Tuesday, November 26, 2019

ஜனாஸாவை ஐஸ் பெட்டியில் ( பிரீஸர் பாக்ஸில்) வைக்க வேண்டாம்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ !!!
ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் சகோதர சகோதரிகள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக !!!
                ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~  இன்று காலை மரணித்தவர் வீட்டிற்க்கு ஜனாஸாவை பார்க்க சென்றிருந்தேன். அங்கு ஒரு வயதான ஆலிம் ஒருவரை சந்நித்து சிறிது நேரம் பேசும் வாய்ப்பு கிடைத்தது..!
அவர் சொன்னது இது தான் .....
இன்று ஒருவர் மரணித்து விட்டால் உடனடியாக பிரீஸர் பாக்ஸில் ஜனாஸாவை வைத்து விடுகிறார்கள் ....!
உயிர் உடலில் இருந்து பிரிவதே மிகபெரிய வேதனை இதில் ஐஸ் பெட்டியில் வைத்தால்...?
அந்த வேதனையை நினைத்து கூட பார்க்க முடியவில்லை...!
இன்று மரணித்தவரை ஐஸ் பெட்டியில் வைப்பது நாகரீகம் என கருதபடுகிறது இறந்தவரின் நிலையை யாரும் நினைத்து பார்ப்பதில்லை என்று வருத்தத்துடன் சொன்னார் ....!
பிறகு அவரே அதற்கு தீர்வும் சொன்னார்..
அதாவது ஜனாஸாவை சுத்தம் செய்தபின் ஜனாஸாவின் இரு அக்குல்களிலும் வயிற்றின் மேல் பகுதியிலும் கொத்தமல்லி தழையை வேரை அகற்றிவிட்டு வைத்தால் ஜனாஸா இரண்டு நாட்கள் ஆனாலும் கெட்டு போகாது வாடையும் வராது....!

இனி வரும் காலங்களில் ஐஸ் பெட்டியை தவிர்ப்போம் இந்த முறையை செயல் படுத்தி ஜனாஸாவின் வேதனையை குறைப்போம்..!
நன்றி ...!
இதை அதிகம் ஷேர் செய்யுங்கள்...!

குறிப்பு:

நமது இஸ்லாம் மார்க்கம் இறந்தவரை சீக்கிரமாக கஃபனிட்டு அடக்கம் செய்ய கட்டளை இடுகிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்; "நீங்கள் ஜனாஸாவை (சுமந்து செல்லும்போது) விரைந்து செல்லுங்கள். அது (மய்யித்) நல்லறங்கள் புரிந்ததாக இருந்தால் அந்த நன்மையின் பக்கம் விரைந்து. செல்கிறீர்கள். அவ்வாறு இல்லாவிட்டால் ஒரு தீங்கை உங்களின் தோள்களில் இருந்து (விரைவில்) இறக்கி வைக்கிறீர்கள்" என்று கூறியதாக அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி)
(யாரும் வேண்டும் என ஆசைப்பட்டு வைக்க மாட்டார்கள் சில நிர்பந்த நிலையில் தான் வைக்கிறார்கள்)
தகவல் : அல்  முஸ்லிமா - 🙂🌹சொர்க்கம் நுழையுவோம் வாருங்கள்🌹🕋🙂

No comments:

Post a Comment