Saturday, March 10, 2018

*மகளிர்தினம் ஓர் இஸ்லாமிய பார்வை.*

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
👉 *பெண் பிள்ளைகள் பிறந்தால் உயிரோடு புதைத்த காலத்தில் பெண் குழந்தை பிறந்தால் ஒரு ஆட்டை அறுத்து விருந்து கொடுக்கச் சொன்ன மார்க்கம்.*
👉 *மூன்று பெண் குழந்தைகளை பெற்று அவர்களை கண்ணியமாக வளர்த்து, நல்ல முறையில் திருமணம் முடித்துத்தரும் பெற்றோர்கள், சொர்க்கத்தில் என்னோடு இருப்பார்கள் என்று நன்மராயம் கூறியவர் இறைத்தூதர் முஹம்மத் ( ஸல் ).*
👉 *வாழும் உரிமையே மறுக்கப்பட்ட காலத்தில் பெண்களுக்கு சொத்தில் உரிமை தந்த மார்க்கம் இஸ்லாம்.*
👉 *பெண்களின் சம்மதம் இல்லாமல் திருமணம் நடத்தக்கூடாது என்று தடை விதித்த இறைத்தூதர் முஹம்மத் ( ஸல் ).*
👉 *திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படுத்தப்படும் ஒரு ஒப்பந்தமே அன்றி மனைவி என்பவள் கணவனின் அடிமையல்ல என்று சட்டம் இயற்றிய மார்க்கம் இஸ்லாம்.*
👉 *வரதட்சணை எனும் பகல் கொள்ளையைத் தடுத்து பெண்ணுக்கு மஹர் எனும் திருமண நன்கொடையை மாப்பிள்ளை தர வேண்டும் என்று கட்டளையிட்ட மார்க்கம் இஸ்லாம்.*
👉 *தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது என்று தாய்மைக்கு பெருமை சேர்த்தவர் இறைத்தூதர் முஹம்மத் ( ஸல் ).*
👉 *உங்கள் மனைவியிடத்தில் யார் சிறந்தவரோ அவரே உங்களில் சிறந்தவர் என்று உபதேசித்தவர் இறைத்தூதர் முஹம்மத் ( ஸல் ).*
👉 *மனைவியின் மீது கணவனுக்கு உள்ள உரிமைகள் அனைத்தும் கணவன் மீது மனைவிக்கும் உள்ளது என்று பெண்களின் உரிமையை நிலைநாட்டியது இஸ்லாம்.*
👉 *கணவனை இழந்த பெண்கள் சிதைக்கப்படுவதை தடுத்து நிறுத்தி விதவைகளுக்கு மறுதிருமணம் செய்ய வலியுறுத்தியவர் இறைத்தூதர் முஹம்மத்(ஸல் ).*
👉 *வெறும் காட்சி பொருளாக பார்த்து ரசிக்கும் கயவர்களுக்கு மத்தியில், கண்ணியமான ஆடை (பர்தா) அணிய கற்றுத்தந்ந மார்க்கம் இஸ்லாம்.*
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
*இங்கு மகளிர்க்கு என்று ஒரு நாள் இல்லை.*
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
*ஒவ்வொரு நாளிலும் அவர்கள் மதிக்கப்பட வேண்டும்.*

No comments:

Post a Comment