Sunday, August 9, 2015

ஹதீஸ்-உலக முடிவு நாள் (லஹ்வுள் மஹ்பூலில் எழுதபட்டிருப்பது)

அக்கிரமக்காரர்கள் வசிக்கும் எந்த ஊரையும் உலக முடிவு நாளுக்கு முன்னதாக நாம் அழிக்காமலோ வேதனை செய்யாமலோ விடுவதில்லை .இப்படிதான் லஹ்வுள் மஹ்பூலில் எழுத பட்டிருக்கிறது -அல் குர்ஆன்
ஹஜ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள் .
1. பொது சொத்து சொந்த சொத்தாக கருதப்படுவது .
2. பிறர் கொடுத்த அமானிதத்தை தான் பெற்ற லாபமாக கருதி பயன் படுத்துவது 
3. தான் கொடுக்க வேண்டிய ஜகாத் பொருளை கொடுக்காமல் இருப்பது . 
4.அறிவும் நன்னடத்தையும் நோக்கமில்லாமல் (பணம் சம்பாதிப்பதை மட்டும் நோக்கமாக வைத்து )கல்வி கற்றுக்கொடுக்கப்படுவது .
5.ஒருவன் தன் மனைவிக்கு முழுமையாக கட்டுப்பட்டு நடப்பது
6. தாயை துன்புறுத்துவது .
7. தந்தையை வெருப்பது .
8. பள்ளிவாசல்களில் கூச்சல் குழப்பம் விளைவிப்பது
9. குற்றவாளிகளே நாட்டின் தலைவர்களாக வருவது
10. தரம் கெட்டவர்களே சமூகத்தை வழி நடத்தி செல்வது
11.ஒரு மனிதன் துன்பம் தருவான் என பயந்து அவனுக்கு கண்ணியம் செலுத்துவது .
12.நாட்டியமாடும் பெண்கள் அதிகரிப்பது
13.வீண் பொழுது போக்கும் ஆண்கள் அதிகரிப்பது
14. மதுபானங்கள் தாராளமாக அருந்தப்படுவது
15. சமுதாயத்தின் கடைகோடி மக்கள் மூத்த குடி மக்களை குறை பேசி திரிவது
இப்படிப்பட்ட 15 செயல்களும் மிகைத்துவிட்டால் நெருப்பு காற்று ,பூகம்பங்கள் ,நிலச்சரிவுகள்,கல் மழை பொழிதல் போன்ற நிகழ்வுகளை எதிர்பாருங்கள் . இந்நிகழ்வுகள் அனைத்தும் கயிர் அறுந்து விட்ட முத்து மாலையில் ஒன்றன் பின் ஒன்றாக முத்துக்கள் எப்படி வரிசையாக விழுமோ அதே போல் இந்த நிகழ்வுகளும் தொடர்படியாக நடக்கும் . திர்மிதி

No comments:

Post a Comment