Saturday, January 17, 2015

தொழக்கூடாத நேரங்கள் மற்றும் தொழுவது மக்ரூஹ் ஆன நேரங்கள்

தொழக்கூடாத நேரங்கள்
மூன்று நேரங்களில் அந்த நேரங்கள் வருவதற்கு முன் கடமையான தொழுகைகளை தொழுவது அறவே கூடாது.

தொழுகையை முறிக்கும் காரியங்கள் எவை?

மறதியாகவோ, கவனக்குறைவாகவோ, வேண்டுமென்றோ, தொழுகைக்கு சம்பந்தமில்லாதவற்றை பேசுவது, பிறருக்கு ஸலாம் சொல்வது, பிறரின் ஸலாமுக்கு நாவாலோ, முஸாபஹாவின் மூலமோ பதிலளிப்பது, தொடர்ந்து மூன்று முறை உறுப்புகளை அசைப்பது நெஞ்சை கிப்லா திசையில் இருந்து வேறு பக்கம் திருப்புவது, ஏதாவது சாப்பிடுவது, குடிப்பது, பல்லுக்கிடையில் உள்ளவற்றிலிருந்து ஒரு கடலை அளவு விழுங்கி விடுவது, அவசியமின்றி கனைப்பது (அவசியம் என்பது ஓதுவதற்கு இடையூறு ஏற்படுவதாகும்.) வாயால் ”பூ” என்று சொல்வது.

தொழுகையின் பர்ளுகள்,வாஜிபுகள் மற்றும் சுன்னத்கள்

தொழுகையின் பர்ளு
தொழுகையின் பர்ளு என்பது அதை விட்டால் தொழுகை கூடாது திருப்பித் தொழவேண்டும். 
அவை 6.

தயம்மும் மற்றும் அது தொடர்பான விளக்கங்களும்

தயம்மும் என்பது உளு செய்வதற்கோ, குளிப்பை நிறைவேற்றுவதற்கோ தண்ணீர் இல்லத போது அல்லது தண்ணீர் இருந்தும் அதைப் பயன்படுத்த முடியாதபோது மண்ணால் செய்யும் சுத்தமாகும்.

இஸ்லாமிய கேள்வி பதில்

"ல்லாஹ்” என்ற வார்த்தையின் பொருள் என்ன?
”அல்லாஹ்” என்ற வார்த்தை எத்தனை விரிவான பொருளை கொண்டுள்ளதோ அத்தகையதொரு வார்த்தை பிறமொழிகளில் இல்லை என்பதே தெளிவான முடிவாகும் இறைவன் கடவுள் ஆண்டவன் போன்ற வார்த்தைகள் இதன் நேரடிப் பொருள் அல்ல.

ஈமான்

ஈமான் என்ற அரபி வார்த்தைக்கு நம்பிக்கை கொள்வது என்று பொருளாகும். நடைமுறையில் அல்லாஹ்வை நம்பி, நமது நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த விஷயங்களை நம்பிக்கை கொள்ள வேண்டுமென்று சொன்னார்களோ அவற்றை நம்பிக்கை கொள்வதற்கு ஈமான் என்று சொல்லப்படுகிறது.

ஜைத்தூன் அவர்கள் மௌத்

பேகம்பூர் புலவர் தெரு மர்ஹும் மௌலானா அப்துல் வாஜீத்  (டில்லி குத்புகானா உரிமையாளர்) அவர்களின்  தங்கையும்  மர்ஹும் அப்துல் ஹை  அவர்களின் மனைவியுமாகிய ஜைத்தூன் அவர்கள்  இன்று (11.01.2015) பகல் 12.00மணியளவில்  மதுரை அரசு மருத்துவமனையில் காலமானார்கள். அன்னாரின் ஜனாசா அடக்கம் 12.01.2015 திங்கள்கிழமை அசர் தொழுகைக்கு பிறகு பேகம்பூர் பெரியபள்ளிவாசலில் நடைபெறும். 
இன்னாலில்லாஹி  வ இன்னா லிலைஹி  ராஜீவூன் 

இந்திய ஹஜ் கமிட்டியின் இவ்வருட (2015) ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயற்படுத்தி வருகிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, January 16, 2015

ஹதீஸ்-அல்லாஹ்வை காண

அல்லாஹ் தஆலா மறுமை நாளில் (சில மனிதர்களைப் பார்த்து), "ஆதமின் மகனே! நான் நோயுற்றிருந்தேன். ஆனால் நீ நோய் விசாரிக்க வரவில்லை'' என்பான். அதற்கு அம்மனிதன், "என் இறைவா! எப்படி நான் உன்னை நோய் விசாரிக்க முடியும்? நீயோ உலகத்தின் அதிபதியாயிற்றே!'' என்பான்.

இஸ்லாம்

இஸ்லாம் என்பது வழிப்படுதல், சாந்தி, சமாதானம் என்று பொருள்படும். 
அல்லாஹு தஆலாவிடத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம் மார்க்கமேயாகும்.
உலகில் உள்ள மதங்களில் இஸ்லாம் மிகச் சிறந்த மார்க்கமாகத் திகழ்கிறது.

இஸ்லாம் என்ற அரபி வார்த்தைக்கு ஒருவர் ‘தன்னுடைய விருப்பங்களை இறைவனுடைய 
விருப்பங்களுக்கு ஏற்ப அர்பனித்தல்’ என்று பொருள்.

அதாவது ஒருவர் தன்னுடைய விருப்பு வெறுப்புக்களை இறைவனுடைய கட்டளைகளுக்கு ஏற்ப அமைத்துக் கொண்டு தன்னை முழுமையாக இறைவனுக்கு அர்பனித்தல் என்பதாகும்.

இஸ்லாத்தின் கடமைகள் ஐந்தாகும்.
லாஇலாஹ இல்லல்லஹு – முஹம்மதுர் ரசூலுல்லாஹி என்ற கலிமாவை பொருள் விளங்கி உறுதியுடன் கூறுதல்.
ஐங்காலத் தொழுகையைப் பேணித் தொழுதல்.
ஜகாத் கொடுத்தல்.
ரமழான் மாதம் நோன்பு வைத்தல்.
ஹஜ்ஜு கடமையானவர்கள் ஹஜ்ஜு செய்தல் ஆகியவைகளாகும்.

எழுபது பெரிய பாவங்கள்

1. ஷிர்க் (அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
…எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறானோ அவனுக்கு நிச்சயமாக அல்லாஹ் சுவனபதியைத் தடுத்து விடுகின்றான். அவன் தங்குமிடம் நரகம்தான். (இத்தகைய) அக்கிரமக்காரர்களூக்கு (மறுமையில்) உதவி செய்வோர் ஒருவருமில்லை. (5:72)