Thursday, November 27, 2014

பொது அறிவு,

முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான்.
கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறையைக் கண்டறிந்தவர் எட்வர்ட் ஹென்றி.

மீன் தன் வாழ்நாள் இறுதி வரை வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும்.
எறும்புகள் தூங்குவதில்லை.
கங்காரு குட்டி பிறக்கும் போது ஒரு இன்ச் நீளம் மட்டுமே இருக்கும்.
உதட்டுச் சாயத்தில்(லிப்ஸ்டிக்) மீனின் செதில்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இறால்மீனின் இதயம் அதன் தலையில் இருக்கிறது.
ஒரு பசு தன் வாழ்நாளில் 2 லட்சம் குவளைகள் பால் வழங்குகிறது.
ஈ என்ற ஒலியுடன் முடியும் சொற்களுக்கு பூனைகள் உடனே செவிமடுக்கும்.
பூனைகளால் நூறு விதமாக ஒலியெழுப்ப முடியும்.
நாய்களால் பத்து விதமாக ஒலியெழுப்ப முடியும்.
கரப்பான் பூச்சியால் ஒன்பது நாள்கள் தலை இல்லாமல் வாழ முடியும்.அதன் பின்னரே பசியால் செத்துப் போகும்.
ஒரு மரம்கொத்தியால் ஒரு நொடியில் இருபது முறை மரத்தைக் கொத்த முடியும்.
பச்சோந்தியின் நாக்கு அதன் உடம்பைப் போல் இரண்டு மடங்கு நீளம் கொண்டது.
பாலூட்டிகளின் இரத்தம் சிவப்பு,பூச்சிகளின் இரத்தம் மஞ்சள்,நீர்வாழ் உயிரினங்களின் இரத்தம் நீள நிறமுடையது.
எறும்புகள் 16 வருடம் வரை வாழக் கூடியவை.
எறும்பின் வாசனை நுகரும் சக்தி,நாயின் மோப்பச் சக்திக்கு ஒப்பானது.
பன்றிகளால் அண்ணாந்து பார்க்க முடியாது.
முதலைகளால் தன் நாக்கை வெளியே நீட்ட முடியாது.
ஒரு நத்தை மூன்று ஆண்டுகள் வரை தொடர்ந்து தூங்கும்.
பனிக்கரடிகள் எல்லாவற்றையும் தம் இடது கைகளாலேயே செய்யும்.
பட்டாம்பூச்சிகள் தம் பாதங்கள் வழியே சுவையை உணரும்.
யானைகளால் குதிக்க முடியாது.
மாகரெல் என்ற மீன் வகை ஒரே நேரத்தில் ஐந்து லட்சம் முட்டைகளை இடும்.
ஆமைகளுக்கு பற்கள் கிடையாது.
கடல் ஆமைகளில் ஆயிரத்தில் ஒன்று தான் குஞ்சு பொறித்தபின் உயிர் வாழும்.
ஒட்டகங்களால் உமிழ் நீரை துப்ப முடியும்.
நெருப்புக் கோழியால் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட முடியும்.
பிளாஸ்டிக் உடைவதற்கு 500 ஆண்டுகள் ஆகின்றன.
உலகில் மிக கொடூரமான நில நடுக்கம் 1557ல் சீனாவில் நடந்தது. இதில் சுமார் 8 லட்சம் மக்கள் இறந்தனர்.
நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.
சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.
பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.
நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.
கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு – இதயம்.
மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.
ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.
மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.
பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.
உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.
ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூசணி பழங்களை உற்பத்தி செய்து விடலாம்.
பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.
பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.
நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.
நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.
யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே – யானையின் உயரம்.
ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.
தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் – மனிதன்.
முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை – தேன்சிட்டு.
தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்கத் தெரியாது.
சூரியனிலிருந்து புறப்படும் ஒளி பூமியை அடைய 8 நிமிடம் 30 வினாடிகள் எடுக்கின்றது.
சராசரியாக ஒரு மனிதன் ஐந்து முறை சிரிக்கின்றான்.
ஆல்பிரட் நோபல் (நோபல் பரிசுகள் இவர் பெயரால் கொடுக்கப்படுகின்றன) 1866ஆம் ஆண்டு டைனமைட்டை கண்டுபிடித்தார்.
எபோலா என்னும் வைரஸ் தாக்கினால், ஐந்தில் நான்கு மனிதர்கள் இறந்துவிடுவார்கள்.
உலகின் மிகச்சிறிய பறக்கும் பூச்சி, ஈயின் கண்ணைவிட சிறியது.
மிக வேகமாக விழும் மழைத்துளியின் வேகம் மணிக்கு 18 மைல்கள்.
பிற‌க்கும் 2000 குழ‌ந்தைக‌ளில் ஒரு குழ‌ந்தை ப‌ற்க‌ளுட‌ன் பிற‌க்கின்ற‌ன‌.
சில‌ வகை ச‌வுக்கு ம‌ர‌ங்க‌ள் ஒரு நாளைக்கு 3 அடி வ‌ள‌ர்கின்ற‌ன.
ச‌ராச‌ரியாக‌ ஒரு ம‌னித‌ன் 4850 வார்த்தைக‌ளை 24 ம‌ணி நேர‌த்தில் ப‌ய‌ன்ப‌டுத்துகின்றான்.
லியானார்டோ டார்வின்சி ஒரு கையில் எழுதிக்கொண்டே ம‌று கையில் வ‌ரையுவும் செய்வார்.
க‌ண்க‌ளை திற‌ந்துவைத்து தும்முவ‌து சாத்திய‌மில்லை.
நாம் ப‌ய‌ன்ப‌டுத்தும் toothbrushக‌ளை க‌ழிவ‌றையில் இருந்து குறைந்த‌து ஆறு அடி த‌ள்ளி வைக்க‌ வேண்டுமென‌ ப‌ல்ம‌ருத்துவ‌ர்க‌ள் ப‌ரிந்துரைக்கின்றார்க‌ள்.
க‌ர‌ப்பான்பூச்சி த‌லையின்றி ப‌த்து நாள் வ‌ரை உயிர் வாழும்
விர‌ல்க‌ளில் ந‌க‌ங்க‌ள் வ‌ள‌ர்வ‌து இய‌ற்கை. அதில் ஆட்காட்டி விர‌லில் மிக‌ நிதான‌மாக‌வும், ந‌டுவிர‌லில் மிக‌ வேக‌மாக‌வும் வ‌ள‌ருமாம்.
நான்கு வய‌து குழ‌ந்தை நாளைக்கு நானூறு கேள்விக‌ள் கேட்கின்ற‌தாம்.
ஒவ்வொருவ‌ரின் கை ரேகையும் த‌னித்துவ‌மான‌து. அதே போல‌ தான் நா ரேகையும்
ப‌ன்றிக‌ள் தானாக‌ வான‌த்தை பார்ப்ப‌து சாத்திய‌மே இல்லை.
வினிகரில், அசிட்டிக் அமிலம் உள்ளது.
தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின்போது ஆக்சிஜனை வெளியிடுகின்றன.
சிங்கப்பூரின் முந்தைய பெயர், டெமாஸெக்.
பிரபல இசைமேதையான பீத்தோவன், ஜெர்மனியில் உள்ள `பான்’ நகரில் பிறந்தார்.
‘சீனக்குடியரசின் தந்தை’ என்று போற்றப்படுபவர், சன்யாட்சன்.
ஒருசெல் உயிரியான அமீபாவின் உடல், புரோட்டோபிளாசத்தால் ஆனது.
`வைட்டமின் ஏ’-ன் வேதியியல் பெயர் ரெட்டினால்.
சூரியக்குடும்பத்தைக் கண்டறிந்தவர், கோபர் நிக்கஸ்.
`பாரத ரத்னா’ விருது பெற்ற முதல் பெண்மணி, இந்திரா காந்தி.
சீனர்கள் தான் முறையான நெல் சாகுபடி முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள்.
உயிரியல் கோட்பாட்டின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர், சார்லஸ் டார்வின்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஏவுகணை, பிரித்வி.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம்’, லக்னோவில் அமைந்துள்ளது.
முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம், மீன்.
`திருவருட்பா’வை இயற்றியவர், வள்ளலார்.
பாலில் `லாக்டிக் அமிலம்’ உள்ளது.
குஜராத் மாநிலத்தின் புகழ்பெற்ற நடனம், தாண்டியா.
இன்சுலின், கணையத்தில் சுரக்கிறது.
பெரு நாட்டின் தலைநகரத்தின் பெயர், லிமா.
முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, இந்தியா.
`பிரமிடு கோவில் நாடு’ என்று அழைக்கப்படுவது, பர்மா.
இத்தாலி நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவர், முசோலினி.
சுமத்ரா தீவில் மலரும் ராப்லிசியா ஆர்னல்டை எனும் பூ தான், உலகிலேயே மிகப்பெரிய பூவாகும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் சுமார் 11/2 கிலோ எடையுடைய மூளை உள்ளது.
கால்சியம் கார்பனேட் என்ற ரசாயனப்பொடியைக் கட்டியாக்கி சாக்பீஸ் தயாரிக்கப்படுகிறது.
நத்தை ஒரு மைல் (1.6 கிலோமீட்டர்) தூரம் செல்வதற்கு, சுமார் 17 நாட்கள் வரை ஆகும்.
ஆக்வா ரெஜியா என்ற திரவத்தில் கரைத்தால், தங்கம் கரைந்து விடும்.
பல்பில் உள்ள டங்ஸ்டன் இழை, சுமார் 3400 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் பெற்றது.
மாலத்தீவில் விளைகிற லொடாய்சியா என்ற இரட்டைப் பனங்கொட்டை தான், உலகிலேயே மிகப்பெரிய விதையாகும்.
நம்முடைய தலைமுடியில் இருந்து அமினோ அமிலம் தயாரிக்கப்படுகிறது. இது மருந்து மற்றும் ரசாயனப் பொருட்கள் தயாரிப்பில் உதவுகிறது.
ஒருவரின் பிறப்பிலேயே அமையும் ரத்த வகை, அவருடைய ஆயுள் முழுவதும் மாறாது.
ஐரோப்பாவில், மரங்களில் வாழும் தவளைகள் அதிகம். இவை குரங்குகளைப் போல ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவும்.
நெருப்புக்கோழி, தனது உணவைச் செரிக்க வைப்பதற்காக சிறு சிறு கற்களை விழுங்கும். இது, மற்ற பறவையினங்களில் காணப்படாத வினோதமான செயல்.
நல்ல நிலையில் உள்ள மனிதரின் கண்கள், சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வண்ணங்களின் வேறுபாடுகளை அறியக்கூடியது.
பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபலமான ஈபிள் கோபுரத்தை வடிவமைத்தவர், கஸ்டவ் ஈபிள். இவர்தான் அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை வடிவமைத்தவர்.
ஒரு மனிதனின் சராசரி உயரம், அவனுடைய தலையின் உயரத்தைப்போல் சுமார் ஏழரை மடங்கு இருக்கும்.
தந்தி அனுப்புவதற்கான சங்கேதக்குறியை, 1837-ம் ஆண்டு சாமுவேல் மோர்ஸ் என்ற அமெரிக்க அறிஞர் கண்டுபிடித்தார்.
குழந்தை பிறந்த 15 நாட்களுக்குப் பிறகே கண்ணீர்ச் சுரப்பி வளர்கிறது.
தீப நகரம் என்று அழைக்கப்படுவது, மைசூர்.
நெருப்புக்கோழி மணிக்கு சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும்.
பைசா நகர சாய்ந்த கோபுரத்தில் 294 படிக்கட்டுகள் உள்ளன.
அன்னாசிப் பழத்தில் விதை கிடையாது.
ஒளிச்சிதறலைக் கண்டுபிடித்தவர், சர். சி.வி.ராமன்.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி, அன்னை தெரசா.
கலர் டி.வி.யை முதன்முதலில் உலகத்திற்கு அறிமுகம் செய்த நாடு, பிரான்சு.
பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் அறிவியல் துறைக்கு ஆர்னித்தாலஜி என்று பெயர்.
மழையின் அளவைக் கண்டறிய உதவும் கருவி, ரெயின்கேஜ்.
விலங்குகளில் அறிவுள்ளதாக கருதப்படுவது, டால்பின்.
ராணித்தேனீயின் ஆயுட்காலம், 3 முதல் 4 ஆண்டுகள்.
கடற்குதிரை மீன், ஒரே நேரத்தில் தனது கண்களால் இரண்டு வெவ்வேறு பொருட்களைப் பார்க்கும் தன்மை கொண்டது.
இந்தியாவின் தேசிய நீர்வாழ் உயிரினம் – திமிங்கலம்.
விதையில்லாமல் முளைக்கும் தாவரம் – தர்ப்பைப்புல்.
உலகின் வெண்தங்கம் – பருத்தி.
இந்தியாவின் முதல் பெண் கவர்னர் – சரோஜினி நாயுடு.
இந்தியாவின் மிக உயரமான கோவில் கோபுரம் – முருதேஷ்வரா கோவில் (கர்நாடகா).
ஆரிய இனத்தவர்களின் தாயகம், மத்திய ஆசியா.
விஞ்ஞானக் கழகத்தை ஏற்படுத்தியவர், சையது அகமது கான்.
`குடியரசு’ என்னும் நாளிதழை நடத்தியவர், பெரியார்.
வங்கப்பிரிவினை ரத்து செய்யப்பட்ட ஆண்டு, 1911.
இந்தியாவை ஆட்சி செய்த கடைசி இந்தியப் பேரரசர், ஹர்ஷர்.
வினிகரில், அசிடிக் அமிலம் உள்ளது.
தாவரங்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுப்பது, பொட்டாசியம்.
சைக்கிளைக் கண்டுபிடித்தவர், மாக்மில்லன்.
திரவ நிலையில் உள்ள உலோகம், பாதரசம்.
`தாவர வகைப்பாட்டியலின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர், லின்னேயஸ்.
ரத்தச் சிவப்பணுக்களின் ஆயுட்காலம், 120 நாட்கள்.
இந்திய துணை ஜனாதிபதியின் பதவிக்காலம், 5 ஆண்டுகள்.
தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம், ஆனைமுடி.
நீண்ட தொலைவு பறக்கும் ஆற்றலும், நீண்ட நேரம்
வானில் வட்டமிடும் திறனும் கொண்ட பறவை, புறா.
உயிரினங்களில் நெடுநேரம் மூச்சை அடக்கும் சக்தி பெற்றது, முதலை.
பறவைகளிலேயே மிகவும் நீளமான நாக்கு உடையது, மரங்கொத்தி.
தவளை, தன்னுடைய கண்கள் மூலம் ஒலியைக் கேட்கிறது.
`விவசாயிகளின் எதிரி’ என்று அழைக்கப்படுவது, எலி.
பூனையின் விலங்கியல் பெயர், பெலிஸ்கேடால்.
பூச்சி இனங்களில் அதிக அறிவு உடையது, எறும்பு.
நேருவுக்கு 84 பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.
அமிர்தசரஸ் நகரை உருவாக்கியவர், குரு ராம்தாஸ்.
`ஸ்காலிப்’ என்ற கடல் சிப்பிக்கு நூறு கண்கள் உள்ளன.
ஆண்டுதோறும் கழுதைக் கண்காட்சி நடக்கும் இடம், உஜ்ஜைனி.
வாயுக்களின் அழுத்தத்தை அளவிடும் கருவி, மானோ மீட்டர்.
உலகத் தொழிலாளர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு, 1919.
பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரம், சூரியன்.
பால், முட்டை, கேரட், வெண்ணை, மீன், பப்பாளி ஆகியவற்றில் `வைட்டமின் ஏ’ அதிகமாக உள்ளது.
`உயிரின் ஆறு’ என அழைக்கப்படுவது, ரத்தம்.
ஒரு உணவு நிலையில் இருந்து மற்றொரு உணவு நிலைக்கு சக்தி கடத்தப்படுவதே `உணவுச்சங்கிலி’ எனப்படும்.
பூனையின் ஆயுட்காலம், 12 வருடங்கள்.
ராக்கெட்டுகளில் எரிபொருளாகப் பயன்படும் சேர்மம், ஹைட்ரஜன்.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு, 1986.
தமிழ்நாட்டில் உள்ள கடற்கரையின் நீளம் சுமார் 1000 கிலோமீட்டர்.
நிதி ஆணையத்தின் பதவிக்காலம், 5 ஆண்டுகள்.
நம்முடைய கால் பாதங்களில் 16 எலும்புகள் இருக்கின்றன.
போலியோ தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்தவர், ஆல்பர்சேலின்.
அஜந்தாவில் உள்ள குகைக்கோவில்களின் எண்ணிக்கை, 27.
`ரஷ்யப்புரட்சி’யை தலைமையேற்று நடத்தியவர், ஜோசப் ஸ்டாலின்.
தட்டைப்புழுவின் விலங்கியல் பெயர், டீனியா.
செஸ் விளையாட்டு தோன்றிய நாடு, இந்தியா.
வாத்துகள், அதிகாலை நேரத்தில் மட்டுமே முட்டையிடுகின்றன.
சிங்கப்பூரின் பழைய பெயர், டெமாஸெக்.
வானவில்லில் 7 நிறங்கள் உள்ளன என்பதைக் கண்டுபிடித்தவர், ஜசக் நியுட்டன்.
`திராவிட மொழியியல் ஆய்வின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர், கால்டுவெல்.
மூன்றாவது பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு, 1761.
வரிக்குதிரை, ஆப்பிரிக்க கண்டத்தில் மட்டுமே காணப்படுகிறது.
சிப்பியில் முத்து உருவாக சுமார் 15 ஆண்டுகள் ஆகும்.
இந்தியாவிலேயே அதிக நூலகங்களைக் கொண்ட மாநிலம், கேரளா.
`செவாலியர்’ விருதை வழங்கும் நாடு, பிரான்ஸ்.
வண்ணப் புகைப்படத்தைக் கண்டுபிடித்தவர், ஜார்ஜ் ஈஸ்ட்மன்.
ஹார்மோன்களே இல்லாத உயிரினம், பாக்டீரியா.
`அரபிக்கடலின் ராணி’ என்று வர்ணிக்கப்படும் நகரம், கொச்சி.
மனிதன் ஒரு நிமிடத்தில் சுவாசிக்கும் காற்றின் அளவு, சுமார் 15.5. லிட்டர்.
`பிக் ஆப்பிள்’ என்று அழைக்கப்படும் அமெரிக்க நகரம், நியுயார்க்.
`இந்தியாவின் ஏவுகணை மனிதர்’ என்று போற்றப்படுபவர், ஏ.பி.ஜே. அப்துல்கலாம்.
நீரைவிட ரத்தத்துக்கு 6 மடங்கு அடர்த்தி அதிகம்.
ஒரு நெருப்புக்கோழியின் முட்டை, 22 கோழி முட்டைகளுக்கு சமம்.
ஒரு புள்ளியில் சுமார் 70 ஆயிரம் அமீபாக்களை நிரப்பலாம்.
உலக வானிலை மையம் அமைந்துள்ள இடம், ஜெனீவா.
யுரேனஸ் கிரகம் சூரியனைச் சுற்றி வரும் காலம், 84 ஆண்டுகள்.
உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை, டிரான்ஸ்-கனடா (8 ஆயிரம் கிலோமீட்டர்).
தெற்காசியாவின் மிகப்பெரிய காய்கறிச்சந்தை, ஒட்டன்சத்திரத்தில் (திண்டுக்கல் மாவட்டம்) உள்ள காந்தி மார்க்கெட்.
உலகிலேயே அதிக அளவில் மீன் பிடிக்கும் நாடு, ஜப்பான்.
புத்தர் பிறந்த இடம், லும்பினி.
`புனித நகரம்’ என்று அழைக்கப்படுவது, ஜெருசலேம்.
`பூகோள சொர்க்கம்’ எனப்படும் இடம், காஷ்மீர் (இந்தியா).
உலகின் மிகப்பெரிய தீபகற்பம், அரேபியா.
தொலைக்காட்சி நிலையங்கள் அதிகம் உள்ள நாடு, அமெரிக்கா.
ஜப்பான் நாட்டில் தான் அதிக அளவில் ஆட்டோக்கள் தயாரிக்கப்படுகின்றன.
`கிரையோஜெனிக் என்ஜின்கள்’, விண்வெளி ஓடத்தில் (ராக்கெட்) பயன்படுத்தப்படுகின்றன.
சராவதி ஆற்றின் `ஜோக்’ அருவி தான் (கர்நாடகா), இந்தியாவிலேயே மிக உயரமானது.
மிகப்பெரிய பூ பூக்கும் தாவரம், `ராப்லேசியா’.
பச்சோந்தியின் நாக்கு, அதன் உடலைப்போன்று இரண்டு மடங்கு நீளமாக இருக்கும்.
100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படும் பொருள், கண்ணாடி.
15 நிமிடங்கள் மட்டுமே அரசராக இருந்தவர், 14-ம் லூயி.
`லிட்டில் கார்ப்பொரல்’ என்று அழைக்கப்பட்டவர், நெப்போலியன்.
`வாசனைப் பொருட்களின் ராணி’ என அழைக்கப்படுவது, ஏலக்காய்.
பிரிட்டனின் தேசிய மலர், ரோஜா.
இந்தியா முதன்முதலில் அணுவெடிப்புச் சோதனை நிகழ்த்திய இடம், பொக்ரான் (ராஜஸ்தான்).
யானையின் துதிக்கையில் சுமார் 40 ஆயிரம் தசைகள் உள்ளன.
நமது மூளை ஏறக்குறைய 60 லட்சம் செல்களால் ஆனது.
உலகில் மீன் இனம் தோன்றி சுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகின்றன.
இசைக்கருவிகளுள் ஒன்றான வீணையில், 7 தந்திக்கம்பிகள் உள்ளன.
எறும்பின் ஆயுட்காலம், 10 ஆண்டுகள்.
முதலைக்கு 60 பற்கள் உண்டு.
உலகிலேயே சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, கியூபா.
வீரத்தைப் பாடிய 400 சங்க இலக்கியப் பாடல்களின் தொகுப்பு `புறநூனூறு’.
இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதுவர், விஜயலட்சுமி பண்டிட்.
இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், அம்பேத்கர்.
`கறுப்பு ஈயம்’ எனப்படும் தாது, கிராபைட்.
கார்பன் மோனாக்சைடும், ஹைட்ரஜனும் சேர்ந்த கலவையின் பெயர், `நீர்வாயு’.
காற்றிலுள்ள ஈரப்பதத்தை அளக்கும் கருவியின் பெயர், ஹைக்கோ மீட்டர்.
`இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்று அழைக்கப்படுபவர், கவிக்குயில் சரோஜினி நாயுடு.
‘திருமறைக்காடு’ என்று அழைக்கப்படும் ஊர், வேதாரண்யம்.
‘பெருலா’ என்ற செடியில் இருந்து வெளிவரும் ஒரு திரவப்பொருள் தான், பெருங்காயம்.
கரிகால் சோழ மன்னனின் இயற்பெயர், திருமாவளவன்.
உயிர் காக்கும் உன்னத உலோகம் என அழைக்கப்படுவது, ரேடியம்.
மின்னூட்டத்தினை தேக்கி வைக்கும் சாதனம், மின்தேக்கி.
‘சுங்கம் தவிர்த்த சோழன்’ எனப் பெயர் பெற்ற மன்னன், முதலாம் குலோத்துங்க சோழன்.
பாம்பு, நாக்கினால் வாசனையை நுகரும் திறன் கொண்டது.
கார்கள் அதிகமுள்ள நகரம், நியூயார்க்.
யானை தினமும் சுமார் 300 பவுண்டு அளவுள்ள உணவை உட்கொள்ளும்.
நாய்க்கு வியர்ப்பது கிடையாது.
‘பறவைத்தீவு’ என அழைக்கப்படுவது, நியூசிலாந்து.
நாகலாந்தில் ஒரே ஒரு ரெயில் நிலையம் தான் உள்ளது.
வீட்டிற்கு ஒரு பியானோ உள்ள நாடு, இங்கிலாந்து.
பழங்களின் அரசன் எனப்படுவது, மாம்பழம்.
எலும்புக்கூடு இல்லாத உயிரினம், ஜெல்லி மீன்.’
ஆகஸ்டு புரட்சி’ என அழைக்கப்படுவது, வெள்ளையனே வெளியேறு இயக்கம்.
‘வாதாபி கொண்டான்’ என்று அழைக்கப்படும் மன்னன், நரசிம்ம பல்லவன்.
தென்னிந்தியாவின் உயரமான மலைச்சிகரம், தொட்டபெட்டா.
வாகனங்களில் இருந்து வெளியாகும் மாசு, கார்பன் மோனாக்சைடு.
‘கூத்தராற்றுப்படை’ என்று குறிப்பிடப்படும் சங்க இலக்கியம், மலைபடுகடாம்.
டெல்லி யூனியன் பிரதேசத்தின் முதல் பெண் முதல்வர், சுஷ்மா சுவராஜ்.
முன்னங்கால்களில் காதுகளைக் கொண்ட உயிரினம், வெட்டுக்கிளி.
‘உயிரியல் கவிஞர்’ என்று அழைக்கப்படுபவர், சர் ஜெகதீஸ் சந்திரபோஸ்.
ஐம்புலனறிவு எல்லா உயிர்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
பறவைகளுக்குப் பார்வைச் சக்தி அதிகம். வானத்தில் வட்டமிடும் பருந்து, தரையில் உள்ள பல்லியைக் கூடப் பார்த்து அதன் மீது பாய்ந்து பற்றும்.
வேட்டையாடும் விலங்குகளுக்குப் பார்வைச் சக்தி குறைவு. ஆனால் மோப்ப உணர்வு மொட்டுகள் சராசரியாக 22 கோடி என்ற அளவில் உள்ளன.
மனிதர்களுக்கு வாசனையை உணரும் மொட்டுகள் 50 லட்சம் உள்ளன. பத்தாயிரம் வெவ்வேறு விதமான வாசனைகளை நம்மால் பிரித்து அறிய முடியும்.
உயிர் வாழ்வதற்கு எல்லா உணர்வுகளும் வேண்டும் என்பதில்லை. செடிகள் வெளியிடும் கரியமில வாயுவை உண்டு வாழும் ஒரு புழு உள்ளது. அதற்கு அந்த ஒரு வாசனை மட்டுமே தெரியும்.
ஒவ்வோர் உயிரினமும் தம் உடலிலிருந்து தனித்தனி வாசனையைக் காற்றில் கலக்கிறது. வண்ணத்துப்பூச்சி தனது வாசனையால் பல மைல்களுக்கு அப்பால் உள்ள தனது இணையைக் கவரும்.
சூரியனின் புறஊதாக் கதிர்களை தேனீக்கள் உணர்கின்றன. சூரியன் இருக்குமிடத்தை வைத்து, தம் கூட்டுக்குத் திரும்பும் திசையை அவை தெரிந்துகொள்கின்றன.
தவளைக்குப் பார்வைத் திறன் குறைவு. தனது இரை மட்டுமே அதற்குப் புலப்படும்.
உலகின் மீது ஒரு மணி நேரம் விழும் சூரியசக்தி, 2 லட்சத்து 10 ஆயிரம் டன் நிலக்கரி தரும் சக்திக்கு சமம்.
கணினி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு, 1952.
மனித உடலில் அதிகளவில் உள்ள உப்பு, கால்சியம்.
கடல்நீரில் உள்ள உப்பின் அளவு, 35 சதவீதம்.
நாகாலாந்து தனி மாநிலமாக அறிவிக்கப்பட்ட ஆண்டு, 1962.
ஒரு நாளில் நாம் ஏறக்குறைய 15 ஆயிரம் முறை கண்களை இமைக்கிறோம்.
தேனீக்களுக்கு 5 கண்கள் உள்ளன.
மனிதனின் நாக்கில் 8 ஆயிரம் சுவை மொட்டுகள் உள்ளன.
செஸ் போர்டில் உள்ள வெள்ளைக் கட்டங்களின் எண்ணிக்கை, 32.
ஒரு பென்சிலைக் கொண்டு சுமார் 50 கிலோமீட்டர் நீளத்திற்கு கோடு வரைய முடியும்.
மின்சார பல்பில் ‘இனர்ட்’ என்ற வாயு பயன்படுத்தப்படுகிறது.
மனித உடலில் 640 தசைகள், 206 எலும்புகள் உள்ளன.
மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்குத் தொடர்ச்சி மலையும் இணையுமிடம், நீலகிரி.
இலைகளை உதிர்க்காத மர வகை, ஊசியிலை மரங்கள்.
இளம்வயதில் ஓவியராக இருந்தவர், ஹிட்லர்.
ஓர் எறும்பு ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி முட்டைகள் வரை இடும்.
சில வகையான ஆந்தைகளுக்கு கொம்பு போன்ற தோற்றம் உண்டு.
உலகளவில் மக்கள் பயன்பாட்டிற்காக முதன் முதலில் நூல் நிலையங்களை ஆரம்பித்தவர், ஜுலியஸ் சீசர்.
தபால்பெட்டிக்கு சிவப்பு நிறம் பூசும் பழக்கம் முதன்முதலில் 1876-ம் ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது.
செவ்வாய்க் கிரகத்தில் தொடர்ந்து 250 நாட்களுக்கு பகலாகவே இருக்கும்.
இந்திய நாட்டுப் பெண் யானைகளுக்குத் தந்தம் கிடையாது; ஆப்பிரிக்க தேசத்துப் பெண் யானைகளுக்குத் தந்தம் உண்டு.
24 மணி நேரத்தில் இதயம் சராசரியாக லட்சம் முறை துடிக்கும்.
அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழம், 8 ஆயிரத்து 381 மீட்டர்கள்.
ஒளிவிடும் தன்மை கொண்ட உலோகம், சீர்கான்.
முதன்முதலில் இந்தியாவின் உதவி ஜனாதிபதியாய் இருந்தவர், டாக்டர் ராதாகிருஷ்ணன்.
ஜவஹர்லால் நேரு பெல்லோஷிப் விருதை இரண்டு முறை பெற்ற இந்திய எழுத்தாளர், கே.கே. நாயர்.
உலக சிகரங்களில், மூன்றாவது பெரிய சிகரம், கஞ்சன் ஜங்கா.
கியூபாவில் நீண்ட காலம் ஆட்சி செய்த அதிபர், பிடல் காஸ்ட்ரோ.
சர் ஐசக் நியுட்டன் உருவாக்கிய கணித வகை, கால்குலஸ்.
செங்குத்தான நிலையிலேயே நீந்திச் செல்லும் ஆற்றல் உள்ள மீன், கடற்குதிரை.
அமெரிக்க காந்தி என அழைக்கப்பட்டவர், மார்ட்டின் லூதர்கிங்.
ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு, லிட்டில்பாய்.
நிக்கல் உலோகத்தைக் கண்டறிந்தவர் கிரான்ஸ்டட்.
மனிதனைப் போலவே நடக்கக் கூடிய பறவை, பெங்குவின்.
புறாப் பந்தயம் தோன்றிய இடம், பெல்ஜியம்.
ஒலிம்பிக் போட்டியில் கபடி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு, 1952.
ஒருகாலத்தில் மாமன்னர்கள் மட்டுமே சாப்பிடும் பழமாக அத்தி இருந்தது.
துருப்பிடிக்கும் போது இரும்பின் எடை கூடுகிறது.
நெருப்புக்கோழியை, ‘ஒட்டகப்பறவை’ என்றும் அழைக்கிறார்கள்.
பச்சையம் இல்லாத தாவரம், காளான்.
காகம் இல்லாத நாடு, நியூசிலாந்து.
பாம்பு இல்லாத தீவு, ஹவாய்.
திரையரங்கு இல்லாத நாடு, பூட்டான்.
எரிமலை இல்லாத கண்டம், ஆஸ்திரேலியா.
தலை இல்லாத உயிரினம், நண்டு.
அனிமாமீட்டர், காற்றின் வேகத்தை அளக்கப் பயன்படுகிறது.
உலகிலேயே முதன்முதலில் அமெரிக்காவில் தான் கண்வங்கி தொடங்கப்பட்டது.
சென்னை விமான நிலையம், 1945-ம் ஆண்டு கட்டப்பட்டது.

No comments:

Post a Comment