Tuesday, July 21, 2015

தகவல் துணுக்குகள்

* சிங்கப்பூரின் முந்தைய பெயர், டெமாஸெக்.
* பிரபல இசைமேதையான பீத்தோவன், ஜெர்மனியில் உள்ள `பான்' நகரில் பிறந்தார்.
* `சீனக்குடியரசின் தந்தை' என்று போற்றப்படுபவர், சன்யாட்சன்.
* ஒருசெல் உயிரியான அமீபாவின் உடல், புரோட்டோபிளாசத்தால் ஆனது.
* `வைட்டமின் ஏ'-ன் வேதியியல் பெயர் ரெட்டினால்.
* சூரியக்குடும்பத்தைக் கண்டறிந்தவர், கோபர் நிக்கஸ்.
* `பாரத ரத்னா' விருது பெற்ற முதல் பெண்மணி, இந்திரா காந்தி.
* சீனர்கள் தான் முறையான நெல் சாகுபடி முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள்.
* `உயிரியல் கோட்பாட்டின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், சார்லஸ் டார்வின்.
* இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஏவுகணை, பிரித்வி.
* இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம்', லக்னோவில் அமைந்துள்ளது.
* முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம், மீன்.
* பாலில் `லாக்டிக் அமிலம்' உள்ளது.
* குஜராத் மாநிலத்தின் புகழ்பெற்ற நடனம், தாண்டியா.
* இன்சுலின், கணையத்தில் சுரக்கிறது.
* பெரு நாட்டின் தலைநகரத்தின் பெயர், லிமா.
* முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, இந்தியா.
* `பிரமிடு கோவில் நாடு' என்று அழைக்கப்படுவது, பர்மா.
* இத்தாலி நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவர், முசோலினி.
* சுமத்ரா தீவில் மலரும் ராப்லிசியா ஆர்னல்டை எனும் பூ தான், உலகிலேயே மிகப்பெரிய பூவாகும்.
* ஒவ்வொரு மனிதனுக்கும் சுமார் 11/2 கிலோ எடையுடைய மூளை உள்ளது.
* கால்சியம் கார்பனேட் என்ற ரசாயனப்பொடியைக் கட்டியாக்கி சாக்பீஸ் தயாரிக்கப்படுகிறது.
* நத்தை ஒரு மைல் (1.6 கிலோமீட்டர்) தூரம் செல்வதற்கு, சுமார் 17 நாட்கள் வரை ஆகும்.
* ஆக்வா ரெஜியா என்ற திரவத்தில் கரைத்தால், தங்கம் கரைந்து விடும்.
* பல்பில் உள்ள டங்ஸ்டன் இழை, சுமார் 3400 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் பெற்றது.
* மாலத்தீவில் விளைகிற லொடாய்சியா என்ற இரட்டைப் பனங்கொட்டை தான், உலகிலேயே மிகப்பெரிய விதையாகும்.
* நம்முடைய தலைமுடியில் இருந்து அமினோ அமிலம் தயாரிக்கப்படுகிறது. இது மருந்து மற்றும் ரசாயனப் பொருட்கள் தயாரிப்பில் உதவுகிறது.

No comments:

Post a Comment