Wednesday, August 20, 2014

ஒளு செய்வது எப்படி?

ஒளுவின் ஃபர்ளுகள் ஆறு


”ஃபர்ளு”என்பது எந்த ஒரு செயலை நாம் செய்தாலும் அதில் சில அம்சங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கும் சொல்லாகும்.எனவே கீழ் வரும் செயல்களைக் கண்டிப்பாக செய்து முடிக்க வேண்டும். 

1.நாம் ஒளுச் செய்கிறோம் என்று மனதால் எண்ண(நிய்யத்) வேண்டும்.


2.அந்த எண்ணத்துடனே (நிய்யத்துடன்) முகத்தை கழுவ வேண்டும்.

l
                                                              
தலைமுடி ஆரம்பிக்கும் இடத்திற்கும் நாடிக்கும் இடையிலுள்ள பகுதிகள் அனைத்தும் தண்ணீரால் கழுவ வேண்டும்.


                                   


3. முழங்கைகள் உட்பட இரு கைகளையும் கழுவ வேண்டும்.


                                        

4.தலையின் சிறிது பாகத்தைத் தண்ணீரால் தடவ வேண்டும்.
 5.கணைக் கால்கள் உட்பட இரு கால்களயும் கழுவ வேண்டும்.             
6.இவையணைத்தையும் வரிசையாக செய்து முடிக்க வேண்டும்.



ஒளூவின் சுன்னத்துக்கள் பதினைந்து


1.أعود ،بسم அவூது, பிஸ்மி ஓதுதல்.
2.பல் துலக்கல்.
3.மணிகட்டுக்கள் வரை இரு கைகளையும் கழுவுதல்.


4.வாய்க் கொப்பளித்தல்.


5.மூககை சுத்தம் செய்தல்.



6.அடர்ந்த தாடியைக் குடைந்து கழுவுதல்.
7,8.கை, கால் களின் விரல்களைக் குடைந்து கழுவுதல்.
9.தலை முழுவதையும் தண்ணீரால் தடவுதல்.




10.இரு காதுகளையும் தடவுதல்.



11.வலது பாகத்தை முதலில் கழுவுதல்.
12.ஒளுவின் உறுப்புக்களை நன்றாக தேய்த்துக் கழுவுதல்.
13.ஒவ்வொரு உறுப்புக்களையும் மூன்று தட்வை கழுவுதல்.
14,15.பர்ழில் கூறப்பட்ட அளவைவிட அதிகமாய் கை கால்களை கழுவுதல்.
காரணம்(உதாரணமாக முழங்கைகளை கழுவும்போது சிறிது கூடுதல் இடத்தை கழுவுவதினால் கவனக் குறைவைத் தடுக்கலாம். கிடைக்கும் நன்மைகளை முழுமையாகப் பெறலாம்)

No comments:

Post a Comment