Sunday, December 14, 2014

இஸ்லாமிய வரலாற்றில் முதலில்...

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்
நிலவட்டுமாக..!
இஸ்லாமிய வரலாற்றில் முதலில்...
1.முதன் முதலாக தோன்றிய மனிதர் யார்?
ஹழ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களாகும்
2.முதன் முதலாக பாங்கு சொன்ன நபித்தோழர் யார்?
ஹழ்ரத் பிலால்;ரலியல்லாஹு அன்ஹு அவர்களாகும்
3.முதலாக தோன்றிய இறை இல்லம் எது?
புனித கஃபதுல்லாவாகும்
4.முதன் முதலாக இஸ்லாத்தை ஏற்ற ஆண் யார்?
ஹழ்ரத் ஆபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹூ அவர்களாகும்
5.முதன் முதலாக இஸ்லாத்தை ஏற்ற பெண்மணி யார்?
ஹழ்ரத் கதீஜா ரலியல்லாஹூஅன்ஹா அவர்களாகும்
6.முதலாக இஸ்லாத்தை ஏற்ற சிறுவர் யார்?
ஹழ்ரத் அலி ரலியல்லாஹீ அன்ஹீ ஆகும்.
7.முதன்முதலாக இஸ்லாத்தை ஏற்ற அடிமை யார்?
ஹழ்ரத் ஸைத் ரலியல்லாஹூ அன்ஹூ ஆகும்.
8.முதன் முதலாக இஸ்லாத்திலே ஷஹுதான பெண் யார்?
ஹழ்ரத் சுமையா ரலியல்லாஹு அன்ஹு அவர்களாகும்
9.முதன் முதலாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருமணம் செய்த பெண் யார்?
ஹழ்ரத் அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்களாகும்.
10.முதன் முதலாக காற்றடித்து சாய்ந்த மரம் எது?
நூஹ் நபி அலைஹிஸ்ஸலாம் கப்பல் செய்ய பயன்படுத்திய மரமான அஷ்ஷாஜ் ஆகும்.
11.முதன் முதலாக வெண்ணிற நரைமுடி யாருக்கு ஏற்பட்டது?
ஹழ்ரத் இப்ராஹீம் (அலை)அவர்களுக்காகும்
12.முதன் முதலாக மறுமை நாளில் எழுப்படுப்பவர் யார்?
முஹம்மது நபி (ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம்)
13.முதன்முதலாக மறுமை நாளில் ஆடை அணிவிக்கப்படுபவர் யார்?
ஹழ்ரத் இப்ராஹீம் (அலை)
14.முதன் முதலாக நபி ( ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம்) அவர்களின் கரத்தால் கட்டப்பட்ட பள்ளி எது?
மஸ்ஜிதே குபா
15.முதன் முதலாக நபி (ஸல்) அவர்களால் தொழ அவர்களால் வைக்கப்பட்ட ஜனாஸா எது?
ஹழ்ரத் ஆஸத் பின் ஜராரா (ரலி) அவர்களின் ஜனாஸாவாகும்.
16.முதன்முதலாக தீனுடைய கல்வியை கற்று கொடுப்பதற்காக ஆசிரியராக நபி (ஸல்) அவர்களால் நியமனம் செய்யப்பட்டு அனுப்பப்பட்ட ஸஹாபி யார்?
ஹழ்ரத் முஸ்அப் இப்னு உமைர் (ரலி)
17.முதன்முதலாக மக்காவிலிருந்து மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்த பின் பிறந்த முதல் குழந்தை யார்?
ஹழ்ரத் அப்துல்லாஹ்(ரலி)இவர்கள் ஹழ்ரத் ஜூபைர் (ரலி)
ஹழ்ரத் அஸ்மா (ரலி) இந்த தம்பதிகளின் மகனாவார்.
18.முதன்முதலாக இஸ்லாத்திற்காக உயிர் துறந்த ஆண் தியாகி யார்?
ஹழ்ரத் அம்மார் பின் யாஸிர் (ரலி)
19.முதன் முதலாக இஸ்லாத்திற்காக உயிர்துறந்த பெண் தியாகி யார்?
ஹழ்ரத் சுமைய்யா (ரலி)
20.முதன் முதலாக நபி(ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம்) அவர்கள் மதீனா சென்ற பின் யார் வீட்டில் தங்கினார்கள்?
ஹழ்ரத் அபூ அய்யூபுல் அன்ஸாரி (ரலி)
21.முதன் முதலாக தொழுகையை தொழுத பெண்மணி யார்?
அன்னை கதீஜா (ரலி)
முதன் முதலாக கொலை செய்யப்பட்டவர் யார்?
ஹழ்ரத் ஆதம் (அலை) அவர்களின் மகனார் ஹாஃபிலாகும்.
22.முதன் முதலாக சுவனத்திலே நுழைபவர் யார்?
ஹழரத் கண்மனி நாயகம் (ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம்) அவர்களாகும்.
23.முதன் முதலாக முஹம்மது நபி (ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம்) அவர்களின் மறைவிற்கு பின் மரணமான நபியின் சொந்தக்காரர் யார்?
முஹம்மது நபி (ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம்) அவர்களின் அன்பு மகளார் அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்களாகும் நபி (ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம்) அவர்கள் இறந்த6வது மாதத்திலே அன்னை ஃபாத்திமா (ரலி) இறந்தார்கள்
24.முதன் முதலாக மக்கா வெற்றி பெற்ற பின் நபிகளாரோடு மக்காவிலே நுழைந்த தோழர்கள் யார்?
யார்?உஸாமதிப்னு ஸைத் (ரலி), பிலால் (ரலி), உஸ்மானிப்னு தல்ஹா (ரலி) ஆகியோராகும்.
25.முதன் முதலாக சுவனவாசிகளுக்கு வழங்கப்படும் உணவு எது?
மீனின் சினைப் பகுதியாகும்.
26.முதன் முதலாக கப்ரில் கேட்கப்படும் கேள்வி எது?
தொழுகையைப்பற்றியாகும்.
27.முதன் முதலாக ஸம்ஸம் நீரை அருந்தியவர் யார்?
ஆண்களில் ஹழ்ரத் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்)
பெண்களில் அன்னை ஹஜிரா (ரலி)
28.முதன் முதலாக மஸ்ஜிதுன் நபவியான மதினா பள்ளியிலே விளக்கேத்திய ஸஹாபி யார்?
ஹழ்ரத் தமீமுத் தாரீ (ரலி) அவர்களாகும்.

No comments:

Post a Comment