Thursday, August 21, 2014

தமிழ் மாநில ஜமாத்துல் உலமா' தலைவராக மவ்லவி A.E.M.அப்துர்ரஹ்மான் ஹஜ்ரத் அவர்கள் தேர்வு

தொடர்ந்து மூன்றாவது முறையாக 'தமிழ் மாநில ஜமாத்துல் உலமா' தலைவராக மவ்லவி A.E.M.அப்துர்ரஹ்மான் ஹஜ்ரத் அவர்கள் தேர்வு19/08/14 அன்று நடைபெற்ற தேர்தலில் தலைமை பதவிக்கு தற்போதைய தலைவர் மவ்லானா மவ்லவி A.E.M.அப்துர்ரஹ்மான் ஹஜ்ரத் அவர்களும் சென்னை மவ்லானா மவ்லவி தர்வேஷ் ரஷாதி ஹஜரத் அவர்களும் போட்டியிட்டார்கள்.
ஈரோடு மவ்லானா மவ்லவி முஹம்மது சுல்தான் ரஷாதி ஹஜ்ரத் அவர்களும், சிவகங்கை மவ்லானா மவ்லவி முஹம்மது ரிளா ஹஜ்ரத் அவர்களும் செயலாளர் பதவிக்கு போட்டியிட்டார்கள்.
மதுரை மவ்லானா மவ்லவி முஹம்மது காஸிம் பாகவி ஹஜ்ரத் அவர்களும் வேலூர் மவ்லானா மவ்லவி முஹம்மது இலியாஸ் ஹஜ்ரத் அவர்களும் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்டனர்.
வாக்காளார்களுக்கு, அவர்களுக்கு வழங்கப்பட்ட பதிவு எண்ணை பரிசீலித்த பின்னர் மூன்று வாக்கு அட்டைகள் வழங்கப்பட்டன . அதில், அவர்கள் விரும்பும் வேட்பாளர்களின் பெயருக்கு எதிரில் முத்திரையிட்டு அதற்கு உரித்தான பெட்டியில் போட ஏற்பாடு செய்யப்பட்டது. வோட்டு போடும் இடத்தில் வேட்பாளர்களும் தேர்தல் குழுவினர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மிக சுமூகமான முறையில் ஆலிம் பெருமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
சுமார் ஒரு மணியளவில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
மவ்லானா மவ்லவி அப்துர்ரஹ்மான் ஹஜ்ரத் அவர்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிக வாக்குகள் பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
செயலாளராக சிவகங்கை முஹம்மது ரிளா ஹஜ்ரத் அவர்களும்,
பொருளாளராக மதுரை முஹம்மது காஸிம் பாகவி ஹஜ்ரத் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்!
- மவ்லவி கனியூர் இஸ்மாயில் நாஜி


No comments:

Post a Comment