Wednesday, December 14, 2016

ஹதீஸ் - சூறாவளிக் காற்று வீசும்போது...!!!

சூறாவளிக் காற்று வீசும்போது...!!!
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சூறாவளிக் காற்று வீசும்போது
”இறைவா இந்தக் காற்றின் நன்மையையும் அதனுள்ளே மறைந்திருக்கும் நன்மையையும் அது எதனுடன் அனுப்பப் பெற்றுள்ளதோ அதன் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன்.
இந்தக் காற்றின் தீங்கிலிருந்தும் அதனுள்ளே மறைந்திருக்கும் தீங்கிலிருந்தும் அது எதனுடன் அனுப்பப் பெற்றுள்ளதோ அதன் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்”
என்று கூறுவார்கள்.
நூல் : முஸ்லிம் 1640

No comments:

Post a Comment