Saturday, August 16, 2014

காமராஜர் ஒரு சகாப்தம்,

காமராஜர் ஒரு தடவை வெளியூர் போய்விட்டு எழும்பூர் ரெயில்நிலையத்தில் வந்து இறங்கினார். கிடுகிடுவென்று ஸ்டேஷனை விட்டு வெளியில் வந்தவர், ஒரு சைக்கிள் ரிக்ஷாவை கூப்பிட்டு ஏறி உட்கார்ந்து திருமலைப்பிள்ளை சாலைக்கு போகணும் என்றார்.
தன் வீட்டு வாசலில் ரிக்ஷாவை நிறுத்தி எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டுக் கொடுத்தார். அப்போது ரிக்ஷாக்காரர் காமராஜரைப் பார்த்து, "வெளியூரா... காமராஜர் அய்யாவைப் பார்க்க வந்து இருக்கீங்களா?'' என்றார். காமராஜர் சிரித்துக்கொண்டே வீட்டுக்குள் விறுவிறுவென்று சென்று விட்டார்.
வாசலில் நின்றிருந்த காவலாளி ஓடிவந்து, "யோவ்... என்னய்யா நீ... அவர்தான் நம்ம முதல்-அமைச்சர்'' என்றார். ரிக்ஷாக்காரர் திகைத்துப் போய்விட்டார்.

No comments:

Post a Comment