Thursday, January 31, 2019

கேன்சருக்கு நபிவழியில் மருந்து கண்டுபிடிப்பு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கேன்சருக்கு நபிவழியில் மருந்து கண்டுபிடிப்பு,

சவூதி ஆசிரியை சாதனை..!
=======================================
நபிகள் நாயகம் இறைவனின் உண்மை துாதர் என்பது மீண்டும் நிருபணம்!!
அவர்களின் சொல்லை அடிப்படையாக கொண்டு நடைபெற்ற ஆய்வில் புற்று நோயிக்கான மருந்து கண்டுபிடிப்பு…
அல்லாஹு அக்பர்!
ஒட்டகத்தின் பால் மற்றும் சிறுநீரில் மருத்துவ குணம் உள்ளதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் பாலின் மருத்துவ குணம் ஓரளவு சிந்தனைக்கு எட்டும் விசயமாகும் சிறுநீரில்
நோய்களை உருவாக்கும் கிருமிகள் தான் இருக்கும் அதில் எப்படி நோயை குணபடுத்தும் மருத்துவ குணம் இருக்கமுடியும். இப்படி சிந்தித்தார்
சவுதி அரேபியாவின் ஜித்தா மாநகரில் அமைந்துள்ள கிங் அப்துல் அஜீஸ் பல்கலை கழகத்தில் பணியாற்றும் பாதன் குர்ஷித் என்ற பேராசிரியை. அதே சமயம் அந்த வார்த்தை சாதரண மனிதனின் உதடுகள் உதிர்த்த வார்தையல்ல இறைவனின் தத்துவத்தை சுமந்து நிற்கும் முஹம்மது நபியின் உதடுகளில் இருந்து புறப்பட்டு வந்த வார்த்தைகள் அப்படியானால் அந்த வார்த்தைக்குள் ஏதோ மர்மம் இரகசியம் புதையுண்டு கிடக்கிறது அதை வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும் என எண்ணிய அந்த
பேராசிரியை 30 ஆண்டுகளுக்கு முன்பு அன்றிருந்த வசதிகளை கொண்டு ஒட்டகத்தின் சிறுநீர்
பற்றிய தனது ஆய்வை தொடங்கினார். 
பல கட்டமாக சவுதியிலும் சவுதிக்கு வெளியே வளர்ந்த நாடுகளின் அதிநவீன ஆய்வு கூடங்களிலும்
தனது ஆய்வை தொடர்ந்த அந்த மருத்துவ பேராசிரியை ஆய்வின் முடிவில் உலகையை அதிசிய வைக்கும் நம்மை எல்லாம் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் உலகின் மருத்துவ விஞ்ஞானத்தையே திகைப்பில் ஆழ்த்தும் ஒரு அற்புதமான உண்மையை கண்டறிந்தார்….
ஆம் ஒட்டகத்தின் சிறு நீரில் புற்று நோயை தணிக்கும் குணபடுத்தும் மூலக்கூறுகள் உள்ளன
அதிலிருந்து புற்று நோயை குணபடுத்துவதர்க்கான மருந்துகளை தயாரிக்க முடியும் என்பதை தான் அந்த பேராசிரியை கண்டறிந்தார் அதை பல்வேறு விதங்களில் சோதித்து பார்த்த அவர் இறுதியில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு அவர் தயாரித்த அந்த மாத்திரைகளை கொடுத்தபோது பாதிக்கபட்டவர்கள் அந்த நோயில் இருந்து குணமடைவதை கண்டிறிந்தார்.
அவரது ஆய்வு ஒட்டகத்தின் சிறு நீரில் மருத்துவ குணம் உள்ளது என்ற நபிகள் நாயகத்தின் கருத்தை 100 சதவீதம் உறுதி செய்தது..
30 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுக்கு பிறகு அந்த பேராசிரியை கண்டத்திய அந்த
முடிவிர்க்காகன அடிப்படையை சாதரண வார்த்தைகளில் நபிகள் நாயகத்தால் எப்படி சொல்ல
முடிநதது விஞ்ஞானத்தின் விழிகள் இறுக கட்டபட்டிருந்த காலத்தில் வாழ்ந்த நபிகள் நாயகத்தால் அதுவும் எழுதவும், படிக்கவும் தெரியாத நபிகள் நாயகத்திர்கு ஒட்டகத்தின் சிறு நீரில் மருத்துவ குணம் உள்ளது என்ற உண்மை எப்படி தெரிந்தது
அவர் சராசரி மனிதனாக இருந்து கொண்டு இதை சொல்வதர்கு வாய்பே இல்லை எல்லாவற்றையும்
அறிந்துள்ள இறைவனின் தூதராக அவர் இருந்ததால் அவரிடம் இருந்து புறப்பட்டு வந்த வார்த்தை இறைவனின் வார்த்தையாக இருந்த்தால் இது சாத்தியமானது. எனவே இந்த நபி மொழியும் நபிகள் நாயகத்தின் துதுத்துவத்தை அறுதியிட்டு உறுதி கூறும் அற்புத சான்றுகளில் ஒன்றாக அமைகிறது..
இனி அந்த நபி மெழியை தருகிறேன்
ﻋَﻦْ ﺃَﻧَﺲٍ ﺭَﺿِﻲ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ ﺃَﻥَّ ﻧَﺎﺳًﺎ ﺍﺟْﺘَﻮَﻭْﺍ ﻓِﻲ ﺍﻟْﻤَﺪِﻳﻨَﺔِ
ﻓَﺄَﻣَﺮَﻫُﻢُ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺻﻠﻰ
ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺃَﻥْ ﻳَﻠْﺤَﻘُﻮﺍ ﺑِﺮَﺍﻋِﻴﻪِ ﻳَﻌْﻨِﻲ ﺍﻻﺑِﻞَ ﻓَﻴَﺸْﺮَﺑُﻮﺍ ﻣِﻦْ
ﺃَﻟْﺒَﺎﻧِﻬَﺎ ﻭَﺃَﺑْﻮَﺍﻟِﻬَﺎ
ﻓَﻠَﺤِﻘُﻮﺍ ﺑِﺮَﺍﻋِﻴﻪِ ﻓَﺸَﺮِﺑُﻮﺍ ﻣِﻦْ ﺃَﻟْﺒَﺎﻧِﻬَﺎ ﻭَﺃَﺑْﻮَﺍﻟِﻬَﺎ ﺣَﺘَّﻰ ﺻَﻠَﺤَﺖْ
ﺃَﺑْﺪَﺍﻧُﻬُﻢْ ﻓَﻘَﺘَﻠُﻮﺍ
ﺍﻟﺮَّﺍﻋِﻲَ ﻭَﺳَﺎﻗُﻮﺍ ﺍﻹﺑﻞَ ﻓَﺒَﻠَﻎَ ﺍﻟﻨَّﺒِﻲَّ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ
ﻓَﺒَﻌَﺚَ ﻓِﻲ ﻃَﻠَﺒِﻬِﻢْ
ﻓَﺠِﻲﺀَ ﺑِﻬِﻢْ ﻓَﻘَﻄَﻊَ ﺃَﻳْﺪِﻳَﻬُﻢْ ﻭَﺃَﺭْﺟُﻠَﻬُﻢْ ﻭَﺳَﻤَﺮَ ﺃَﻋْﻴُﻨَﻬُﻢْ . ﺭﻭﺍﻩ
ﺍﻟﺒﺨﺎﺭﻱ
வெளி ஊரில் இருந்து நபிகள் நாயகத்தை காண வந்த சில மனிதர்கள் நோயுற்று இருந்தார்கள்
அவர்களை பார்த்த நபிகள் நாயகம் தனது ஒட்டக மேய்ப்பாளரிடம் அந்த ஒட்டகத்தின் பாலையும் சிறு நீரையும் பெற்று அருந்துமாறு கூறினார்கள். அவ்வாறே அந்த மனிதர்கள் செய்தனர். முழுமையாக ஆரோக்கியம் பெற்றனர்.
அறிவிப்பவர் அனஸ் (ரலி) ஆதாரம் (புகாரி)
மீள்பதிவு : Mohamed Bazith - துஆக்களின் தொகுப்பு.

No comments:

Post a Comment