Friday, January 2, 2015

ஹதீஸ்-மகத்தான நாள்....!!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு........
இந்நாளை இனிய நாளாக மலரச் செய்த அல்லாஹுக்கே புகழ் அனைத்தும்
இன்றைய தினம் ஜூம்ஆ உடைய தினம் முஸ்லிம்களுக்கு இன்று பெருநாள்.
இன்றைய தினத்தை மலர செய்த அல்லாஹ்க்கே எல்லா புகழும்.
இன்றைய தினம் இனிதாய் அமைய வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக.
இந்த உலகவாழ்கையே விட என்தாயே அதிகம் நேசிக்கிறேன்
ஆனால் ..
எம் இறைவன் எங்களுக்காக தயார்செய்து வைத்து இருக்கின்ற மறுமை வாழ்கையே என் தாய் தந்தைக்கும் அதிகமாக நேசிக்கிறேன்.
நாளை மறுமையில் என் தாய் தந்தையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக...
இந்த சொற்பமான உலகத்தில் முழ்காமல் அல்லாஹ் எங்களை பாதுகாப்பானாக.
இறைவன் படைத்த இந்த நாளும் நம் அனைவருக்கும் இனிய நாளாக அமையட்டும்...
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்கள் நாட்களில் சிறந்தது வெள்ளிக்கிழமையாகும்.­
அந்நாளில் தான் ஆதம்(அலை) படைக்கப்பட்டார்கள்.
அந்நாளில் தான் அவர்கள் இறந்தார்கள்.
அந்நாளில் தான் ஸூர் ஊதப்படும்.
அந்நாளில் தான் மயக்கமுறுதலும் நடைபெறும்.
எனவே அந்நாளில் அதிகம் என் மீது ஸலவாத் சொல்லுங்கள்.
உங்களுடைய ஸலவாத் எனக்கு எடுத்துக் காட்டப்படுகிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறிய போது, அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (மண்ணோடு மண்ணாக) மக்கிப் போன பிறகு உங்களிடம் எப்படி எங்கள் ஸலவாத் எடுத்துக் காட்டப்படும்? என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், நபிமார்களின் உடலை பூமி திண்பதை விட்டும் அல்லாஹ் தடை செய்து விட்டான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ் (ரலி)
நூல் :அஹ்மத் 15575

No comments:

Post a Comment