Thursday, December 15, 2016

அருமையான துஆ வரிகள்!

அருமையான துஆ வரிகள்! மாஷா அல்லாஹ்! அல்லாஹ் இவற்றை நமக்கு கபுல் செய்துத்தருவானாக ஆமீன்!
----------------------------------------------------------------------------------------------------------------------------
*யா அல்லாஹ்!*
நபி மூஸாவை காக்க கடலை பிளந்தவனே!
தொட்டிலில் குழந்தையாக இருந்த ஈஸா நபியை பேச வைத்தவனே!
மீனின் வயிற்றில் இருந்த யூனுஸ் நபியை உன் சக்தியால் காப்பற்றியவனே!
கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட அய்யூப் நபியை உன் கருணையினால் குணப்படுத்தியவனே!
என் இரட்சகனே! மகத்தான உன்னுடைய பெயரால் கேட்கிறேன்!
துக்கம், கவலை, நெருக்கடி, வியாதி, இவை அனைத்தையும் விட்டு என்னை காப்பாற்றுவாயாக!
நான் துக்கத்தில் ஆழ்ந்தால் என்னை மகிழ்ச்சியுடையவனாக ஆக்குவாயாக!
எனக்கு ஏதேனும் தேவை ஏற்பட்டால் உன்னை அல்லாமல் மற்றவரிடம் என்னை தள்ளி விடாதே!
நிச்சயமாக நீ என்னால் தாங்க முடியாத கஷ்டத்தை கொடுக்க மாட்டாய்!
என்னை படைத்தவனே!
என் வாழ்கையை உனது கரத்தில் வைத்திருப்பவனே!
என்னுடைய நற்பாக்கியமும், துர்பாக்கியமும் உன் கையிலே இருக்கின்றன!
ஏக இறைவா! என்னுடைய உள்ளத்தை மகிழ்ச்சி உடையதாக ஆக்குவாயாக!
இவ்வுலகமே எனக்கு ஒன்று சேர்ந்து நன்மை செய்ய நாடினாலும் எனக்கென்று நீ எழுதி வைத்ததை தவிர எந்த நன்மையையும் எனக்கு கிடைக்காது என்று நான் ஈமான் கொண்டுள்ளேன்
உலகமெல்லாம் ஓன்று சேர்ந்து எனக்கு துன்பம் இழைக்க முயற்சித்தாலும் எனக்கு எதிராக நீ எழுதிய துன்பம் மட்டுமே என்னை அடையும் என்பதை நான் நம்புகிறேன்!
ஏக இறைவா! என் உள்ளத்தில்நிறைய தேவைகள் இருக்கின்றன!
உன்னையல்லால் வேறு யாரிடமும் அதை சொல்ல முடியாது. என்னுடைய ரகசியங்களும் என் ஆழ் மனதில் புதைந்து உள்ளவை களையும் நீ மட்டுமே அறிவாய்!
“குன்” ஆகுக என்று சொன்னால் அனைத்தும் ஆகிவிடும் என்று சொன்னவனே!
என்னுடைய விருப்பங்களை நோக்கி (குன்) “ஆகிவிடு” என்று சொல்வாயாக!
நீ என்னுடன் இருப்பதால் எனக்கு யாரிடமும் எந்த தேவையும் இல்லை.
எனக்கு நீ வழி காட்டு. என்னுடைய காரியங்களை நீ திட்டமிட்டு நிறைவேற்று.
நான் தவறான வழியில் செல்லும் போது என்னை நேரான வழியில் திருப்பிவிடு.
வாழ்கின்ற காலமெல்லாம் உனக்கு கட்டுப்பட்டவனாக வாழ்ந்து மரணிக்கின்ற பொழுதும் உனக்கு கட்டுப்பட்டவனாக மரணிக்கின்ற பாக்கியத்தை தந்தருள்வாயாக!
யா அல்லாஹ் . . . . .
எங்கள் பாவங்களை மன்னித்து விடு
யா அல்லாஹ் . . . .
நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து விடு
யா அல்லாஹ் . . .
கப்ருடைய வேதனையிலிருந்து நரக நெருப்பிலிருந்தும் எங்களை பாதுகாப்பாயாக!
யா அல்லாஹ்! இம்மையிலும் மறுமையிலும் வெற்றியை தருவாயாக!
இறைவா! சிறிய பெரிய எல்லா நோய்களை விட்டு எங்களை காப்பாற்றி வாழச்செய்வாயாக!
இறைவா! இறையச்சத்தையும் பேணுதலையும் எங்களுக்கு தந்தருள்வாயாக!
இறைவா! பெருமானார் (ஸல்) அவர்கள் விரும்பிய வழி முறையில் எங்களை வாழச்செய்வாயாக!
இறைவா! பெருமானார் (ஸல்) அவர்களின் சுன்னத்தான வழிமுறையில் எங்களை வாழ வைப்பாயாக!
இறைவா! மறுமை நாளில் பெருமனார் (ஸல்) அவர்களின் பரிந்துரையை எங்களுக்கு அருள்வாயாக!
இறைவா! உன்னுடைய பிரியத்தையும் எங்களுடைய உள்ளங்களில் நிலைத்திருக்கச் செய்வாயாக!
இறைவா! மரண வேதனை, மண்ணரை வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!
இறைவா! முன்கர் நக்கீர் உடைய கேள்வி கணக்கை எங்களுக்கு லேசாக்கி வைப்பாயாக!

இறைவா! கியாமத் நாளில் உன்னை தரிசிக்க கூடிய பாக்கியத்தை எங்களுக்கு தந்த தந்தருள்வாயாக!
இறைவா! ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர்ந்த சுவர்க்கத்தில் எங்களை நுழைய செய்வாயாக!
இறைவா! கியாமத் நாளில் வெப்பத்தை விட்டும், நரக நெருப்பை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!
இறைவா! கியாமத் நாளில் இழிவுகளை விட்டும் எங்களை மூஃமீனான ஆண், பெண் அனைவரையும் காப்பாற்றுவாயாக!
இறைவா! எங்களின் அமல்களின் பட்டோலையை எங்களுடைய வலது கையில் கொடுப்பாயாக!
இறைவா! கியாமத் நாளில் உன்னுடைய அர்ஷின் நிழலில் எங்களுக்கு இடமளிப்பாயாக!
இறைவா! ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தை மின்னல் வேகத்தில் கடக்கச் செய்வாயாக!
இறைவா! உன்னுடைய அருளை கொண்டு எங்களுடைய அனைத்து பாவத்தையும் மன்னித்து எங்களை சொர்க்கத்தில் நுழைய செய்வாயாக!
ஆமீன்... ஆமீன்... யாரப்பில் ஆலமீன்.........
--------------------------------------------------------------------

No comments:

Post a Comment