Saturday, April 25, 2015

பொது அறிவு அறிந்து கொள்வோம்..............!

* தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் அறிஞர் அண்ணா.
* தமிழகத்தில் உள்ள மிகப் பெரிய அணைக்கட்டு மேட்டூர் அணைக்கட்டு.
* தமிழகத்தில் உள்ள மிக உயர்ந்த சிகரம் தொட்டபெட்டா.
* தமிழகத்தில் 1526-ம் ஆண்டு நாயக்கர் ஆட்சி உதயமானது.
* சியாச்சின் மலையில் உள்ள போர் தளத்திற்குச் சென்ற முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம்.
* இந்தியாவின் பால் மனிதர் என்று அழைக்கப்படுபவர் அமுல் நிறுவனத் தலைவர் குரியன். நாட்டில் பால் உற்பத்தியைப் பெருக்க இவர் நடவடிக்கை எடுத்தார்.
* குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி லட்சுமி ஷைகல்.
* பனிச் சிறுத்தைகள் இமயமலை பிரதேசத்தில் வசிக்கின்றது.
* கங்காரு ஒரே தாவலில் 30 அடிகள் தூரம் வரை தாண்டும்.
* மிக விரைவாக குட்டிகளை ஈனும் பாலூட்டி சுண்டெலி.
* போலார் கரடி ஆர்க்டிக் பிரதேசத்தில் வசிக்கின்றது.
* யாக் என்ற வகை எருது காணப்படும் நாடு திபெத்.
* எலும்புக் கூடில்லா விலங்கு ஜெல்லி மீன்கள்.
* கடல் சிங்கங்கள் அண்டார்டிகா கடல் பிரதேசத்தில் அதிகளவில் கானப்படுகின்றன.
* இமயத்தின் ஒரு சிகரம் நங்க பர்வதம். இதன் உயரம் 8,126 மீட்டர் .
* உலகிலேயே மிக நீளமான நெடுஞ்சாலை பான்-அமெரிக்கன் நெடுஞ்சாலை. இதன் நீளம் 24,140 கி.மீட்டர்.
* இந்தியாவில் மிகவும் நீளமான சாலை கிரான்ட் டிரங்க் ரோடு.
* இந்தியாவில் உள்ள மிகவும் உயரமான அணைக்கட்டு பக்ராநங்கல். உயரம் 226 மீட்டர்.
* எல்லோரா குகைக் கோயில் ஒளரங்காபாத் அருகே அமைந்துள்ளது.
* உலகின் மிகப் பெரிய தேவாலயம் ஆப்பிரிக்காவில் உள்ள ஐவரி கோஸ்ட்டில் உள்ளது.

No comments:

Post a Comment