Monday, March 28, 2016

திருக்குர்ஆன்,

அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காதுஹு
1 எனது பெயர் :-
குர்ஆன், நூர், தன்ஸீல், புர்கான்
2.எனது மொழி :- ♋அரபு
முதலில் இருந்த இடம் :-   லவ்ஹூல் மஹ்பூல்

3.பின்னர் இறக்கப்பட்ட  இடம் :- பைதுல் இஸ்ஸா  (முதலாம் வானம்)
4.இந்த பூமிக்கு வருகை :- பி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் ) அவர்களின் 40ம்
வயதில் ஹிரா குகையில் இருக்கும்போது
5.இறங்கிய காலம் :-
23 வருடங்கள்
6.பாதுகாக்கப்பட்ட முறைகள் :-
 மனனம் (ஹாபிழ்)
எழுதுதல் (குத்தாபுல் வஹி)
செயற்படுத்துதல் (அமல் செய்தல்)
7.என்னைநூல் 📚உருப்படுத்தியவர்:
அபூபக்கர் ஸித்தீக்(ரழியல்லாஹூ அன்ஹூ )
ஸைத் இப்னு தாபித்(ரழியல்லாஹூ அன்ஹூ )
தலைமையிலான குழு
8.நூலுருப்படுத்த 📚தூண்டியவர்:-
உமர்இப்னு கத்தாப் (ரழியல்லாஹூ அன்ஹூ )
9.அதற்கான காரணம் :- யமாமா யுத்தத்தில் 70க்கும்
மேற்பட்ட ஹாபிழ்கள் கொலை செய்யப்பட்டமை.
10.ஒரே அமைப்பில்
வெளியிட்டவர்கள்:-
உதுமான் (ரழியல்லாஹூ அன்ஹூ )
ஜாமிஉல் குர்ஆன்
11.அதற்கான காரணம் :-
ஆர்மோனியா போரில் என்னைத் தவறாக
ஓதியதை, ஹூதைபதுல் யமானி (ரழியல்லாஹூ அன்ஹூ )அவதானித்தார்.
அறபி அல்லாதவர்களும் இஸ்லாத்தில் வந்தமை.
12.என்னுடைய அமைப்பு :-
வசனங்கள் - 6666
 ஸூறாக்கள் - 114 ஜுஸ்உ - 30
மன்ஸில் - 07
 மக்கி ஸூறாக்கள் - 86
மதனி ஸூறாக்கள் - 28
ஸஜதாக்கள் - 14~15
13.பெரிய ஸூரா :-
ஸூரதுல் பகரா
14.சிறிய ஸூரா :-
ஸூரதுல் கவ்ஸர்
15.கல்புல் குர்ஆன்:- ஸூரா யாஸீன்
16.உம்முல் குர்ஆன் :- ஸூரதுல் ஃபாத்திஹா
17.முதலில் இறங்கிய
ஸூரா :-
ஸூரதுல் அலக்
(1முதல்5 வசனங்கள் )
18.பிஸ்மி இல்லாத ஸூரா:
ஸூரது தௌபா
19.இரண்டு பிஸ்மி உள்ள ஸூரா :-
ஸூரதுந் நம்ல்
20.என்னுடைய சிறப்புக்கள் :-
 இறுதி வேதம்.
 நிரந்தரமான அற்புதம்
முந்திய வேதங்கள் என்னால் மாற்றப்பட்டன
என்னைப் போன்று ஒன்றை உருவாக்க முடியாது.
21.என்னை ஓதுபவருக்கான நன்மைகள்:-
உள்ளம் நிம்மதி அடையும்
ஓர் எழுத்துக்கு பத்து நன்மை

மறுமையில் என் சிபாரிசு கிடைக்கும். 
 (இன்னும் பல.......)
22.எனக்கு செய்ய வேண்டிய கடமைகள்:-
ஓதுதல், மனனம் செய்தல், பின்பற்றுதல்,  எத்தி வைத்தல்.
23.இன்று என்னுடைய நிலை:-
சென்ற காலங்களில் இரவில் என்னை ஓதுவார்கள்.
இன்று நாடகத்தைப் பார்க்கின்றார்கள்.
வீடுகளில் புழுதி பிடித்து வைக்கப்பட்டுள்ளேன்.
மரணித்தால் மாத்திரம் ஓதப்படுகின்றேன்.
பள்ளிவாசல்களில் அழகிற்காக அடுக்கப்பட்டு உள்ளேன்.
24.உங்களிடம் சில கேள்விகள்:-
மாதத்தில் ஒரு தரம் முழுமையாக ஓதினீர்களா?
அல்லது உங்கள் வாழ்க்கையில்தான் ஒரு தரம் முழுமையாஓதி முடித்தீர்களா?
ஓவ்வொரு நாளும் என்னுடைய குறிப்பிட்ட பக்கங்களாவது ஓதுகின்றீர்களா?
25.எனது வேண்டுகோள் :-
பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள்.
 வீடுகளில் தினமும்
ஓதுங்கள், மனனம் செய்யுங்கள்.
 என்னைப் பின்பற்றி மறுமையில் என் சிபாரிசைப் பெற்று சுவனம்செல்லுங்கள்.

No comments:

Post a Comment