Friday, August 17, 2018

இறந்தும் உயிர்வாழும் ஹம்ஸா நாயகம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும்    உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இது ‘அல்லாஹ்வின் சிங்கம்’ என வர்ணிக்கப்பட்ட ஸையுதுனா ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் புனித மண்ணறை 1970ல் எடுக்கப்பட்டது.
70 வருடங்களுக்கு முன்பு உஹத் மலை அடிவாரப்பகுதி பெரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டது. அப்போது அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள ஸஹாபா பெருமக்களின் புனித மண்ணறைகளையம் வெள்ள நீர் சூழ்ந்தது.

புனித மண்ணறைகள் அகழப்பட்டு அவர்களின் புனித சடலங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட அனுமதி வழங்கப்பட்டது.
அப்போது அங்கு அந்தப் புனித மண்ணறைகள் அகழப்படும் குழுவில் ஷைக் முஹம்மத் சவfப் அவர்களும் இடம் பெற்றிருந்தார்கள்.
அவர்கள் ஸையுதுனா ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் புனித சடலம் அகழ்ந்தெடுக்கப்படும்போது அதனை தன் கண்களால் கண்டார்கள்.
அந்தப் புனிதச் சடலம் அன்று அடக்கியது போல், அப்பழுக்கில்லாமல் அப்படியே முழுமையாக இருந்தது.
அது எந்த அளவுக்குப் பாதுகாக்கப்பட்டு இருந்தது என்றால், அவர்கள் சுற்றப்பட்டிருந்த புனித கபன் துணிகூட, பழுதுபடாமல் அப்படியே முழுமையாக இருந்தது.
ஷைக் முஹம்மத் சவfப் கூறுகிறார்கள், “ஸையுதுனா ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கட்டுமஸ்தான உடல் அமைப்பை உடையவர்கள்.
அவர்களின் கரம், காயப்பட்டிருந்த அவர்களின் வயிற்றின் மீது வைக்கப்பட்டிருந்தது.
அவர்கள் அவரின் கரத்தை தூக்கினார்கள். அவர்கள் இன்னும் உயிரோடு இருப்பது போல், இரத்தம் அவரின் காயத்திலிருந்து பீறிட்டுப் பாய்ந்தது.
இதே போல் அத்தனை காயங்களும் உயிர்ப்போடு திகழ்ந்தன.
LIFE IN SAUDI ARABIA 
தமிழில்: Abdur Raheem Muhammad Jaufer

This is a photo of the resting place of the Lion of Allāh, Sayyiduna Hamza in the 1970s. Over 70 years ago, the area of Uhud became flooded to such an extent that the graves of the Companions were filled with water.
Shaykh Mahmud Sawaf was one of those present when they dug the grave of the Sahaba in order to relocate them. He saw the blessed body of Sayyiduna Hamza completely intact and preserved to such an extent that even his Kaffan (shroud) was completely protected.
Shaykh Mahmud said that Sayyiduna Hamza was mighty in stature. His hand was placed on his abdomen which was injured. They lifted his hand, and blood immediately began to flow from his injury as though he was still alive, and his cuts were still fresh. 
Like: Life in Saudi Arabia

நன்றி : முகமது பாரீஸ் - துஆக்களின் தொகுப்பு 

No comments:

Post a Comment