Sunday, December 7, 2014

திக்ரு - அல்லாஹ்வை நினைவு கூர்வதன் சிறப்பு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…
திக்ரு - அல்லாஹ்வை நினைவு கூர்வதன் சிறப்பு
அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
"எனவே என்னை நீங்கள் நினைவுகூருங்கள்; நான் உங்களை நினைவு கூருவேன். எனக்கு நன்றி செலுத்துங்கள்;(என் அருட்கொடைகளை மறுத்து) நன்றி மறவாதீர்கள்".(குர்ஆன் 2:152)
"இறைநம்பிகை கொண்டவர்களே, அல்லாஹ்வை அதிகம் அதிகமாக நினைவு கூருங்கள்"(குர்ஆன் 31:41)
"அல்லாஹ்வை அதிகம் அதிகமாக நினைவுகூரக்கூடிய ஆண்கள் - பெண்கள் யாரோ அவர்களுக்கு மன்னிப்பையும் மகத்தான கூலியையும் அல்லாஹ் தயார் செய்து வைத்துள்ளன்". (குர்ஆன் 32:35)
மேலும் காலையிலும் மாலையிலும் - உம் மனத்திற்க்குள் பணிவாகவும் அச்சத்துடனும் மெதுவான குரலிலும் உம் இறைவனை நினைவுகூர்வீராக! மோலும் அலட்சியமாய் இருப்பவர்களுள் நீரும் ஒருவராகி விடாதீர்" (குர்ஆன் 7:205)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தன் இறைவனை நினைவு கூருகிற மனிதன் மற்றும் தன் இறைவனை நினைவுகூராத மனிதன் இருவரின் உதாரணம் உயிருள்ளவனையும் மரணமானவனையும் போன்றதாகும்" நூல்: புகாரி -பத்ஹுல் பாரி (பாகம் 11 பக்கம் 208)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள்: நான் உங்களுக்கு ஓர் அமலை அறிவித்துத் தரவா? அது உங்களின் எல்லா அமல்களை விடவும் சிறந்தது. உங்கள் அரச(ன் இறைவ)னிடதில் மிகவும் தூய்மையானது: உங்கள் அந்தஸ்துகளை உயர்தக் கூடியது: தங்கம் வெள்ளியை நீங்கள் செலவு செய்வதை விடவும் உங்களுக்குச் சிறந்தது: மட்டுமல்ல, நிங்கள் உங்கள் எதிரிகளுடன் போரிட்டு- நீங்கள் அவர்களின் கழுத்தையும் அவர்கள் உங்களின் கழுத்தையும் வெட்டுவதை விடவும் சிறந்ததும் ஆகும்" தோழர்கள்: " அவசியம் கற்றுத் தாருங்கள் என்று. நபியவர்கள் கூறினார்கள்: 'அதுதான் அல்லாஹ்வை திக்ர் செய்வது-நினைவு கூர்வது' நூல்: திர்மிதி. பாகம்: 5. பக்கம்: 459.இப்னுமாஜா: பாகம் 2. பக்கம் 1245.பார்க்க: ஸஹீஹ் இப்னுமாஜா பாகம் 2. பக்கம் 316ஸஹீஹ் திர்மிதி பாகம்3. பக்கம் 139.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: "அல்லாஹ் கூறுகிறான்: என் அடியான் (மனிதன்) என்னைக் குறித்து என்ன எண்ணம் கொண்டுள்ளானோ அதற்கு ஏற்பவே நான் உள்ளேன். அவன் என்னை நினைவு கூறும்போது நான் அவனுடன் இருக்கிறேன். அவன் என்னை மனதினுள் நினைவு கூர்ந்தால் நானும் அவனை என் மனதினுள் நினைவு கூர்கிறேன். அவன் என்னை ஒரு கூட்டத்தில் நினைவு கூர்ந்தால் அதனை விடவும் சிறந்த கூட்டத்தில் நான் அவனை நினைவு கூர்கிறேன். அவன் என்னை நோக்கி ஒரு சாண் நெருங்கி வந்தால் நான் அவனை நோக்கி ஒரு முழம் நெருங்கிச் செல்கிறேன். அவன் என்னை நோக்கி ஒரு முழம் நெருங்கி வந்தால் நான் அவனை நோக்கி ஒரு பாகம் நெருங்கிச் செல்கிறேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவன் பக்கம் ஓடோடிச் செல்கிறேன். நூல்: புகாரி. பாகம் 8. பக்கம் 171.-முஸ்லிம் பாகம் 4. பக்கம் 2061.
அப்துல்லாஹ் இப்னு புஸ்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "ஒரு மனிதர் கேட்டார்: அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாத்தின் கடமைகள்-நெறிமுறைகள் என்னைப் பொறுத்து மிகவும் அதிகமாகி விட்டன. எனவே ஒரு விஷயத்தை எனக்கு நீங்கள் அறிவித்துத் தாருங்கள். நான் அதை உறுதியாகப் பற்றிக் கொள்வேன்" அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "உமது நாவு அல்லாஹ்வின் திக்ரில் ஈடுபட்டு பசுமையாக இருக்கட்டுமாக!" நூல்: திர்மிதி. பாகம்: 5. பக்கம்: 458.இப்னுமாஜா பாகம்:2. பக்கம்: 1246.ஸஹீஹ் திர்மிதி பாகம்: 3. பக்கம்: 139.ஸஹீஹ் இப்னுமாஜா பாகம்: 2. பக்கம்: 317.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: "எவர் அல்லாஹ்வின் வேதத்தில் இருந்து ஒரு எழுத்தை ஓதுகிறாரோ அவருக்கு அதன் பொருட்டால் ஒரு நன்மையுண்டு. அந்த ஒரு நன்மை, அதே போன்று பத்து நன்மைகளுடன் அதிகரிக்கிறது. அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் கூறவில்லை. மாறாக அலிஃப் ஒரு எழுத்து, லாம் ஒரு எழுத்து, மீம் ஒரு எழுத்து". நூல்: திர்மிதி பாகம்: 5. பக்கம்: 175.ஸஹீஹ் திர்மிதி பாகம்:3. பக்கம்: 9.அல்ஜாமிஉஸ் ஸகீர் பாகம்:5 பக்கம்:340
உக்பா இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "நாங்கள் ஸுஃப்பாவில் (மஸ்ஜிதின் முன் வராந்தாவின் திண்ணையில்) இருந்து கொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்கள் (வீட்டில் இருந்து) வெளியே வந்தார்கள். அப்போது கூறினார்கள்: "தினமும் பத்ஹாவுக்கு அல்லது அகீகிற்கு சென்று அங்கிருந்து பெரிய பெரிய கொழுத்த இரண்டு ஒட்டகங்களை பாவமோ, பந்த முறிவோ இல்லாத வகையில் கொண்டு வருவதை விரும்புபவர் உங்களில் எவரும் உண்டா?" அதற்கு நாங்கள் கூறினோம்: "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அனைவருமே அதை விரும்புகிறோம்." நபியவர்கள் சொன்னார்கள்: "உங்களில் ஒருவர் மஸ்ஜிதுக்குச் சென்று, அல்லாஹ்வின் வேதத்திலிருந்து இரண்டு வசனங்களை கற்றுக் கொடுக்கவோ, ஓதவோ செய்யலாமே! இரண்டு வசனங்களை ஓதுவது அவருக்கு இரண்டு ஒட்டகங்களை விடவும் சிறந்ததாகும். மூன்று வசனங்கள் என்றால் மூன்று ஒட்டகங்களை விடச் சிறந்ததாகும். நான்கு வசனங்கள் என்றால் நான்கு ஒட்டகங்களை விடச் சிறந்ததாகும். இவ்வாறே அவற்றின் எண்ணிக்கைகளுக்கு ஏற்ப உள்ள அத்தனை ஒட்டகங்களை விடச் சிறந்ததாகும்" நூல்: ஸஹீஹுல் முஸ்லிம் பாகம்: 1. பக்கம்: 553
.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: "ஒருவர் தான் அமர்ந்திருந்த இடத்தில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்திடவில்லையெனில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவர்மீது அது குறைபாட்டிற்குரியதாக அமைந்து விடும். ஒருவர் தான் படுத்திருந்த இடத்தில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்திடவில்லையெனில் அதுவும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவர்மீது குறைபாட்டிற்குரியதாக அமைந்து விடும்." நூல்: அபூதாவூத் பாகம்: 4. பக்கம்: 264
"எந்த ஒரு கூட்டத்தினரும் தாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்திடாமலும் தங்களின் நபி மீது ஸலவாத்துச் சொல்லாமலும் இருப்பார்களானால் அது அவர்கள் மீது நஷ்டத்திற்குரியாதாகவே அமைந்து விடும். பிறகு அவன் (அல்லாஹ்) நாடினால் அவர்களை வேதனையில் ஆழ்த்துவான். அவன் நாடினால் அவர்களை மன்னிப்பான்." நூல்: திர்மிதி. பார்க்க: ஸஹீஹுத் திர்மிதி பாகம்:3. பக்கம்: 140
"ஒரு கூட்டத்தினர் தாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்திடாமல் எழுந்தார்களேயானால், அவர்கள் செத்த கழுதையை விட்டுவிட்டு எழுந்து சென்றவர்கள் போல் ஆவார்கள். மேலும் அது அவர்களுக்கு கைசேதமாகவே அமையும்!"
துஆ மற்றும் திக்ர்கள் - குர்ஆன் , ஹதீஸ்
உச்சரிப்பு: அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)கஸ் ஸபாத பில் அம்ரி வல் அஜீம(த்)த அலர்ருஷ்தி, வ அஸ்அலுகஷ் ஷுக்ர நிஃமதி(க்)க, வ ஹுஸ்ன இபாததிக், வ அஸ்அலுக கல்பன் ஸலீம(ன்வ்) வ லிஸானன் ஸாதிக(ன்வ்) வ அஸ்அலுக மின் கைரி மா தஃலமு அஊது பிக மின்ஷர்ரி மா தஃலமு அஸ்தஃகுபிருக மிம்மா தஃலமு இன்னக அல்லாமுல் ஃகுயூப்
பொருள்: இறைவா! ஈமானில் நிலைகுலையாமையையும் நேர்வழியில் உறுதியையும் உன்னிடம் நான் வேண்டுகிறேன். மேலும் உன் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதற்கும் உன்னை நல்ல முறையில் வணங்கி வழிபடுவதற்கும் ஆற்றலை உன்னிடம் கேட்கிறேன். மேலும் பழுதற்ற, சிறந்த இதயத்தையும் உண்மை பேசும் நாவையும் உன்னிடம் கேட்கிறேன். மேலும் நீ அறிகிற நன்மைகளை உன்னிடம் கேட்கிறேன். நீ அறிகிற தீமைகளில் இருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். மேலும் நீ அறிகிற பாவங்களில் இருந்து உன்னிடம் மன்னிப்பும் கோருகிறேன். திண்ணமாக நீ மறைவானவை எல்லாம் நன்கு அறிபவன்!
உச்சரிப்பு: அல்லாஹும்ம ரப்பன் நபி முஹம்மதின் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) இஃக்Fபிர் லீ தன்பீ வ அத்ஹிப் ஃகைல கல்பீ வ அஇத்னீ மின் முளில்லாதில் Fபி(த்)தனி மா அப்கைதனி
பொருள்: யா அல்லாஹ்! முஹம்மத் (ஸல்) அவர்களின் இரட்சகனே! எனது பாவத்தை மன்னிப்பாயாக! மேலும் என் இதயத்தின் சினத்தை அகற்றுவாயாக! மேலும் நீ என்னை வாழுமாறு விட்டு வைத்திருக்கும் காலத்தில் வழிகேட்டில் ஆழ்த்தக்கூடிய குழப்பங்களை விட்டும் என்னைப் பாதுகாப்பாயாக!
உச்சரிப்பு: அல்லாஹும்ம ரப்பஸ் ஸமாவா(த்)தி வரப்பல் அர்ழி வரப்பல் அர்ஷிழ் அழீம் ரப்பனா வ ரப்ப குல்லி ஷையின். காலிகல் ஹப்பி வன்நவா முநஜ்ஜலத் தவ்ராதி வல் இன்ஜீலி வல் குர்ஆன், அஊது பிக மின் ஷர்ரி குல்லி ஷையின் அன்த ஆகிதுன்(ம்)பி நாஸியதிஹ். அன் (த்)தல் அவ்வலு Fப லைஸ கப்லக ஷைய், வஅன்தல் ஆخகிறு Fப லைஸ பஃதக ஷைய், வ அன்தழ் ழாஹிறு Fப லைஸ Fபௌகக ஷைய், வ அன்தல் பாதினு Fபலைஸ தூன(க்)க ஷைய், இக்ளி அலைய்யத்தைன, வ அஃக்னினி மினல் Fபக்ர்
பொருள்: யா அல்லாஹ்! வானங்கள் - பூமியின் இறைவனே! மகத்தான அர்ஷின் அதிபதியே! எங்களுடையவும் அனைத்துப் பொருள்களுடையவும் அதிபதியே! வித்துக்களையும் பேரீச்சங் கொட்டைகளையும் விளைவிப்பவனே! தவ்ராத், இன்ஜீல், குர்ஆன் ஆகிய வேதங்களை இறக்கி அருளியவனே! அனைத்துப் பொருள்களின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அவற்றின் முன் உச்சி ரோமம் உன் பிடியிலேயே உள்ளது! நீயே முதலாமவன். உனக்கு முன் எதுவுமில்லை! நீயே இறுதியானவன். அனைத்தும் அழிந்த பிறகு நீ மட்டும் எஞ்சியிருப்பாய்! நீயே வெளிப்படையானவன். உனக்கு அப்பால் எதுவுமே இல்லை! நீயே அந்தரங்கமானவன். நீ அன்றி எதுவுமில்லை! எனது கடனை அடைத்து வறுமையை அகற்றி என்னை வளமடையச் செய்வாயாக!
உச்சரிப்பு: அல்லாஹும்ம அஃதி நப்ஸீ தக்வாஹா வ ஸக்கிஹா அன்(த்)த خகைரு மன் ஸக்காஹா அன்த்த வலிய்யுஹா வ மௌலாஹா
பொருள்: யா அல்லாஹ்! எனது மனத்திற்கு அதன் பக்தியை வழங்கி, அதைப் பக்குவப்படுத்துவாயாக! எனது மனத்தை நீயே சிறந்த முறையில் பக்குவப்படுத்தக் கூடியவன்! நீயே அதன் துணைவனாகவும் பாதுகாவலனாகவும் இருக்கிறாய்!
உச்சரிப்பு: அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மினல் அஜ்ஸி வல் கஸ்லி வ அவூது பி(க்)க மினல் ஜுப்னி வல் ஹரிமி வல் புخக்லி வ அஊது பி(க்)க மின் அதாபில் கப்ர்
பொருள்: யா அல்லாஹ் திண்ணமாக நான் இயலாமை,சோம்பல் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். கோழைத்தனம், முதுமையின் தளர்வு, கருமித்தனம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். மேலும் மண்ணறையின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
உச்சரிப்பு: அல்லாஹும்ம லக அஸ்லம்த்து வபிக ஆமன்த்து வ அலைக்க தவக்கல்து வ இலைக்க அனப்து வ பிக காஸம்து அஊது பி இஸ்ஸதிக அன்துளில்லனி லா இலாஹ இல்லா அன்த்த, அன்த்தல் ஹய்யுல்லதீ லாயமூத்து, வல்ஜின்னு வல் இன்ஸு யமூ(த்)தூன்.
பொருள்: யா அல்லாஹ்! உனக்கு நான் கீழ்ப்படிந்தேன். உன் மீதே நம்பிக்கை கொண்டேன். உன்னையே சார்ந்து வாழ்கிறேன். உன் பக்கமே மீண்டேன். மேலும் உனக்காகவே தர்க்கித்தேன். நீ என்னை வழிகேட்டில் ஆழ்த்துவதை விட்டும் உனது கண்ணியத்தின் பொருட்டால் உதவி கோருகிறேன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. என்றைக்கும் மரணமாகாமல் நித்திய ஜீவனாய் இருப்பவன் நீயே!- ஜின்னுகள், மனிதர்கள் அனைவரும் மரணம் அடைந்து விடுவர்!

No comments:

Post a Comment