Thursday, January 5, 2017

சாம்பார் பொடி செய்வது எப்படி?

சாம்பார் பொடி செய்வது எப்படி















  தேவையான பொருள்கள் :
துவரம் பருப்பு - 100 கிராம்
கடலைப்பருப்பு - 50 கிராம்
மிளகாய் வற்றல் - 1/4 கிலோ
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
தனியா - 200 கிராம்
மிளகு - 20 கிராம்
சீரகம் - 20 கிராம்
வெந்தயம் - 5 கிராம்
பெருங்காயத்தூள் - தேவைக்கேற்ப


செய்முறை :

* மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை ஒரு தட்டில் கொட்டி வெயிலில் நன்றாக காயவைத்து எடுத்து மிதமான தீயில் தனித்தனியாக வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் அல்லது மிஷினில் கொடுத்து அரைத்து வைத்து கொள்ளலாம்.

* இதில் வாசனைக்காக கறிவேப்பிலை சேர்க்கலாம்.

* இந்த சாம்பார் பொடி போட்டு சாம்பார் செய்தால் மணக்கும். மேலும் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.


குறிப்பு:

சாம்பார் பொடி தயாரிக்கும் போது, வறுக்கும் பொருட்கள் கருகிவிடாமல் பார்த்து கொள்ளவேண்டும்.  நன்றி : மாலைமலர், ஜனவரி 04, 2017 13:01

No comments:

Post a Comment