர்ப்பு முறை

குளத்தின் ஆழம் 6 அடி இருக்க வேண்டும். இதில் நன்கு உழவு ஓட்டி, ஏக்கருக்கு 300 கிலோ கல் சுண்ணாம்பு போட்டு, 4 அடி உயரத்துக்கு தண்ணீர் நிறுத்தி, 2 டன் சாணத்தைக் கரைத்துவிட வேண்டும். ஒரு வாரம் கழித்து, ஓர் அங்குலம் அளவுக்கு வளர்ந்த மீன் குஞ்சுகளை, குளத்தில் விடவேண்டும்.

Tuesday, October 28, 2014

தொழுகையின் அவசியம்

இஸ்லாமிய மார்க்கம் ஐந்து காரியங்கள் மீது அமைக்கப்பட்டுள்ளது. அவை: வணக்கத்திற்குறியவன் இறைவன் ஒருவனைத் தவிர எவருமில்லை. முகம்மது நபி صلى الله عليه وسلم அவர்கள் இறைவனின் அடியாரும் தூதருமாவார்கள் என உறுதியாக நம்புவதும், தொழுகையை நிலை நாட்டுவதும், நோன்பு நோற்பதும், ஜகாத் கொடுப்பதும், சக்தி பெற்றவர்கள் ஹஜ் செய்வதுமாகும் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். 

அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ                                      நூல்கள்: புகாரி, முஸ்லிம்

தொழுகை ஓர் அறிமுகம்

உலகில் அல்லாஹ் மனிதனைப் படைத்ததின் நோக்கம்  தனக்கு மட்டும் இருந்து  தனக்கே முற்றிலுமாக அடிபணிய வேண்டும் என்பதற்காவே. அந்த அடிமைத்தன்மை மனிதனிடம் வெளிப்படுவதற்காக சில அமல்களை அவன் அவசியமாக்கியுள்ளான். அந்த அமல்களில் முக்கியமானது தொழுகையாகும்.

Monday, October 27, 2014

கணக்கை எளிதாகச் செய்ய ஓர் இணையதளம்!

கணக்கு என்றாலே பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமில்லை, பலருக்கும் கசப்புதான் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் கணக்குகளை எளிமையாகக் செய்து பார்த்திட உதவ ஓர் இணையதளம் இருக்கிறது.

ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம் தெரியாத உண்மை உபயோகமான தகவல்கள் !!!

வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை.
* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

Sunday, October 26, 2014

சிந்தனை துளிகள்...

* பல தன்மைகள் வாய்ந்த நபர்களின் தொடர்பை விட, சில நல்ல புத்தகங்களின் உறவு நன்மையை அளிக்கும்.
* குழந்தைகளை வளர்க்கும்போது தான், உன் பெற்றோரின் அருமையை உன்னால் உணர முடியும்.

ஹதீஸ்-ஆஷூரா நோன்பு

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அன்னவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு, 'அது கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரிகாரமாகும்' என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலியல்லாஹு அன்ஹு)                            நூல்: முஸ்லிம் (1977)

திருகுரானை தமிழில் வாசிக்கவும், MP3 வடிவில் கேட்கவும்

திருகுரானை தமிழில் வாசிக்கவும், MP3 வடிவில் கேட்கவும்  http://quran.ksu.edu.sa/index.php?l=en#aya=1_1&m=hafs&qaree=husary&trans=ta_tamil

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி உள்பட 11 கல்லூரிகளுக்கு ஒருமைவகை பல்கலைகழக அந்தஸ்து !

நாடெங்கிலும், 45 தன்னாட்சி கல்லூரிகள், ஒருமை வகை பல்கலைக் கழகங்களாகமாற்றப்படுகின்றன. இந்த பட்டியலில், தமிழகத்தை சேர்ந்த, 11 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை மற்றும் பல்கலைக்கழக நிதிக் குழு (யு.ஜி.சி.,) இணைந்து, டில்லியில் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தின. இதில், அரசு உதவி பெறும் கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட, 45 தன்னாட்சி கல்லூரிகள், ஒருமை வகை பல்கலைக் கழகங்களாக தரம் உயர்த்தப் படுவதாக அறிவிக்கப்பட்டது.