Tuesday, September 9, 2014

ஹதீஸ்-மரணித்தவருக்கு யாசீன் சூரா ஓதலாமா?

மரணித்தவருக்கு யாசீன் சூரா ஓதலாமா? (மார்க்கத்தை விளங்கி நடப்போம்)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
உங்களில் மரணித்தோருக்கு யாஸீன் (சூராவை) ஓதுங்கள்.
மஃகில் இப்னு யஸார் ரலியல்லாஹு அன்ஹு
அபூதாவுத் 2717, இப்னு மாஜா 1438, அஹ்மத் 19842, இப்னு அபீஷைபா 10473
ஆம், மரணித்தவர்களுக்காக யாஸீன் சூராவை ஓத வேண்டும் என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறி இருப்பதால் தான் காலா காலமாக முஸ்லிம்கள் மௌத்தான தம் தாய், தந்தையர் மற்றும் உறவினர்களுக்காக யாஸீன் சூராவை ஓதி வருகின்றனர்.
இன்ஷா அல்லாஹ் மரணித்த நம் தாய், தந்தையர், சொந்தங்களுக்காக யாசீன் ஓதி அவர்களின் மறுமை வாழ்வுக்காக துஆ செய்வோம்.

No comments:

Post a Comment