Saturday, August 16, 2014

ஹதீஸ்-தொண்ணூற்றொன்பது திரு நாமங்கள்

"அல்லாஹுதஆலாவுக்கு தொண்ணூற்றொன்பது திரு நாமங்கள் உள்ளன.அவற்றை பாடமிட்டு ஓதிவருகிறவர் சொர்க்கம் சென்றிடுவார்" என ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.
அல்லாஹ் என்று அழையுங்கள்,அல்லது அர்ரஹ்மான் என்று அழையுங்கள்.நீங்கள் (அவனுடைய திருப்பெயர்களில்) எதனைக் கூறி அழைத்தாலும் அவனுக்கு அழகிய திருப்பெயர்கள் உள்ளன என்று (நபியே) நீர் கூறுவீராக!.
நூல்: மிஷ்காத்
தொண்ணூற்றொன்பது திரு நாமங்கள்
1.யா ரஹ்மானு - அளவற்ற அருளாளனே
2.யா ரஹீமு - நிகரற்ற அன்புடையோனே
3.யா மலிக்கு - மன்னனானவனே
4.யா குத்தூஸு - பரிசுத்தமானவனே
5.யா ஸலாமு – சாந்தியளிப்பவனே
6.யா முஉமினு -அபயமளிப்பவனே
7.யா முஹைமினு - பாதுகாவலனே
8.யா அஜீஸு - யாவையும் மிகைப்பவனே
9. யா ஜப்பாரு -சமநிலையாக்குபவனே
10. யா முதகப்பிரு -பெருமையுள்ளவனே
11. யா காலிக் -சிருஷ்டியாளனே
12. யா பாரிஉ -ஆத்மாவை அமைப்பவனே
13. யா முஸவ்விரு - உருவமைப்பவனே
14.யா கஃப்பாரு -பிழைபொறுப்பவனே
15. யா கஹ்ஹாரு -அடக்கி ஆள்பவனே
16.யா வஹ்ஹாபு -பெருங்கொடையாளனே!
17.யா ரஸ்ஸாகு - இரணம் அளிப்பவனே!
18. யா பத்தாஹு - வெற்றி அளிப்பவனே!
19. யா ஆலிமு - யாவும் அறிந்தவனே!
20.யா காபிளு - கைவசப் படுத்துபவனே
21. யா பாஸிது - தாராளமாகக் கொடுப்பவனே!
22.யா ஹாபிளு - தாழச் செய்பவனே!
23.யா ராபிஉ - உயர்த்துபவனே!
24. யா முஇஸ்ஸு -மேன்மையடையச் செய்பவனே!
25.யா முதில்லு - இழிவடையச் செய்பவனே!
26.யா ஸமீஉ - யாவையும் கேட்பவனே!
27.யா பஸீரு - யாவையும் பார்ப்பவனே!
28.யா ஹகமு - தீர்ப்புச் செய்பவனே!
29.யா அத்லு - நீதி செய்பவனே!
30.யா லத்தீபு -பட்சமுள்ளவனே!
31.யா KHபீரு - உணர்ந்தவனே!
32.யா ஹலீமு - அமைதியானவனே!
33.யா அழீமு -மகத்துவமுள்ளவனே!
34.யா கபூரு - பாவம் தீர்ப்பவனே!
35.யா ஷக்கூரு - நன்றி பாராட்டுபவனே!
36.யா அலிய்யு -உன்னதமானவனே!
37.யா கபீரு - பெரியோனே!
38.யா ஹபீளு - பேணிக்காப்பவனே!
39.யா முகீத்து - பழிப்போனே!
40.யா ஹஸீபு - கணக்கு கேட்பவனே!
41.யா ஜலீலு - மாண்பு மிக்கவனே!
42.யா கரீமு - கொடை கொடுப்பவனே!
43.யா ரகீபு - கண்காணிப்பவனே!
44.யா முஜீபு - முறையீட்டை ஏற்பவனே!
45.யா வாஸிஉ - எங்கும் நிலவுபவனே!
46.யாஹக்கீமு -நுண்ணறிவுள்ளவனே!
47.யா வதூது - உள்ளன்பு மிக்கவனே!
48.யா மஜீது - தலைமை தாங்குபவனே!
49.யா பாஇது - தட்டி எழுப்புவோனே
50.யா ஷஹீது - சாட்சியுடையவனே!
51.யா ஹக்கு – சத்தியமானவன
52.யா வக்கீலு - பொறுப்பு ஏற்பவனே!
53.யா கவிய்யு - வல்லமை மிக்கவனே!
54.யா மத்தீனு - உறுதியானவனே!
55.யா வலிய்யு - கிருபை செய்பவனே!
56.யா ஹமீது - புகழுக்குரியவனே!
57.யா முஹ்ஸி - தீர்க்கமாய் தெரிந்தவனே!
58.யா முப்திஉ - ஆதியில் வெளியிடுபவனே!
59.யா முஈது - இறுதியில் மீட்டுக் கொள்பவனே!
60.யா முஹ்யீ - உயிர்ப்பிப்பவனே!
61.யா முமீத்து - மரணிக்கச் செய்பவனே!
62.யா ஹையு - நித்திய ஜீவியானவனே!
63.யா கையூமு - என்றும் நிலைத்தவனே!
64.யா வாஜிது - கண்டுபிடிப்பவனே!
65.யா மாஜிது - தலைமை வகிப்பவனே!
66.யா வாஹிது - தனித்தவனே!
67.யா அஹது - ஒருமைக்குரியவனே!
68.யா சமது - தேவையற்றவனே!
69.யா காதிரு - ஆற்றல் உள்ளவனே!
70.யா முக்ததிரு - ஆற்றல் பெறச் செய்பவனே!
71.யா முகத்திமு - முன்னேறச் செய்பவனே!
72.யா முஅக்கிறு - பின் தங்கச் செய்பவனே!
73.யா அவ்வலு -ஆரம்பமானவனே!
74.யா ஆகிரு -இறுதியானவனே!
75.யா ழாஹிறு - பகிரங்கமானவனே!
76.அல்பாத்தினு -அந்தரங்கமானவனே!
77.அல்வாலீ - அதிகாரப் பொறுப்புள்ளவனே!
78.அல்முத்த ஆலி - உயர்பதலி உள்ளவனே!
79.அல்பர்ரு -நன்றியளிப்பவனே!
80.அத்தவ்வாபு - பட்சாதாபிகளை மீட்பவனே!
81.அல்முன்தகீமு - பழிவாங்குபவனே!
82.அல்அஃபுவ்வு - சகிப்பவனே!
83.அற்றவூஃபு -இரக்கசிந்தையுள்ளவனே!
84.மாலிக்குல் முல்கி -அரசாட்சிக்கு உரியவனே!
85.யா தல் ஜலாலி வல் இக்ராம் - கீர்த்தியும் சிறப்பும் உள்ளவனே!
86.அல்முக்ஸிது - நியாயம் செய்பவனே!
87.அல்ஜாமிஉ - சகலமும் பொதிந்தவனே!
88.அல்கனிய்யு - தேவையற்றவனே!
89.அல்முஃனீ -தேவையற்றவனாக ஆக்குபவனே!
90.அல்மானிஉ - துன்பம் தடுப்பவனே!
91.அள்ளார்ரு - துன்பமடையச் செய்பவனே!
92.அந்நாஃபிஉ - பயனளிப்பவனே!
93.அந்நூரு - ஒளியளிப்பவனே!
94.அல்ஹாதீ - நேர்வழி செலுத்துபவனே!
95.அல்பதிஉ - புதுமை செய்பவனே!
96.அல்பாகீ - நிலையாக இருப்பவனே!
97.அல்வாரிது - உரிமையாளனே!
98.அர்ரஷீது - நேர்வழியிலிருப்பவனே!
99.அஸ்ஸபூரு - பொறுமையாளனே!

No comments:

Post a Comment