Sunday, September 11, 2016

சீடரின் கேள்விக்கு மௌலானா ரூமி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அற்புத பதில்கள்:

விசம் என்பது என்ன..?
நமது தேவைக்கு அதிகமான அனைத்தும் விசமே, அது நமது அதிகாரமாக, செல்வமாக, பசியாக, அகங்காரமாக, பேராசையாக, சோம்பேரித்தனமாக, காதலாக, லட்சியமாக, வெறுப்பாகவும் எதுவாகவும் இருக்கலாம்.
அச்சம் என்பது என்ன..?
எதிர்பாராதவற்றை ஏற்றுக் கொள்ள மறுப்பதே அச்சமாகும், அதை நாம் ஏற்றுக் கொண்டால் அது சாகசமாகிவிடும்.

பொறாமை என்பது என்ன..?
பிறரிடம் உள்ள நல்லவற்றை ஏற்றுக் கொள்ள மறுப்பதே பொறாமையாகும், அதை நாம் ஏற்றுக் கொண்டால் அதுவே நமக்கு உத்வேகமாகிவிடும்.
கோபம் என்பது என்ன..?
நமது சக்திக்கு அப்பாற்பட்ட காரியங்களை ஏற்றுக் கொள்ள மறுப்பதே கோபமாகும், ஏற்றுக் கொண்டால் அது சகிப்புத்தன்மையாகிவிடும்.
வெறுப்பு என்பது என்ன..?
ஒருவர் எப்படி இருக்கிறாரோ அவரை அப்படியே ஏற்றுக் கொள்ள மறுப்பது,
ஒருவரை நிபந்தனைகளின்றி ஏற்றுக் கொண்டால் அது அன்பாகிவிடும்.

No comments:

Post a Comment