Tuesday, January 19, 2016

ஒவ்வொரு மனிதரும் முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகள்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"ஒரு விஷயம் (சொல்கிறேன் கேள்:) ஆதமின் மக்களில் ஒவ்வொரு மனிதரும் முன்னூற்று அறுபது
மூட்டு எலும்புகளுடன் படைக்கப் பட்டுள்ளனர்.

எனவே, யார் அந்த முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளின் எண்ணிக்கை அளவுக்கு அல்லாஹ்வை (தக்பீர் கூறி) பெருமைபடுத்தி, அல்லாஹ்வை (தஹ்மீத் கூறி) புகழ்ந்து, 'அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை' என்று (தவ்ஹீத்) கூறி, அல்லாஹ்வை (தஸ்பீஹ் கூறி) துதித்து, அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு (இஸ்திக்ஃபார்) கோரி, மக்களின் நடைபாதையில் கிடந்த ஒரு கல்லையோ,
முள்ளையோ, எலும்பையோ அகற்றி, (மக்களிடம்) நல்லதை ஏவி-தீயதை தடுத்தாரோ... அவர்
அன்றைய தினத்தில் தம்மை நரக நெருப்பிலிருந்து அப்புறப்படுத்திய நிலையிலேயே நடமாடுகிறார்".
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)                                                                                   நூல் - முஸ்லிம், ஹதீஸ் எண் - 1833
-------------------------------------------------------
-முள்ளந்தண்டு 147 மூட்டுகள்
-மார்பு பகுதி 24 மூட்டுகள்
-மேல் பகுதி 86 மூட்டுகள்
-கீழ்பகுதி 92 மூட்டுகள்
-இடுப்பு 11 மூட்டுகள்
மொத்தம் = 360
--------------------------------------------------------
கீழ்வரும் மருத்துவ அறிஞர்கள் இதை உறுதிப்படுத்துகிறார்கள்:-----
-Dr. Douglas A. Becker -Dr. Zaghloul El-Naggar -Dr. Raymond D. Mutter, M.D.
-Scientific article at eajaz.org
---------------------------------------------------------

No comments:

Post a Comment