Wednesday, September 14, 2016

பெண்களை அடிமைப்படுத்துகின்ற மார்க்கமா, இஸ்லாம்?

இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகின்றது என்பது தவறான புரிதல் ஆகும்.
ஒரே ஒரு வரலாற்றுக் குறிப்பைக் கூறுகின்றேன், கேளுங்கள்.
நீங்கள் பள்ளிவாசலுக்குள் போய் இருக்கின்றீர்களா? இல்லையேல் நான் உங்களை பள்ளிவாசலுக்குள் அழைத்துச் செல்கின்றேன், உங்களுக்கு விருப்பம் இருக்கின்ற பட்சத்தில்தான்.
பள்ளிவாசலுக்குள் இமாம் (தலைவர்) நின்று தொழுகையை வழிநடத்துகின்ற இடத்துக்கு அருகில் மூன்று படிக்கட்டுகளைக் கொண்ட மேடை ஒன்று உள்ளது. இதனை மிம்பர் என்று சொல்வார்கள். உலகத்தில் மிம்பர் இல்லாத பள்ளிவாசலே இல்லை. மறுமை நாள் வரை - உலகம் அழிகின்ற நாள் வரை - உலகில் கட்டப்படுகின்ற பள்ளிவாசல்கள் அனைத்தும் மிம்பருடன்தான் கட்டப்படும்.
இந்த மிம்பருக்குப் பின்னால் ஒரு பெண்மணி இருக்கின்றார்.

Monday, September 12, 2016

ஈதுல் அழ்ஹா பெருநாள் நல்வாழ்த்துகள்!!!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
அனைவருக்கும் மனமார்ந்த ஈதுல் அழ்ஹா பெருநாள் நல்வாழ்த்துகள்!!!
(தகப்பல் அல்லாஹ் மின்னா வ மின்கும்)
நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் செய்த தியாகத்தை போல், நாமும் அல்லாஹ்விற்காக தியாகம் செய்ய இந்த தியாகத்திருநாளில் சபதம் ஏற்போம்...
قُلْ اِنَّ صَلَاتِىْ وَنُسُكِىْ وَ مَحْيَاىَ وَمَمَاتِىْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ‏ 
நீர் கூறும்: “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். 
- (அல்குர்ஆன்: 6:162)
அனைவருக்கும் தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்

அல்லாஹ் உங்களிடமிருந்தும் நம்மிடமிருந்தும் (நற்செயல்களை) ஏற்றுக்கொள்வானாக!

ஹதீஸ்-குர்பானி ஆடுகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்
நிலவட்டுமாக..!

ஆடு வாங்குபவர்கள் கொம்புள்ள, முகம், மூட்டுக்கால், கண்பகுதி கருப்பு நிறமுடைய ஆடுகள் வாங்கி அறுப்பது சுன்னாவாகும்...
நபி(ஸல்) அவர்கள் ‘கொம்புள்ள கருப்பு நிறத்தால் நடக்கக்கூடிய, கறுப்பு நிறத்தால் அமரக்கூடிய, கறுப்பு நிறத்தால் பார்க்கக் கூடிய (அதாவது கால், மூட்டுக்கால், கண் பகுதி ஆகியவை கறுப்பு நிறமுடைய) ஆட்டை குர்பானி கொடுக்க வாங்கி வருமாறு கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத்).

ஹதீஸ்-நரக விடுதலை

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்
நிலவட்டுமாக..!
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்..
அல்லாஹ் அரஃபா நாளில் அடியார்களுக்கு நரக விடுதலையளிக்கும் அளவிற்கு வேறெந்த நாளிலும் நரக விடுதலை அளிப்பதில்லை.
அன்றைய தினம் அவன் (அரஃபாவிலுள்ளவர்களை) நெருங்கி, வானவர்களிடம் அவர்களைக் குறித்துப் பெருமை பாராட்டுகிறான்.
”இவர்கள் எதை நாடி (இங்கு குழுமி)யுள்ளார்கள்?” என்று (பெருமிதத்தோடு) கேட்கிறான்.
முஸ்லிம் 2623.

Sunday, September 11, 2016

கஃபாவின் மீது போர்தப்படும் போர்வை

கஃபாவின் மீது போர்தப்படும் போர்வைக்கு பெயர் -
கஃபாவின் மீது போர்த்தப்படும் கருப்பு நிறபோர்வைக்கு " கிஸ்வா " என்று பெயர் சொல்லப்படும். தங்க ஜரிகைகலால் ஆனது ,
கஃபாவிற்க்கு போர்வை மாற்றம் வைபவம் என்றே ஆரம்பித்து இன்று வரை தொடர்கிறது
எப்போது மாற்றப்படும்-வருடந்தோறும்துல் ஹஜ் பிறை 9 ம் நாள் ஹஜ்ஜோடு சேர்த்து இந்த போர்வையை மாற்றப்படுகிறது,
பழைய போர்வை --பழைய போர்வை சின்னஞ்சிறு துண்டுகளாகவெட்டப் பட்டு வெளி நாட்டு நிறுவனங்களுக்கும், பிரமுகர்களுக்கும் வழங்கப்படுகிறது. ஆனால் கலிஃபா உமர்[ ரலியல்லாஹூ அன்ஹூ ] ஆட்சி காலத்தில்அது ஹஜ் பயணிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது.
14 -மீ-நீளமும் 101-செ.மீ அகலமும் கொண்ட 47 துண்டுகள் பயன் படுத்தப்படும்.

அரஃபா நோன்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்
நிலவட்டுமாக..!
அன்பார்ந்த இஸ்லாமிய சொந்தங்களே
வருகின்ற(13.09.2016) துல்ஹஜ் பிறை 10 வியாழக்கிழமை அன்று இரு சிறந்த பெருநாட்களில் ஒரு பெருநாளான ஈதுல் அல்ஹாவினை கொண்டாடவிருக்கிறோம்
💥அல்ஹம்துலில்லாஹ்💥
இதற்கு முந்தைய நாள் (12.09.2016)துல்ஹஜ் பிறை 9 அன்று அரஃபா நோன்பு என்ற சுன்னத்தான அமலினை நபி(ஸல்) அவர்கள் நமக்கு காட்டி தந்துள்ளார்கள்
இந்த நோன்பு மற்ற நாட்களில் நாம் நோற்கும் நோன்பினை போன்று கிடையாது
அரஃபா நோன்பு தனிச்சிறப்பு பெற்றது

கண்கள் பழுதாகும் முன் குர்ஆன் ஓதிக் கொள்ளுங்கள்!

கண்கள் பழுதாகும் முன் 
                                    குர்ஆன் ஓதிக் கொள்ளுங்கள்!
காதுகள் செவிடாகும் முன் 
                                        குர்ஆன் ஹதீஸ்களைக் கேளுங்கள்!

சீடரின் கேள்விக்கு மௌலானா ரூமி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அற்புத பதில்கள்:

விசம் என்பது என்ன..?
நமது தேவைக்கு அதிகமான அனைத்தும் விசமே, அது நமது அதிகாரமாக, செல்வமாக, பசியாக, அகங்காரமாக, பேராசையாக, சோம்பேரித்தனமாக, காதலாக, லட்சியமாக, வெறுப்பாகவும் எதுவாகவும் இருக்கலாம்.
அச்சம் என்பது என்ன..?
எதிர்பாராதவற்றை ஏற்றுக் கொள்ள மறுப்பதே அச்சமாகும், அதை நாம் ஏற்றுக் கொண்டால் அது சாகசமாகிவிடும்.