Monday, January 5, 2015

தஸ்பீஹ் தொழுகை:

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...!
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும்
நிலவட்டுமாக..!
வாரத்தில் ஒரு முறை அல்லது மாதத்தில் ஒருமுறை அல்லது வருடத்தில் ஒரு முறையாவது இதைத் தொழுவது சுன்னத்தாகும்.
இதை இரண்டு இரண்டு ரக்அத்துகளாக இரண்டு ஸலாமில் அல்லது நான்கு ரக்அத்துகளாக ஒரு ஸலாமில் தொழ வேண்டும். இரண்டு இரண்டு ரக்அத்துகளாக பிரித்து தொழுவதுதான் சிறந்தது.
முதல் ரக்அத்தில் பர்திஹா ஸூராவிற்குப் பின் அல்ஹாக்கு முத்தகாதுரு சூராவும் இரண்டாவது ரக்அத்தில் வல்அஸ்ரி சூராவம் 3வது ரக்அத்தில் குல்யாஅய்யுஹல் காபிரூன சூராவும், நான்காவது ரக்அத்தில் அஹது சூராவும் ஓதுவது சுன்னத்தாகும்.'ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்' என்ற தஸ்பீஹை 4 ரக்அத்திலும் 300 தடவை ஓதுவது சுன்னத்தாகும்.
நின்ற நிலையில் சூராக்களை முடித்த பின்பு 15 விடுத்தம், ருகூவில் 10 விடுத்தம், இஃதிதாலில் 10 விடுத்தம், முதல் ஸுஜூதில் 10 விடுத்தம், இரு ஸுஜூதின் நடுவில் 10 விடுத்தம், இரண்டாவது ஸுஜூதில் 10 விடுத்தம், இரு ஸுஜூதுகளை முடித்து எழுமுன் அமரும் இருப்பில் 10 விடுத்தம் இவ்வாறு ஒரு ரக்அத்தில் 75 வீதம் நான் கு ரக்அத்துகளில் 300 தஸ்பீஹ் ஓத வேண்டும்.
இரண்டாவது ரக்அத்தில் அத்தஹிய்யாத் ஓதி முடித்தபின் 10 தஸ்பீஹ் ஓதுவதுதான் சிறப்புடையதாகும்.
முதல் ரக்அத்தில் அல்ஹாகுமுத் தகாதுர் சூராவும், இரண்டாவது ரக்அத்தில் வல் அஸ்ரி சூராவம், மூன்றாவது ரக்அத்தில் சூரா காபிரூனும், நானகாவது ரக்அத்தில் சூரா இக்லாஸும் ஓதுவது சிறப்பானது. தொழுகை முடிந்த பிறகு கீழ்காணும் துஆவை ஓதுவது சிறப்பானதாகும்.
هُمَّ انيْ أسئلك توْفيق اهل الهداي واعمال اهل اليقين* ومناصحة اهل التوبة* وعزم اهل الصّبر* وجدّ اهل الخشبية* وطلب اهل الرّغبة* وتعبّد اهل الورع* وعرفان اهل العلم* حتي اخافك اَللّهُمَّ انّي أسئلك مخافة تحجزني عن معا صيك * حتي اعمل بطاعتك عملا استحقّ به رضاك* وحتي اناصحك بالّتوبة خوفا منك* وحتي اخلص لك النصيحة حياء منك* وحتي اتوكال عليك في الامور حسن ظنّ بك سبحان خالق الناّر

No comments:

Post a Comment