Monday, December 8, 2014

இறைவனிடம் கை ஏந்துங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வதஆலா வபரக்காத்துஹூ
ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் முஃமீன் ஆன ஆண் பெண் அனைவரின் மீது வற்றாது பொழியட்டுமாக.
இன்றைய தினத்தை மலர செய்த அல்லாஹ்க்கே எல்லா புகழும்.
இன்றைய தினம் இனிதாய் அமைய வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக.
இறைவனிடம் கை ஏந்துங்கள்
நாம் இறைவனின் தியானத்தை தவிர வேறு எதிலும் மன அமைதி காண முடியாது . அல்லாஹ்வை நினைவு கூர்வதை கொண்டுதான் இதயங்கள் அமைதி பெறுகின்றன அல்லாஹ்வை உள்ளத்தாலும்,நாவினாலும்,தனித்தனியே தியானம் செய்யலாம் என்றாலும, உள்ளமும்,நாவும்,சேர்ந்து முழு மனதோடு கேட்கப்படும் துஆ தான் அல்லாஹ்விடத்தில் ஏற்று கொள்ளப்படும்.
அல்லாஹ் கேட்டதையே கொடுக்கின்றான் . அல்லது அதைவிட சிறந்ததை கொடுக்கின்றான். அல்லது அந்த துஆவைக் கொண்டு வர இருக்கின்ற ஆபத்தை நீக்குகின்றான் என ரசூல்{ஸல்}அவர்கள் கூறினார்கள்.
நாம் துஆ செய்யும்போது இரு கைகளையும் தோல்,புஜம் வரை உயர்த்தி முகத்திற்கு நேராக வைக்க
வேண்டும்.கிப்லாவை நோக்கி துஆ செய்வது சிறந்தது.துஆ ;கேட்பதற்கு முன் அல்லாஹ்வை புகழவேண்டும்.
பின் ரசூல்{ஸல்}அவர்களின் மீது சலவாத் ஓத வேண்டும்.பின் மிகவும் தாழ்மையுடனும்,அச்சத்தோடும் துஆ கேட்கவேண்டும் .
துஆ முடிந்த பிறகு மீண்டும் அல்லாஹ்வை புகழ்ந்து,பின்
ரசூல்{ஸல்}அவர்களின் மீது சலவாத் ஓதி,ஆமீன் கூறி தம் இரு கைகளையும் முகத்தில் தடவி கொள்ளவேண்டும்.
அடியான் கையேந்தி அல்லாஹ்விடத்தில் துஆ கேட்ட பிறகு அவனை வெறும் கையோடு அனுப்புவதற்கு அல்லா
வெட்கப்படுகிறான் என்று ரசூல்{ஸல்}கூறியுள்ளார்கள் .
சில நேரங்களில் செய்யப்படுகின்ற துஆ ஏற்று கொள்ளப்படுகின்றது .
அவற்றில் சில கீழே எழுதப்பட்டு உள்ளன .மனதில் வைத்து கொள்ளவும்.
,
1 : பர்ளு தொழுகைக்குப்பின் கேட்கப்படும் துஆ
2 : தஹஜ்ஜ்த் தொழுகைக்குப்பின் கேட்கப்படும் துஆ
3 : சஜ்தாவில் கேட்கப்படும் துஆ
4 : நோன்பு திறக்கும் முன் கேட்கப்படும் துஆ .
5 : பாங்கிற்கும் , இகாமத்திற்கு இடையில் கேட்கப்படும் துஆ
6 : ஜம்ஜம் நீரை குடிக்கும் போது கேட்கப்படும் துஆ

No comments:

Post a Comment