Monday, January 5, 2015

கூட்டு துஆ கூடுமா.???

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...!
வணங்கு வதற்கு சிரசையும் வாழ்த்து வதற்கு நாவையும் சிந்தித்து செயல் படும் திறனையும் தந்த வல்ல ரஹ்மானை போற்றி ஆரம்பம் செய்கிறேன்

கூட்டு துஆ கூடுமா.???
இது மார்க்கத்திற்கு முரணான காரியமாகும்.!!!
நபிகளாரின் காலத்தில் இல்லாத "பித்அத்"பித்அத்தான வழிமுறையாகும் ..!!!
புதிதாக உருவாக்கப்பட்ட இது ஷிர்க்கான செயலாகும்.!!!!
இப்படி சொல்லி சொல்லியே அப்பாவி இளைஞர்களை வழிகெடுக்கும் வஹ்ஹாபிகளை புறக்கணிப்போம்...!!!!!    அறிந்துகொள்வோம்.!!!
கூட்டு துஆ என்றால் என்ன.???
இது மார்கத்திற்கு விரோதமான செயலா.?
இதற்கு ஆதாரங்கள் உண்டா.???
"ஒரு கூட்டத்தினர் ஒன்றிணைந்து அவர்களில் சிலர் பிரார்த்தனை செய்ய மற்றவர்கள் ஆமீன் கூறினால் அவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதில்லை'' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹபீப் பின்மஸ்லமா ரழியல்லாஹு அன்ஹு                   நூல்: ஹாகிம் 5478
(((((( இதே செய்தி இமாம் தப்ரானியின் அல்முஃஜமுல் கபீர் என்றநூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.))))))
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள் .
அல்லாஹுத் தஆலா எனக்கு மூன்று விடயங்களைத் தந்துள்ளான்.!
01 ஸப்பில் நின்று தொழும் தொழுகையையும்
02 சுவர்க்க வாசிகளின்காணிக்கையான (சலாம்)சொல்வதையும்
03 ஆமீன் என்ற வார்த்தையையும்இவற்றை முன்னாள் வாழ்ந்த எந்த நபிமாருக்கும் கொடுக்கவில்லை.!
எனினும் மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் துஆ ஓத ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மட்டும் ஆமீன் கூறியுள்ளார்கள் என்றார்கள்.ஆதாரம்:இப்னு குஸைமா, அத்தர்கீப்வத்தர்ஹீப் பாகம் 1, பக்கம்: 256
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஸஹாபாக்களை நோக்கி கூறுகின்றார்கள்
'யூதர்கள் ஆமீன் என்ற வார்த்தைக்காக உங்கள் மீது பொறாமைப்படுவது போன்று வேறு எதற்கும் பொறாமைப்படுவது கிடையாது' எனவே அதிகமாக ஆமீன் சொல்லிக் கொள்ளுங்கள்! ஆதாரம்:இப்னு குஸைமா, அத்தர்கீப் வத்தர்ஹீப் பாகம் 1, பக்கம் 257
நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ) அவர்கள் பின்வருமாறு அருளியுள்ளார்கள்
'யூதர்கள் பொறாமைக்காரர்களான சமுதாயம். அவர்கள் எமக்கு 'சலாமும் ஆமீன்' எனும்வார்த்தையும் கிடைத்ததற்காகப் பொறாமைப்படுவது போன்று வேறு எதற்கும் றாமைப்படுவது கிடையாது ஆதாரம:; இப்னு குஸைமா, பாகம் 1 பக்கம்:288
""" கூட்டு துஆ """
1:1. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
1:2. அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
1:3. (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.
1:4. (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).
1:5. (இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
1:6. நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!
1:7. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.
(ஆமீன்)
2:286. அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”
2:201. இன்னும் அவர்களில் சிலர், “ரப்பனா!(எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!” எனக் கேட்போரும் அவர்களில் உண்டு.
832. ஆயிஷா(ரலி) அறிவித்தார். ”இறைவா! கப்ருடைய வேதனையைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும் மரணிக்கும் போதும் ஏற்படும் குழப்பத்தைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். பாவங்களைவிட்டும் கடனைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் துஆச் செய்தவார்கள். “தாங்கள் கடனைவிட்டும் அதிமாகப் பாதுகாப்புத் தேடும் காரணம் என்ன?“ என்று ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது “ஒரு மனிதன் கடன் படும்போது பொய் பேசுகிறான்; வாக்களித்துவிட்டு அதை மீறுகிறான்” என்று நபி(ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள்.  ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 10. பாங்கு
780. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். ”இமாம் ஆமின் கூறும்போது நீங்களும் ஆமின் கூறுங்கள்! ஒருவர் கூறும் ஆமீன் வானவர்கள் கூறும் ஆமினுடன் ஒத்து அமையுமாயின் அவரின் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஆமீன் என்று கூறுபவர்களாக இருந்தார்கள் என இப்னு ஷிஹாப் குறிப்பிடுகிறார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 10. பாங்கு
781. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்: ”உங்களில் யாரேனும் ஆமீன் கூறினால் வானுலகத்தில் வானவர்களும் ஆமீன் கூறுகின்றனர். இவ்வாறு வானவர்கள் கூறும் ஆமினுடன் எவருடைய ஆமீன் ஒத்து வருகிறதோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 10. பாங்கு
4475. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்: (தொழுகையில்) இமாம், “ஃகைரில் மஃக்ளுபி அலைஹிம் வ லள்ளால்லீன்“ என்று ஓதியவுடன் நீங்கள், “ஆமீன் (அவ்வாறே ஆகட்டும்)“ என்று சொல்லுங்கள். ஏனெனில், வானவர்கள் “ஆமீன்“ கூறுவதுடன் ஒத்து ஆமீன் கூறுகிறவருக்கு அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 65. திருக்குர்ஆன் விளக்கவுரை
இது போன்ற இன்னும் எத்தனையோ ஆதாரங்கள் உள்ளன .!!!
ஆகவே கூட்டு என்பது மார்க்கத்தில் உள்ள காரியமே.!!!!
குர்ஆன் ஹதீஸை எடுத்து நடப்போம்.!!!
ஸஹாபாக்களையும் பின்பற்றுவோம்.!
வழிகெட்ட வஹ்ஹாபிஸத்தை புறக்கணிப்போம் ..!!!!!

No comments:

Post a Comment