Friday, December 12, 2014

ஜும்ஆவுடைய நாளில் கடைபிடிக்க வேண்டிய சுன்னத்துகள்

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!!!!!
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
ஜும்ஆவுடைய நாளில் கடைபிடிக்க வேண்டிய சுன்னத்துகள்:
1) நன்றாக குளித்தல்.
2) முதல் நேரத்திலே, நடந்து சென்று, இமாமை அன்மித்து மஸ்ஜிதில் அமருதல்.
3) சுத்தம் செய்து கொள்ளல், மனம் பூசுதல், பல் துலக்குதல்.
4) கஹ்ப் அத்தியாயத்தை ஓதுதல்.
5) நபிகளார் (ஸல்) அவர்கள் மீது அதிகம் ஸலவாத்து சொல்லல்.
6) அதிகம் பிரார்த்தனையில் ஈடுபடல், பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்டும் நேரத்தை கருத்தில் கொண்டு அதிகம் பிரார்த்தித்தல்.
இன்றைய தினம் "ஜும்ஆ" தொழுகை தொழுததாக உங்கள் பெயர் பதிவு செய்யப்பட வேண்டுமா? இமாம் மெம்பரில் ஏறும் முன்னர் பள்ளியில் நுழைந்து விடுங்கள்.
அல்லாஹ் கூறுகிறான்:
ஈமான் கொண்டவர்களே! வெள்ளிக் கிழமை (ஜும்ஆ) தொழுகைக் காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வின் அழைப்புக்காக (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையாகும். அல்குர்ஆன்62:9

No comments:

Post a Comment