Friday, August 29, 2014

ஹதீஸ்கள்-ஜும்ஆத் தொழுகை

ஜும்ஆத் தொழுகை

883. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”ஜும்ஆ நாளில் குளித்துவிட்டு இயன்றவரை சுத்தமாகித் தமக்குரிய எண்ணெய்யைத் தேய்த்துக் கொண்டு தம் வீட்டிலுள்ள நறுமணத்தைப் பூசிக் கொண்டு பள்ளிக்கு வந்து (அங்கு நெருக்கமாக அமர்ந்திருக்கும்) இரண்டு நபர்களைப் பிரித்துவிடாமல், தமக்கு விதிக்கப் பட்டதைத் தொழுதுவிட்டு, இமாம் உரையாற்றத் தொடங்கியதும் வாய் மூடி மவுனமாக இருந்தால் அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் இடையிலான பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.” என ஸல்மான் பார்ஸி(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 11. 

No comments:

Post a Comment