Friday, February 27, 2015

பொதுஅறிவு:-

*நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.
*சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.
*பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

Thursday, February 26, 2015

பொது அறிவு தகவல்கள்!-கருவிகளும் பயன்களும்...!

1. ஏரோமீட்டர் (Aerometer)- காற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி.
2. அம்மீட்டர் (Ammeter)- மின்சாரத்தின் அளவீட்டை கணக்கிடுவது.
3. ஆடியோமீட்டர் (Audiometer)- மனிதர்களின் கேட்கும் திறனை கணக்கிடும் கருவி.

பொது அறிவு தகவல்கள் !

* செவாலியர் விருதை உருவாக்கியவர் நெப்போலியன் போனபார்ட்.
* காதல் காட்சியே இல்லாமல் நாடகங்கள் எழுதியவர் பெர்னாட்ஷா.
* மஞ்சள் காமாலை நோயால் இறந்தவர்கள் கண்களைத் தானம் செய்ய முடியாது.

பொது அறிவு தகவல்கள்...!

* முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான்.
* கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறையைக் கண்டறிந்தவர் எட்வர்ட் ஹென்றி.
* மீன் தன் வாழ்நாள் இறுதி வரை வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும்.

அரிய தகவல்கள்...!

1.உங்களுடைய உடம்பில் 900 பென்சில்கள் செய்வதற்கு போதுமான கார்பன் உள்ளது!
2.2011ல் ஜெர்மனியில் பேஸ்புக் 'லைக்' பட்டன் சட்டவிரோதமானதாக அறிவிக்கப்பட்டது!!
3.ரெண்டு இன்ச்சு ஜன்னல் கேப்புல உள்ள வரும் ஈ திறந்திருக்கும் அவ்வளவு பெரிய கதவின் வழியே எப்படி வெளிய போறதுன்னு தெரியாம தடுமாறுமாம்!

ஹதீஸ்-அல்லாஹ்விற்கு மிக விருப்பமான தொழுகை & நோன்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.....
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
"அல்லாஹ்விற்கு மிக விருப்பமான தொழுகை தாவூது (அலை) அவர்களின் தொழுகையாகும். அல்லாஹ்விற்கு மிக விருப்பமான நோன்பு தாவூது (அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் பாதி இரவு வரை தூங்குவார்கள். பிறகு இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம் தொழுவார்கள். பிறகு ஆறில் ஒரு பகுதி நேரம் உறங்குவார்கள். மேலும் ஒரு நாள் நோன்பு வைத்து ஒரு நாள் நோன்பை விட்டுவிடுவார்கள்."
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ் (ரலி)    நூல் : புகாரி - 1131

Monday, February 23, 2015

ஹதீஸ்-காய்ச்சல்

நபி (ஸல்) அவர்கள் காய்ச்சல் கண்டிருந்த ஒரு மனிதரை உடல்நலம் விசாரிக்கச் சென்றார்கள். அப்போது (அவரிடம்), “(காய்ச்சலை) நற்செய்தியாக எடுத்துக்கொள்வீராக! ஏனெனில் அல்லாஹ், ‘அது எனது நெருப்பாகும். பாவம் செய்த என் அடியான்மீது அதை நான் சாட்டிவிடுகிறேன். நரக நெருப்பின் ஒரு பங்காக அவருக்கு அது இருக்கட்டும் என்பதே காரணம்” என்று கூறுகிறான் என்றார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)                                    நூல்: ஜாமிஉத் திர்மிதீ, பாகம்:3 ஹதீஸ் எண்: 2014.

ஹதீஸ்-இஸ்லாத்தில் சிறந்தது எது?

'ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் 'இஸ்லாத்தில் சிறந்தது எது' எனக் கேட்டதற்கு,
'(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும், நீர் அறிந்தவருக்கும், அறியாதவருக்கும் ஸலாம்
கூறுவதுமாகும்' என்றார்கள்"  புகாரி -12