Sunday, August 3, 2014

பொது அறிவு-5

* ஆஸ்கார் விருது மொத்தம் 24 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது.
* யானையின் துதிக்கையில் எலும்பு கிடையாது.
* நெருப்பு கோழி மணிக்கு சுமார் 70 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் ஆற்றல் பெற்றது.
* அதிகக் கேட்கும் சக்தி கொண்ட பறவை இனம் கிளி.
* மண்புழுக்களுக்கு கண், காது, தாடை, பல் போன்ற அமைப்புகள் கிடையாது.* ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மித்ரா என்ற பறவை ஒன்பது நிறத்தில் தெரியும்.
* கடல் புறாக்கள் நீரில் மிதந்து கொண்டே தூங்கும்.
* பச்சோந்தியின் கண்கள் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கும்.
* மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 தடவைகள் கொத்தும்.
* குவாரின் என்ற பறவை மல்லாந்து தூங்கும்.
* புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கி.மீ. வரை பறக்கும் திறன் படைத்தது.
* ராஜஸ்தான் பறவைகள் சரணாலயத்தில் 374 பறவை இனங்கள் இருக்கின்றன.
* நீரை உறிஞ்சிக் குடிக்கும் பறவை புறா.
* ஒரே சமயத்தில் அதிக முட்டைகளை இடும் பறவை நெருப்புக் கோழி.
* மிகப் பெரிய நீர்ப்பறவை அன்னம்.
* வெட்டுக் கிளியை வேட்டையாடும் பறவை மைனா.
* வான்கோழிகள் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை.
* நியூசிலாந்து நாட்டில் காக்கைகள் கிடையாது. குதிரையின் சராசரி ஆயுள்காலம், 60 ஆண்டுகள்.
நூர்ஜஹானின் இயற்பெயர், மெஹருன்னிசா.
சங்கரதாஸ் சுவாமிகள் ஒரே இரவில் எழுதி முடித்த நாடகம், அபிமன்யு.
அமைதியின் தூதுவர் என்று அழைக்கப்பட்டவர், ஜவஹர்லால் நேரு.
உயிர் காக்கும் உலோகம் என்று அழைக்கப்படுவது, ரேடியம்.
நோபல் பரிசை நிறுவியவர், ஆல்பிரட் நோபல்.
சனிக்கிரகத்துக்கு வளையம் உண்டு என்பதைக் கண்டறிந்தவர், கலிலியோ.
விமானப்படை தினம் கொண்டாடப்படும் நாள், அக்டோபர் 8.
ரத்த ஓட்டத்தைக் கண்டுபிடித்தவர், வில்லியம் ஹார்வி.
இந்திராகாந்தி முதன்முதலில் இந்தியப் பிரதமரான ஆண்டு, 1966.
டெல்லியின் பழைய பெயர், இந்திர பிரஸ்தம்.
வானத்தில் இருந்து பார்க்கும்போது வானவில் முழு வட்டமாகத் தெரியும்.
நவீன ஓவியக்கலையின் தந்தை'என்று அழைக்கப்படுபவர், பிகாசோ.
மோனாலிசா ஓவியத்தில் உள்ள பெண்ணுக்கு கண் புருவங்கள் கிடையாது.
கழுதைப்புலி, நாய் இனத்தைச் சேர்ந்தது.
ஈசலின் வாழ்வு ஒருநாள் மட்டுமே. * ரங்கன்திட்டு பறவைகள் சரணாலயம் உள்ள இடம் - கர்நாடகா
* குருதேவ் என்று அழைக்கப்படுபவர் - ரவீந்திரநாத் தாகூர்
* இந்தியாவின் முதுபெரும் மனிதர் - தாதாபாய் நவுரோஜி
* இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் வந்த சீனப்பயணி - பாஹியான்
* அக்னி, பிருத்வி ஏவுகணைகளை வடிவமைத்தவர் - ஏ.பி.ஜே.அப்துல்கலாம்
* இந்தியாவில் உள்ள இளஞ்சிவப்பு நகரம் - ஜெய்ப்பூர்
* புயலடிக்கும் நகரம் என்று அழைக்கப்படுவது - சிகாகோ
* டி.என்.ஏ.வை ஒட்ட வைக்க பயன்படும் நொதி - லிகேஸ் நொதி
* முதன் முதலில் வைரசைக் கண்டறிந்தவர் - பெய்ஜரிங்க். * அலாவுதீன் கில்ஜியின் அரசவைப் புலவர் - அமீர் குஸ்ரு
* பஞ்சாபில் நடக்கும் ஒருவகை நடனம் - பாங்கரா
* இந்தியாவின் மிகப்பெரிய வணிக வங்கி - எஸ்பிஐ
* ஹைட்ரஜன் குண்டு தயாரிப்பில் பயன்படும் தத்துவம் - அணுக்கரு இணைவு
* திட்டமிட்டு வனங்களை ஏற்படுத்துவதன் பெயர் - சில்விகல்ட்சர்
* தடுப்பூசி முறையை முதலில் செய்து காட்டியவர் - எட்வர்ட் ஜென்னர்
* அருணாச்சல பிரதேசத்தின் தலைநகர் - இடாநகர்
* தமிழகத்தில் தியாகராஜ ஆராதனை திருவிழா நடைபெறும் இடம் - திருவையாறு
* உலகிலேயே மிகப்பெரிய அரண்மனை - வாடிகன் அரண்மனை
* மூடிய விதைத்தாவரங்கள் என்று அழைக்கப்படுபவை எவை? - ஆன்ஜியோஸ்பெர்ம்கள்
* நியூக்ளியசைக் கண்டறிந்தவர் - ராபர்ட் பிரவுன்
* புரதச்சத்து குறைவால் உண்டாகும் நோய்கள் - க்வார்ஷியார்கர், மராஸ்மஸ்
* இன்சாட் செயற்கைக்கோள் வளிமண்டலத்தை தொலைவில் இருந்து உணர்வதற்கும், தானியங்கி தகவல் சேகரிப்பிற்குமாக பூமிக்கு இணையாக நிலையாக அமையும் வகையில் ஆளில்லா தகவல் சேகரிப்பு மேடை 1982-ல் தொடங்கப்பட்டது.
* புயலின் தீவிரத்தை துல்லியமாக கணக்கிடும் டாப்ளர் காலநிலை ரேடார்கள் புயல்களைக் கண்டறியும் கட்டமைப்பில் இணைக்கப்பட்டன. முதல் டாப்ளர் வகை ரேடார் சென்னையில் 2002-ல் செயல்படுத்தப்பட்டது.
* அமெரிக்க செயற்கைக்கோளில் இருந்து புகைப்படங்களை இந்திய வானிலைத்துறை 1964-ம் ஆண்டு முதல் பெறத் தொடங்கியது.
* வானிலையில் தகவல் குறிப்புகள் மற்றும் இன்சாட் நிழற்படங்கள் உலகளாவிய டிஜிட்டல் முறையிலான ஒளிபரப்புதல் மூலம் பெறப்படும் முறை 2003-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பெட்ரோலியத்தை குறிப்பிட்ட வெப்பநிலைக்கு உட்படுத்தும்போது கிடைக்கும் பொருட்கள்:
20 டிகிரி சென்டிகிரேடு - வாயுக்கள்
30- 130 டிகிரி சென்டிகிரேடு - பெட்ரோல்
120- 180 டிகிரி சென்டிகிரேடு - நாப்தா
180- 260 டிகிரி சென்டிகிரேடு - மண்ணெண்ணை
260- 340 டிகிரி சென்டிகிரேடு - டீசல்
340- 500 டிகிரி சென்டிகிரேடு - உயவு எண்ணை
500 டிகிரிக்கு மேல் - பாரபின் மெழுகு, வாசலின் சுழ்நிலை என்ற சொல்லை உருவாக்கிய விலங்கியல் வல்லுநர் யார்? ரேய்ட்டர்.
சுழ்நிலை என்ற சொல்லை யாரால் வரையறுக்கப்பட்டது?
ஹேக்கல்.
கங்காரூ அதிகம் உள்ள நாடு?
ஆஸ்திரேலியா.
கண்கள் திறந்த நிலையிலேயே தூங்கும் மிருகம் எது?
முதலை.
ரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர் என்ன?
ஹீவியா ப்ரசிலியன்சிஸ்.
மஞ்சள் காமாலை நோயினை குணப்படுத்தும் மூலிகை தாவரம் எது?கிழாநெல்லி.
வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?
கி பி 1890.
உலக சுற்றுச்சுழல் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
ஜூன் 5.
இதய நோயாளிகள் பயன்படுத்த வேண்டிய எண்ணெய்?
சூரியகாந்தி எண்ணெய்.
தாவரங்களில் ஒளிச்சேர்க்கையின் போது எந்த காற்று வெளியேற்றப்படுகிறது?
ஆக்ஸிஜன். * 2010-ல் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்ற இடம் - புதுடெல்லி
* உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் - பீஜிங் சர்வதேச விமான நிலையம், சீனா
* `மதராஸ்' என்ற பெயர் `சென்னை' என்று மாறிய ஆண்டு - 1996
* ஆன்டிசெப்டிக் அறுவை சிகிச்சை முறையைக் கண்டறிந்தவர் - ஜோசப் லிஸ்டர், 1960
* துகேலா நீர்வீழ்ச்சி எங்குள்ளது? - தென் ஆப்பரிக்கா
* நூபியன் பாலைவனம் உள்ள நாடு - சூடான் * இடியோசையின் டெசிபல் அளவு - 110 டெசிபல்
* தொல் தாவரவியலைப் பற்றி படிக்கும் பிரிவின் பெயர் - பாலியோ பாட்டனி
* பாஸ்ட் நார்கள் என அழைக்கப்படுபவை - புளோயம் நார்கள்
* சிவஞானபோதத்தை எழுதியவர் - மெய்கண்டார்
* பாலின் ஒப்பு அடர்த்தியை அளக்க பயன்படும் கருவி - லாக்டோ மீட்டர்
* ஒற்றைச் சர்க்கரைக்கு எடுத்துக்காட்டு - குளுக்கோஸ்
* வான்கடே விளையாட்டு மைதானம் அமைந்துள்ள இடம் - மும்பை
* 2014-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ள இடம்- தென்கொரியாவில் உள்ள இன்சியான் நகர். * இந்தியா முதல் அணுகுண்டு சோதனையை எங்கு, எப்போது நடத்தியது?- ராஜஸ்தான் பாலைவனம், 1974
* காலை நேரத்திற்கு உரிய ராகம் எது? - மேகராகம்
* கஜுராஹோ நாட்டிய திருவிழா நடைபெறும் மாநிலம் - மத்தியப்பிரதேசம்
* 10-வது ஐந்தாண்டு திட்ட காலம் எது? - 2002 முதல் 2007 வரை.
* பட்டுப்பூச்சி வளர்க்கும் தொழிலின் பெயர் என்ன? - செரிக்கல்சர்.
* கடாபி விளையாட்டு மைதானம் எங்கு அமைந்துள்ளது? - லாகூர் (பாகிஸ்தான்). * இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாடு, மும்பையில் டபிள்யு.சி.பானர்ஜியின் தலைமையில் நடந்தது.
* முதலாவது காங்கிரஸ் மாநாட்டில் தமிழகத்தில் இருந்து கலந்து கொண்டவர் சென்னையைச் சேர்ந்த ஜி.சுப்பிரமணிய அய்யர்.
* திலகரால் நடத்தப்பட்ட பத்திரிகைகள், மராத்தா மற்றும் கேசரி.
* சுதேசி நீராவிக்கப்பல்' என்ற நிறுவனத்தை தூத்துக்குடியில் தொடங்கியவர், வ.உ. சிதம்பரம்பிள்ளை.
* ஆஷ்துரை, வாஞ்சிநாதனால் 1911-ல் மணியாச்சி ரெயில் நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
* தமிழகத்தில் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக குருகுலத்தை நடத்தியவர், வ.வே.சு. அய்யர்.
* ஜாலியன் வாலாபாக் படுகொலை 13.4.1919-ல் நடந்தது. * எலிக்கொல்லியாக பயன்படும் தாவரம்- அர்ஜினியா இன்டிகா
* தெளிவாகத் தெரியும் காட்சியின் மீச்சிறு தொலைவு- 25 சென்டி மீட்டர்
* வானவியலைப் பற்றி படிக்கும் பிரிவு - அஸ்ட்ரானமி
* கவீர் பாலைவனம் உள்ள நாடு - ஈரான்
* ஐ.நா.சபையின் தலைமையகம் உள்ள இடம் - நியூயார்க்
*மகாத்மா காந்தியின் உருவப்படம் உள்ள தபால் தலை வெளியான நாள் - 15.8.1948 * விமானத்தின் வேகத்தை அளக்கும் கருவி- டேகா மீட்டர்
* உலகப் புகழ் பெற்ற திலாடியோ தேசிய பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள இடம் - பரத்பூர்
* ஆசியாவிலேயே மிகப்பெரிய கோட்டை - சித்தவுட் கோட்டை
* `சிவப்பு நகரம்' என்று அழைக்கப்படும் நகரம் - ஜெய்ப்பூர்
* அபு மலையின் நினைவுச்சின்னம் - அச்சல்கார் கோட்டை
* காஷ்மீர் வரலாற்றைக் குறிக்கும் நூல் - ராஜதரங்கினி கண்மை பூசும் வழக்கத்தை முதன் முதலில் எகிப்தியர்கள்தான் ஏற்படுத்தினர். சூரிய ஒளியில் கண் பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற பயத்தில் தோன்றியதுதான் கண் மை பூசும் வழக்கம்!
தேநீரைக் கண்டுபிடித்தவர்கள் சீனர்கள்தான் என்றாலும் முதன் முதலில் அன்றாட வழக்கிற்குக் கொண்டு வந்து பயன்படுத்திய பெருமை இந்தியர்களுக்கும் ஜப்பானியர்களுக்கும்தான்!
பறக்கும் பலூனைக் கொண்டு முதன் முதலில் வான்படையை உருவாக்கிய பெருமை பிரான்ஸ் நாட்டைத்தான் சேரும்.
உலகில் முதன் முதலில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழக அருங்காட்சியகம் என்ற பெருமையை ஆக்ஸ்ஃபோர்ட் ஆஷ்மோலியன் அருங்காட்சியகம் பெறுகிறது. 1683-ம் ஆண்டு இந்த மியூசியம் தொடங்கப்பட்டது.
இரும்பு மற்றும் எலும்பைக் கொண்டு உருவாக்கப்பட்ட குண்டூசிகளை முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் சுமேரியர்கள்.
கலங்கரை விளக்கம் முதன் முதலில் கி.மு. 500-ல் எகிப்தியர்களால் அமைக்கப்பட்டது.
முதன் முதலில் பச்சை சிவப்பு விளக்குகளைக் கொண்டு டிராஃபிக் சிக்னல் 1868-ம் ஆண்டு லண்டனில் ஏற்படுத்தப்பட்டது.
இந்தியாவின் முதல் தொலைபேசித் தொடர்பகம் 1851-ம் ஆண்டு கல்கத்தாவில் நிறுவப்பட்டது.
டாங்கு என்றழைக்கப்படும் போர் ஊர்தி முதன் முதலில் இங்கிலாந்தில் 1916-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
முகச்சவரம் செய்து கொள்ளும் முறையை முதன் முதலில் ஏற்படுத்தியவர் மாவீரன் அலெக்ஸாண்டர்.
கிளி ஜோசியம் முதன் முதலில் தோன்றியது பர்மாவில்தான்.
விவசாயம் முதன் முதலில் தொடங்கியது தாய்லாந்து நாட்டில்தான்! தமிழகத்தில் 1943-ல்தான் ஜவ்வரிசி இறக்குமதியானது! ஜாவா தீவுகளில் இருந்து வந்ததால், ஜாவா அரிசி என்று வழங்கப்பட்டது. பின்னர் இது ஜவ்வரிசியாக சுருங்கிவிட்டது!
விமான விபத்து எப்படி நடந்தது என்று கண்டுபிடிக்கும் பெட்டிதான் கருப்புப் பெட்டி. இதைக் கண்டுபிடித்தவர் டேவிட் வாரன். இவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்.
இதயம் 60 விநாடிக்கு 72 முறை துடிக்கும். அப்படியென்றால் 15 விநாடிகளுக்கு 18 முறை துடிக்க வேண்டும். எனவேதான் நமது மணிக்கட்டின் (நாடி) நரம்புத் துடிப்பை வைத்து இதயத் துடிப்பை மருத்துவர்கள் அளந்து பார்க்கிறார்கள்.
ஐ.நா. சபை சின்னத்தில் பூமி உருண்டையுடன் உள்ள இலை ஆலிவ் இலை. இந்தியாவில் முதன்முதலாக அஸ்ஸாமில் 1867-ம் ஆண்டில்தான் நிலத்துக்கு அடியில் எண்ணெய்க் கிணறு இருப்பதைக் கண்டுபிடித்தார்கள்.
இந்தியாவில் முதன்முதலில் 1946-ம் ஆண்டில் சென்னையில் இந்தியாவின் திரைப்படக் கல்லூரி அமைக்கப்பட்டது.
இந்தியாவில் முதன்முதலில் காபிரைட் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் நூல், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராஜேந்திரபிரசாத் எழுதிய "சுயசரித்திரம்' என்னும் நூல்.
இந்தியாவில் முதன்முதலில் 1962-ம் ஆண்டில் தும்பாவில் இந்திய முதல் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டது.
இந்தியாவில் மிக அதிக காலம் முதலமைச்சராக இருந்தவர் ஜோதிபாசு (மேற்கு வங்காளம்).
இந்தியாவின் மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் இருக்கும் இடம் காரக்பூர் (மேற்கு வங்காளம்). விண்வெளியில் முதன்முதலில் சாதனை படைத்த சாகச வீரர்களைப் பற்றிய விவரங்கள் வருமாறு:
* உலகின் முதல் விண்வெளி வீரர், யூரிகாகரின். முதன்முதலில் பூமியை வலம் வந்த விண்வெளி வீரரும் இவர்தான். (12.4.1961)
*முதல் விண்வெளி வீராங்கனை ரஷ்யாவைச் சேர்ந்த வாலன்டினா தெரஷ்கோவா (16.6.1963)
*அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரர், ஆலன் ஷெப்பர்ட் (5.5.1961)
*இந்தியாவின் முதல் விண்வெளி வீரர், ராகேஷ் சர்மா (3.4.1984)
* இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை, கல்பனா சாவ்லா (19.11.2003)
*சீனாவின் முதல் விண்வெளி வீரர், யாங்லிவெய் (15.10.2003) * தீக்குச்சி முனையில் உள்ள வேதிப்பொருட்கள் - ஆன்டிமனி சல்பைடு, பொட்டாசியம் குளோரைட், கந்தகம்.
* உயர் வெப்பநிலையை அளக்க உதவும் கருவி - பைரோ மீட்டர்
* இந்தியாவில் ரஞ்சித் விளையாட்டு மைதானம் எங்குள்ளது? - கொல்கத்தா
* உலகிலேயே உயரமான பீடபூமி எது? - பாமீர், திபெத்
* காந்தி நிறுவிய ஆசிரமத்தின் பெயர் - சபர்மதி
* கனவுக்கோபுர நகரம் எது? - ஆக்ஸ்போர்டு, இங்கிலாந்து. * முதன் முதலில் போரில் ராக்கெட்டுகளைப் பயன்படுத்தியவர் - திப்புசுல்தான்
* நம் உடலைச் சுற்றி வர ஒரு துளி ரத்தத்திற்கு சுமார் ஒரு நிமிடம் முதல் இரண்டு நிமிடம் வரை ஆகிறது.
* சதுர வடிவில் ரூபாய் நோட்டை வெளியிடும் நாடு, தாய்லாந்து.
* கழுகு, மனிதனை விட 8 மடங்கு கூர்மையான பார்வைத்திறன் கொண்டது.
* நைல் நதியின் நீளம், 6 ஆயிரத்து 650 கிலோமீட்டர்.
* இறந்தவர்களின் உடலைப் பதப்படுத்தும் முறைக்கு `எம்பாம்' என்று பெயர். 13 நாடுகளின் எல்லையைக் கொண்ட ஒரே நாடு, சீனா.
* உலக நாடுகளின் தேசிய கொடிகளில் அதிகம் இடம்பெற்ற ஒரே நிறம் - சிவப்பு
* `கடல் குதிரை' என்று சொல்லப்படும் மீன் இனத்தில் ஆண் மீன்களே கர்ப்பமாகின்றன.
* லிங் இன மீன் இடும் முட்டையின் எண்ணிக்கை 16 கோடி.
* நாய் மனிதர்களைப் போலவே கனவு காண்கிறது.
* ஜப்பானில், ஏப்ரல் முதல் நாளை பொம்மைகள் தினமாகக் கொண்டாடுகின்றனர்.
* இந்தியாவின் முதல் பைவ் ஸ்டார் ஓட்டல் மும்பை தாஜ்.
* போலார் கரடிகள் இடது கை பழக்கம் உள்ளவை.
* நோபல், மகசேசே, பாரத ரத்னா என்ற மூன்று உயர்ந்த விருதுகளைப் பெற்றவர், அன்னை தெரசா.
* தயான்சந்த் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது? - ஹாக்கி
* வளிமண்டலத்தில் உள்ள இரண்டாவது அடுக்கின் பெயர் - ஸ்ட்ரட்டோஸ்பியர்
* நுண்கிருமிகளைப் பற்றி படிக்கும் பிரிவின் பெயர் - பாக்டீரியாலஜி
* இத்தாலியில் உள்ள எரிமலையின் பெயர் - வெசூவியஸ்
* பாட்னா எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது? - கங்கை
* மொரீஷியஸ் நாட்டின் தலைநகர் - போர்ட் லூயிஸ்
* நத்தைகள் மூன்று ஆண்டுகள் கூட விடாமல் தூங்கும்.
*கடல் இறால் லாப்ஸ்டர்க்கு கண்களை இழக்கும் நிலை ஏற்பட்டால், உடனே அதற்கு மறுகண் முளைத்து விடும்.
*பெண் கொசுக்கள்தான் மனிதனைக் கடித்து அவன் ரத்தத்தை உறிஞ்சுகின்றன.
*ஸ்ட்ராபெர்ரி ஒரு பழம் அல்ல. அது அந்தச் செடிப்பூவின் பருத்த தண்டுதான்.
*கோலா கரடிகளின் ஆகாரம் மூங்கில் தழைகள்.
*பச்சோந்தியின் நாக்கு அதன் உடலைவிட, இரண்டு மடங்கு நீளம்.
*கருப்பு திமிங்கலங்கள் பிறக்கும்போது வெள்ளையாக இருக்கும். * அமெரிக்காவில் கடிகாரக் கடைகளில் விற்பனைக்கு இருக்கும் கடிகாரங்களில் நேரம் 10-10 என்று சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கும். ஏன் இப்படி? அமெரிக்க ஜனாதிபதி லிங்கன் கொல்லப்பட்ட நேரத்தை நினைவுகூறும் வண்ணம் அவ்வாறு வைக்கப்பட்டிருக்கும்.
* ஒட்டகச் சிவிங்கியின் பின் கால்கள் தான் அதனுடைய தற்காப்பு ஆகும். இது ஆபத்து காலத்தில், இந்தக் கால் மூலம் ஓர் உதைவிட்டால், அந்த உதை ஒரு சிங்கத்தைக்கூடக் கொல்லும் வலிமையுடையதாகும்.
* சீல் எனும் கடல் வாழ் உயிரினம் கருவுற்றிருக்கும்போது எளிதில் சாப்பிடாது. தன் உடற்சத்தையே கரைத்துத் தன் வயிற்றினுள் இருக்கும் குட்டிக்குச் செலுத்தும்.
* பெட்ரோல் என்பது பெட்ரோலியம் என்ற கிரேக்க மொழிச் சொல்லில் இருந்து பிறந்தது. இதற்கு கல் எண்ணெய் என்ற பொருள்.
* நார்வே நாட்டில் வீடுகளின் கூரைகளில் புற்களைப் பயிரிடுகின்றனர்.
* உடலில் உள்ள பல நோய்களையும் தண்ணீர் அருந்துவதன் மூலம் குணப்படுத்தமுடியும் என்று ஜப்பான் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
* உலகின் மிகப் பழமையான சுரங்கப் பாதை துருக்கியில் உள்ளது. இங்கு சாமோஸ் என்ற இடத்தில் சுண்ணாம்புக் கல் மலை ஒன்று உள்ளது. இம்மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட சுரங்கப்பாதைதான் உலகின் மிகப் பழமையான சுரங்கப்பாதை. இது 1000 மீட்டர் நீளமும், 2 மீட்டர் உயரமும், 2 மீட்டர் அகலமும் கொண்டது.
* 1879-ல் இந்தியத் தபால் அட்டையின் விலை 1 பைசா.
* லெபனான் நாட்டில் எப்போதும் கிறிஸ்துவர்களிடமிருந்து ஜனாதிபதியும், முஸ்லிம்களிடமிருந்து பிரதமரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
* மற்ற நாள்களில் நடப்பதை விட பெüர்ணமியன்று 50 சதவீதம் கொலைகளும் 100 சதவீதம் தீய சம்பவங்களும் அதிகமாக நடக்கின்றன என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
* கோவாவின் தலைநகர் பஞ்சிம். அங்குள்ள இரண்டு சாலைகளின் பெயர்கள்: ஜூன் 18-ம் தேதி சாலை, ஜனவரி 31-ம் தேதி சாலை.
* சிம்பன்ஸி குரங்குகளுக்கும் மனிதனுக்கும் ஜெனிடிக் இன்ஜினியரிங் ஆய்வின்படி 98.4 சதவீதம் ஒரே உணர்வுகள் தான் இருக்கிறது. மற்றபடி நாம் என்னென்ன செய்கிறோமோ, அத்தனையும் அவை செய்யும். பேசமட்டும் தெரியாது. * நேபாளத்தில் பெரும்பாலும் இரவில்தான் மழை பெய்யும்.
* சோமாலியா நாட்டு சிங்கங்களுக்கு பிடரி மயிர் கிடையாது.
* நாகப்பாம்பின் நச்சு மயிலைப் பாதிக்காது.
* கிரீஸ் நாட்டு தேசிய கீதம் 158 வரிகளை கொண்டது.
* கப்பல் கிழக்கில் சென்றால் அதன் எடை குறையும்.
* கோலப் மைதானத்தில் 18 துளைகள் உள்ளன.
* உலகில் அதிகமானவர்களைப் பாதிக்கும் வியாதி என்ன தெரியுமா? பல்வலி!
நிலத்திலும், நீரிலும் மைல் என்ற அளவு பயன்படுகிறது. நிலத்தின் மைலுக்கும், கடலின் மைலுக்குமுள்ள வித்தியாசம் தெரியுமா?
நிலத்தில் ஒரு மைல் - 5,280 அடி. கடலில் ஒரு மைல் 6080 அடி.
* சுண்டெலியின் ஆயுட் காலம் 3 வருடங்கள்
* கரையான் அரிக்காத மரம் தேக்கு
* பாம்பிற்கு ஒரு நுரையீரல் மட்டுமே உண்டு.
* தக்காளியின் தாயகம் அமெரிக்கா.
* நமது உடலின் பெரிய சுரப்பி கல்லீரல்.
* இங்கிலாந்து ஈரான் நாடுகளின் தேசிய சின்னம், ரோஜாமலர்.
* நமது தேசியக் கொடியில் உள்ள அசோக சக்கரம் 24 ஆரங்களைக் கொண்டதாகும்.
* நில நடுக்கத்தின் கடுமையை துல்லியமாக அறிந்து கொள்ள `ரிக்டர் ஸ்கேல்' என்ற கருவி பயன்படுகிறது.
* இந்திய ரூபாய் நோட்டுகள் `நாசிக்' நகரத்தில் அச்சடிக்கப்படுகிறது.
* உலகிலேயே மிகப் பழமையான பல்கலைக்கழகம் `மொராக்கோ' நாட்டில் உள்ளது.
* சாகித்ய அகாடமி பரிசு பெற்ற முதல் தமிழ் புத்தகம் ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய `தமிழ்இன்பம்'.
* மண்புழுவுக்கு கண்கள் கிடையாது.
* இந்தியாவிலேயே அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் நடிகர் ஷாருக்கான நடித்த `தில் வாலே துல்ஹனியா லே ஜாயங்கே''
* தமிழ் பத்திரிகையில் கார்ட் டூன் படங்களை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் - பாரதியார்
* 1930-ம் ஆண்டு முதல் உலக கால்பந்து ஆட்டம் ஆடப்படுகிறது. அனைத்து உலக கால்பந்தாட்டத்திலும் பிரேசில் அணி பங்கேற்றுள்ளது.
* இந்தியாவில் இரு தலைநகரங்கள் கொண்ட ஒரே மாநிலம் காஷ்மீர்.
* ஆக்டோபஸின் ஆயுட் காலம் 3 ஆண்டுகள்.
* உலோகங்களில் அதிக எடை கொண்டது அலுமினியம்தான். ஒரு கனசென்டி மீட்டருக்கு 22.6 கிராம் எடை உடையது.
* பிரபல துப்பறியும் நூல் ஆசிரியரான அகதா கிறிஸ்டி எழுதியுள்ள 87 நாவல்களும் 103 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு அதிக அளவில் விற்பனையாகி உள்ளது.
* ராஜநாகத்தின் விஷம் மிகக் கொடியதாகும். அதன் ஒரு கிராம் விஷம் 150 பேரை கொல்ல போதுமானது.
* உலகின் மிகப்பெரிய கண்ணாடி சன்னல் நியூயார்க் நகரில் உள்ள கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருப்பதுதான். அதன் நீளம் 300 அடி. உயரம் 23 அடி.
* இந்தியாவில் இருந்து கொண்டே ஆங்கில இலக்கியம் எழுதி பிரபலமானவர் ஆர்.கே.நாராயணன்.
* வியர்வையில் கந்தகச் சத்து இருப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுத்துப் போய்விடுகின்றன.
* கரையான் அரிக்காததும், காளான் உண்டாகாததும், இரும்புத்துரு ஏறாததும் தேக்குமரம் மட்டுமே.
* சீட்டுக்கட்டில் உள்ள 4 ராஜாக்கள் டேவிட், சார்லி மாக்னி, அலெச்சாண்டர், ஜுலியஸ் சீசர்.
* சீட்டுக்கட்டில் உள்ள 4 ராணிகள் கிளியோபாட்ரா, எஸ்தர், ஷிபா, போடிஸியா.
* ஈ, ஒரு நிமிடத்தில் 2 ஆயிரம் தடவை இறக்கை அடித்துப் பறக்கிறது.
* பாலைவனத்தில் வளரும் எல்லா செடிகளுக்கும் முட்கள் இருக்கும்.
நாணயங்கள்
ஆஸ்திரியா - ஷில்லிங்
அல்பேனியா - லெக்
அல்ஜீரியா - தினார்
கனடா - டாலர்
சிலி - பிசோ
லாவோஸ் - கிப்
மாலத்தீவு - ருபியா
மொராக்கோ - டிர்காம்
ஈரான் - ரியால்
நார்வே - கிரோன் கணிதத்தில் பூஜ்ஜியத்தை சேர்த்தவர் - ஆர்யபட்டர்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய மிருகக்காட்சி சாலை அமைந்துள்ள இடம் - வண்டலூர்.
நானோமீட்டர் என்ற அளவைக் கண்டுபிடித்தவர் - ஆல்பர்ட் இன்ஸ்டினா
* உலகிலேயே குரங்குகளுக்குப் பள்ளிக்கூடம் உள்ள நாடு - தாய்லாந்து.
* நெருப்புக் கோழிகளுக்கு தென்னாப்பிரிக்காவில் ஓட்டப்பந்தயம் நடத்துகிறார்கள்.
* முட்டாள் தினம் கொண்டாடும் ஏப்ரல் முதல்நாளில் ஜப்பானியர்கள் பொம்மைகள் தினமாக கொண்டாடுகிறார்கள்.
* எந்த வயதில் பல் விழுந்தாலும் மீண்டும் மீண்டும் பல் முளைக்கும் உயிரினம் சுறா மீன்கள்.
* தமிழ்நாட்டின் அரசு வரிவிலக்குப் பெற்ற முதல் திரைப்படம் கப்பலோட்டிய தமிழன்.
* நோபல், மகசேசே, பாரதரத்னா ஆகிய மூன்று உயரிய விருதுகளையும் பெற்றவர் அன்னை தெரசா.
* தவளைகள் கண்கள் மூலம் சத்தத்தை கேட்கின்றன.
* மாறு குரல் உடைய ஒரே பறவை குயில் மட்டுமே.
* ஆண்களுக்கு மட்டுமே ஓட்டுரிமை உள்ள நாடு சுவிட்சர்லாந்து.
* இரவைவிட பகலில்தான் மேகங்கள் வேகமாக நகருகின்றன. * மோனலிசா ஓவியம் இடதுகையால் வரையப்பட்டது.
* குழந்தைப் பாடல்களை இயற்றிய முதல் கவிஞர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.
* சிவப்பு ரோஜா நகரம் எனப்படுவது ஜெய்ப்பூர்.
* சீனத் தத்துவஞானி கன்பூசியஸ் பிறந்த மாநிலம் லூ. * மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் - 2ம் நாள் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் சர்வதேச அகிம்சை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
* உலகிலேயே அதிக மழைப் பொழிவிற்கு பெயர் பெற்ற சிரபூஞ்சி (மேகலாயா) நகரம் சோக்ரா என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது.
* மனித கருவை ஆய்வுக்கு அனுமதித்துள்ள உலகின் முதல் நாடு இங்கிலாந்து. * குதிரையின் கண் எதிரெதிர் திசையில் அசையும்.
* மனநோய் மருத்துவ முன்னோடி சிக்மெண்ட் பிராய்டு.
* ஐம்பது வயதுக்கு மேல் சுவை உணரும் ஆற்றல் குறையும்.
* எலிகள் இசையை விரும்புகின்றன.
* உலகின் பெரிய பூச்சி கோலியாத் வண்டுதான்.
* அடிபட்ட கழுகு உயிர்போகும் வரை போராடும்.
* கார்ப்ஸ் மீனின் ஆயுள் ஐம்பது வருடம்.
* வெள்ளாடு பசுவைவிட அதிக பால் தரும்.
* ராக ஆலாபனை இந்திய இசைக்கு மட்டுமே உண்டு.
* உலகின் மிகப்பெரிய எரிமலை கொடபாக்சி. * பச்சோந்தியின் நாக்கு உடலின் நீளத்தைப்போல் இரு மடங்கு இருக்கும்.
* விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் விலங்கு நாய். அதன் பெயர் லைகா.
* தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே விலங்கு மனிதன்தான்.
* யானையின் வெட்டுப் பற்களே அதன் தந்தங்கள்.
* நெருப்புக்கோழியின் முட்டை 22 கோழி முட்டைகளுக்குச் சமம்.
* நீலத் திமிங்கலத்தின் இதயம் ஒரு மனிதன் உயரத்திற்கு இருக்கும் * இந்தியாவில் ஆங்கிலேயக் கல்வியைத் தொடங்கியவர் வில்லியம் பென்டிங் பிரபு.
* ஆயுள் தண்டனை என்பது 14 வருடங்கள்.
* உலகில் தாய் பெயரின் முதல் எழுத்தை இனிஷியலாகப் பயன்படுத்துபவர்கள் ஸ்பெயின் நாட்டினர்.
* நாம் பிறந்த பின் நம் உடலில் வளராமல் இருக்கும் உறுப்பு கண்ணின் கருவிழி.
* அமெரிக்க இந்துக் கோவில்களில் பாதாம் பருப்பு பிரசாதமாக வழங்கப்படுகிறது. * டிஸ்னி வேர்ல்டு அமைந்துள்ள ஜப்பான் நகரம் டோக்கியோ.
* ராஜராஜன் விருதை உருவாக்கிய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.
* அமெரிக்காவின் சொர்க்கத் தீவு என அழைக்கப்படுவது ஹவாய் தீவு.
* இருபதாம் நூற்றாண்டில் துணிச்சல் நிரம்பிய முதல் மனிதராகக் கருதப்பட்டவர் காந்திஜி.
* கூரியர் சர்வீஸ் முதன் முதலில் தோன்றிய நாடு இங்கிலாந்து.
* ரஷ்யமேதை காரல்மார்க்சின் கல்லறை லண்டனில் உள்ளது.
* பின்கோடு முறைக்கு அமெரிக்காவில் `ஜிப்' என்று பெயர்.
உலகில் மிகப்பெரிய 5 பாலைவனங்களும் அதன் பரப்பளவும்...
* சகாரா பாலைவனம் (வடஆப்பிரிக்கா) - 90,64,650 ச.கி.மீ
* அரேபியன் பாலைவனம் (மத்திய கிழக்கு ஆசியா) - 25,89,900 ச.கி.மீ
* கோபி (சீனா) - 12,94,950 ச.கி.மீ
* படகோனியன் (அர்ஜென்டினா) - 6,73,374 ச.கி.மீ
* கிரேட் விக்டோரியா (ஆஸ்திரேலியா) - 6,47,475 ச.கி.மீ.
* பாஸ்பரசை கண்டுபிடித்தவர் - பிராண்ட் (1669)
* ரேடியத்தை கண்டுபிடித்தவர் - கிïரி (1898)
* பொட்டாசியத்தை கண்டுபிடித்தவர் - டேவி (1807)
* ரேயானை கண்டுபிடித்தவர் - கார்டனேட்
*மிதிவண்டியை கண்டுபிடித்தவர் - கிர்க்பாடிரிக் மாக்மிலென் (1839-40)
*மோட்டார் சைக்கிளைக் கண்டுபிடித்தவர் - டெய்ம்லர் (1885) * `எஸ்கிமோ' என்ற சொல்லுக்கு உணவைப் பச்சையாகத் தின்பவர்கள் என்று பொருள்.
* `செப்டம்பர் 27' உலகச் சுற்றுலா நாளாகக் கொண்டாடப்படுகிறது.
* டெல்லி, ஆக்ரா, ஜெய்பூர் இந்த மூன்று ஊரையும் சேர்த்து `தங்க முக்கோணம்' என்கிறார்கள்.
நன்றி;;niroshan

No comments:

Post a Comment