Tuesday, December 2, 2014

முடியைப்பற்றி சில தகவல்கள்

• ஒரு சராசரி மனிதரின் தலையில் சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரம் முடிகள் வரை இருக்கும்.
• தலைமுடி ஒரு மாதத்திற்கு 11/4 செ.மீ. நீளம் வரை வளரும்.
• மொத்தமாக மனிதனின் உடல் முழுவதும் 50 லட்சம் முடிக்கால்கள் உள்ளன.
• ஒரு நாளில் 50-150 முடிகள் உதிர்கின்றன.
• ரோமத்தின் உயிரில்லா பாகம். தோலின் மேலும், உயிருள்ள பாகம் தோலின் கீழேயும் காணப்படும்.
கெராடின்
• கெராடின் 'சுறுசுறுப்பு இல்லாத' அதிக செயல்பாடுகளில்லாத ஒரு நார் புரதம். தலைமுடியில் 97% கெராடின் தான். இது நகத்திலும் காணப்படும்.
• கெராடினில் இருப்பது கந்தகம் (Sulphur)
• தலைமுடி பிறந்து, வளர்ந்து, மறையும் வரையில் ஏற்படும் மாற்றங்களின் முடிவுப்பொருள்.
• முடி உற்பத்தியில் கெராடினின் செயல்பாடு - முடி செல்கள் தங்களின் மைய உட்கருவை (Nucleus) இழந்து விடுகின்றன. இழந்த உட்கருவுக்கு பதிலாக, கெராடின் செல்களை ஆகிரமித்து விடும். செல்கள் மேலே வரும் போது இந்த செயல்பாடு நடக்கும். இதை கெராடிஸை சேஸன் (Keratinisation) என்பார்கள்.
முடியின் வண்ணங்கள்
நமது முடியில் உள்ள கெரேடினுக்கு கறுப்பு நிறத்தை கொடுப்பது "மெலானின்" என்ற வர்ணம் கொடுக்கும் பொருள். தோலின் 'டெர்மிஸ்' பகுதியில் பிரத்யேக செல்களில் இருக்கும். வெய்யில் தோலில்பட்டால் மெலானின் உற்பத்தி அதிகமாகிறது. இதனால் சருமம் வெய்யிலில் கறுத்து விடும். மெலானின் உள்ள செல்கள் மெலானோசைட்ஸ் (Melanocytes) எனப்படும். வயதாகும் போது மெலானின் உற்பத்தி குறைந்து கொண்டே போகும். இதனால் முடியில் கறுப்பு நிறம் குறைந்து, முடி "நரைத்து" வெள்ளையாகிறது.
உடலில் எண்ணைப்பசை
முன்பு சொன்னபடி, முடிக்கும், உடல் தோலுக்கும் எண்ணையை தக்க வைப்பது செபாசியஸ் (Sebaceous) எண்ணை சுரப்பிகள் தான். இது தரும் 'சீபம்' எண்ணையால் தான் சருமம் எண்ணை பசையுடன், பளபளவென்று இருக்கிறது. 'சீபம்' இல்லாவிட்டால் தோல் பாளம் பாளமாக வெடித்து விடும். செபாசியஸ் சுரப்பிகளுக்கு, சீபத்தை அனுப்ப நாளங்களோ, குழாய்களோ இல்லை. இந்த சுரப்பியின் நுண்ணிய செல்களே உடைந்து கெட்டியான கொழுப்பாக, முடிவேர்களின் வழியே தோலின் மேற்புறத்தை வந்தடைகின்றன. உடலின் சில பாகங்களில் அதிகமாகவும் சில பாகங்களில் குறைவாகவும் செபாசியஸ் சுரப்பிகள் காணப்படும்.
கூந்தலின் வளர்ச்சிக்கும், பராமரிப்புக்கும், இந்த எண்ணை சுரப்பி சரிவர இயங்குவது முக்கியமானது.
தலைமுடியின் உபயோகங்கள்
• முடி, அதுவும் தலைமுடி நமது தோற்றத்திற்கு பொலிவு தருவது. கருகருவென மிளிரும் தலைமுடி ஆரோக்கியத்தின் அறிகுறி.
• தலைமுடி, வெய்யில், வெப்பம், இவைகள் மூளையை தாக்காமல் காக்கிறது.
• சுற்றுச் சூழல் பாதிப்பிலிருந்தும் உடலை முடி காக்கிறது.
• மூக்கிலுள்ள முடிகள் தூசி, கிருமிகளை தடுத்து நிறுத்துகின்றன.
• உடலுள்ள முடிகள் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.

No comments:

Post a Comment