Saturday, August 2, 2014

பொது அறிவு-2

இந்திய பொருளாதார திட்டமிடுதலின் வரலாறு
-----------------------------------------------------------------------
* பொருளாதார திட்டமிடுதலை முதன் முதலில் கூறிய அறிஞர் - விஸ்வேஸ்வரய்யா
* தேசிய திட்ட கமிஷன் 1938 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு தலைமையில் உருவாக்கப்பட்டது.
* 1934 - ஆம் ஆண்டு இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதாரம் என்ற நூலை எழுதியவர்- விஸ்வேஸ்வரய்யா.
* 1944 - ஆம் ஆண்டு தேசிய திட்டமிடலில் முதன் முயற்சியாக 8 முன்னணி தொழில் அதிபர்களால் பொருளாதார முன்னேற்றத்திற்கான ஒரு திட்டம் என்ற நாடு முழுமைக்கான ஒரு திட்டம் உருவாக்கப்பட்டது. அதுவே பம்பாய் திட்டம் எனப்பட்டது.
* 1945 - காந்திய திட்டம் - ஸ்ரீமன் நாராயணன்
* 1950 - மக்கள் திட்டம் - M.N. ராய்
தேசிய திட்டக் குழு:
* தேசிய திட்டக்குழு மார்ச் 15, 1950 இல் தொடங்கப்பட்டது.
* திட்டக் குழுவின் முதல் தலைவர் - ஜவஹர்லால் நேரு.
* திட்டக்குழுவின் முதல் துணைத் தலைவர் - குல்சாரிலால் நந்தா.
* திட்டக் குழுவின் உறுப்பினர்கள் மத்திய அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்.
* திட்டகுழு அரசுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பு.
திட்டக் குழுவின் நோக்கம்:
* நாட்டின் பொருளாதாரம் மூலதனம் மனிதவளம் ஆகியவற்றை மதிப்பிடு செய்தல்.
* செல்வங்களை ஆராய்ந்து அவற்றை ஒதுக்கீடு செய்தல்.
* செல்வங்களை ஆராய்ந்து அவற்றை ஒதுக்கீடு செய்தல்
* விவசாயம், தொழில்துறை, மின்சாரத் துறை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் பிற துறைகளில் வேகமான வளர்ச்சி.
* சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுகளை நீக்குதல்.
தேசிய வளர்ச்சிக் குழு:
* தேசிய வளரச்சிக் குழு 15.08.1952 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
* தேசிய வளர்ச்சிக் குழு ஒரு சட்டப்பூர்வ அமைப்பு.
* தேசிய வளர்ச்சிக் குழுவின் உறுப்பினர்கள் - மத்திய அமைச்சர்கள், அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் மாநில முதல்வர்கள் மற்றும் மாநில நிதி அமைச்சர்கள்.
தேசிய வளர்ச்சி குழுவின் முக்கியப் பணி:
* ஐந்தாண்டு திட்டத்திற்கு இறுதி அங்கீகாரம் அளித்தல்.
மாநில திட்டக் குழு:
* மாநில திட்டக்குழுவின் தலைவர் மாநில முதல்வர்.
* மாநில திட்டக்குழுவின் உறுப்பினர்கள் மாநில நிதி அமைச்சர் மற்றும் பொருளாதார நிபுணர்கள்.
* ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் பொருளாதார முன்னேற்றம் காண 1928 ஆம் ஆண்டிலேயே முயன்ற முதல் நாடு சோவியத் ரஷ்யா.
முதல் ஐந்தாண்டுத் திட்டம்: 1951 - 1956
முதல் ஐந்தாண்டு திட்டத்தை வகுத்தவர் - ஹரோல்டு தோமர்
முக்கியத்துவம் தரப்பட்ட துறை விவசாயத்துறை.
சமூக முன்னேற்ற திட்டம் 1952-ல் தொடங்கப்பட்டது.
வேளாண்மை தவிர நீர்ப்பாசனம், மின் உற்பத்தி, போக்குவரத்து தொழில் துறைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.
முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் கட்டப்பட்ட முக்கிய அணைகள்:
தாமோதர் அணை, ஹிராகுட் எணை, பக்ராநங்கல் அணை, கோசி அணை, சாம்பல் அணை, நாகார்ஜூனா அணை, மயூராக்ஸி அணை போன்றவை.
இரண்டாவது ஐந்தாண்டு திட்டம்: 1956 - 1961
இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தை வகுத்தவர் P.G.மஹல நாபிஸ்.
முக்கியத்துவம் தரப்பட்ட துறை தொழில் துறை.
இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் தொடங்கப்பட்ட முக்கிய கனரக தொழிற்சாலைகள்:
* ரஷ்யா உதவியுடன் பிலாய் கனரக தொழிற்சாலை.
* பிரிட்டன் உதவியுடன் துர்காபூர் கனரக தொழிற்சாலை.
* ஜெர்மனி உதவியுடன் ரூர்கேலா கனரக தொழிற்சாலை.
* தசம முறையில் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.
* அணுசக்தி ஆணையம் ஹோமிபாபா தலைமையில் அமைக்கப்பட்டது.
மூன்றாவது ஐந்தாண்டு திட்டம்: 1961 - 1956
* மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தை வகுத்தவர் - P.G.மஹல நாபிஸ்.
* மூன்றாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம் தற்சார்பு திட்டமாகும்.
* பணமதிப்பு 36 சதவிகிதம் உயர்தல்
* சீனர் படையெடுப்பு, பாகிஸ்தான் போர், பஞ்சம் போன்ற காரணங்களால் மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் படுதோல்வி அடைந்தது.
ஆண்டுத் திட்டம்: 1966 - 1969
* இது திட்ட விடுமுறை காலமாகும்
* இக் காலக்கட்டத்தில் புசுமைப் புரட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.
* முக்கியத்துவம் தரப்பட்ட துறை, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் தொழில் துறை.
நான்காம் ஐந்தாண்டு திட்டம்: 1969 - 1974
* நான்காம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய குறிக்கோள், நிலையான வளர்ச்சி மற்றும் தன்னிறவை.
* பாகிஸ்தான் போருக்குப் பின், பங்காளதேஷ் அகதிகள் வருகை, பணவீக்கம் உயர்தல் போன்ற காரணத்தால் நான்காம் ஐந்தாண்டு திட்டம் தோல்வி அடைந்தது.
ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம்: 1974 - 1979
* ஐந்தாம் ஐந்தாண்டு திட்டத்தின் மறுபெயர் குறைந்தபட்ச தேவை திட்டம்.
* ஐந்தாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய குறிக்கோள் வறுமையை ஒழித்தல்.
* ஒர் ஆண்டுக்கு முன்பே நிறுத்திக் கொள்ளப்பட்ட திட்டமாகும்.
* இந்திராகாந்தி அவர்களால் இருபது அம்சத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
* கரிபீ ஹட்டாவோ என்ற வறுமை ஒழிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
* ஊரக வளர்ச்சி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
சுழற்சி திட்டம்: 1978 - 1980
இது ஜனதா அரசு திட்டமாகும்.
* முக்கியத்துவம் தரப்பட்ட துறை விவசாயம் அது தொடர்பான துறைகளில் வேலைவாய்ப்பு அளித்தல்.
* குடிசை மற்றும் சிறுதொழிலை மேம்படுத்துதல்.குறைந்தபட்ச வருமானம் பெருபவர்களைக் குறைந்தபட்ச தேவை அடைய வைக்கவும் முக்கியத்துவம் தரப்பட்டது.
ஆறாம் ஐந்தாண்டு திட்டம்: 1980 - 1985
ஆறாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம்
* வருமான ஏற்றத் தாழ்வுகளைக் குறைப்பதன் மூலம் வறுமையை அகற்றுதல்.
* குறைந்தபட்ச தேவை திட்டமும், ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி திட்டமும் கொண்டுவரப்பட்டன.
ஏழாவது ஐந்தாண்டு திட்டம்: 1985 - 1990
ஏழாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம்
* உணவு, வேலைவாய்ப்பு, உற்பத்தித் திறன, தற்சார்பு ஆகியவை பெருகுதல்.
* ஏழாம் ஐந்தாண்டு திட்டத்தில் அறிமுகப்படுத்திய முக்கிய திட்டங்கள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தையும் ஊரக நிலமற்றோர் வேலைவாய்ப்பு திட்டத்தையும் இணைத்து ஜவஹர் ரோஜ்கர் யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
* வேலைக்கு உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
* முதன் முதலில் தனியார் துறைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.
ஆண்டுத் திட்டம்: 1990 1992
* இந்த ஆண்டு திட்டத்தில் சமூக மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்.
* இந்த ஆண்டு திட்டத்தில் இந்தியா உலக சந்தையில் நுழையத் தொடங்கியது.
எட்டாவது ஐந்தாண்டு திட்டம்: 1992 - 1997
எட்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம்:
* முழு வேலைவாய்ப்பு, தொடக்கக்கல்வி, மனிதவளமேம்பாடு, மக்கள் தொகை கட்டுப்பாடு, வேகமான பொருளாதார வளர்ச்சி.
* புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைபடுத்தப்பட்டது.
* பிரதம மந்திரி ரோஜ்கர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டம்: 1997 - 2002
ஒன்பதாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம்.
* வேளாண்மை, கிராம வளர்ச்சி, வறுமை ஒழிப்பு மற்றும் 2004க்குள் முழு கல்வி.
* ஒன்பதாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய கொள்கை வளர்ச்சியுடன் கூடிய சமநிதி மற்றும் சமத்துவம்.
* ஒன்பதாம் ஐந்தாண்டு திட்டத்தில் இந்திய சுதந்திர பொன்விழா கொண்டாடியது. சர்வ சிக்க்ஷ அபியான் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
பத்தாம் ஐந்தாண்டு திட்டம்: 2002 - 2007
பத்தாம் ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கம்:
* நேரடி அந்நிய முதலீடு, தொழிலாளர் முன்னேற்றம், பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கிராம வளர்ச்சி.
* தலா வருமானம் பத்து ஆண்டுக்குள் இரண்டு மடங்கு அதிகரித்தல்.
* கல்வி அறிவு 75 சதவிகிதம் அதிகரித்தல்.
* 2011க்குள் மக்கள் தொகை வளர்ச்சி 16 சதவிகிதம் குறைத்தல்.
பதினோராவது ஐந்தாண்டு திட்டம்: 2007 - 2012
* மொத்த உள் நாட்டு உற்பத்தி 8 முதல் 10 சதவிகிதம் அதிகரித்தல்.
* வேளாண்மை உற்பத்தி ஆண்டுக்கு 4 சதவிகிதம் அதிகரித்தல்.
* 70 மில்லியன் புதிய வேலைவாய்ப்பு உருவாக்குதல்
* வறுமையை 10 சதவிகிதம் குறைத்தல்.
கல்வி:
* ஆரம்ப கல்வி நிலையத்திற்கு மேல் செல்லாத குழந்தை விகிதம் 52 சதவிகிதமாக குறைத்தல்.
* 7 வடதுக்கு மேற்பட்ட கல்வி கற்கும் குழந்தை விகிதத்தை 85 சதவிகிதம் அதிகரித்தல்.
சுகாதாரம்:
* குழந்தை இறப்பு விகிதம் 28 ஆகவும்,
* பிரசவத்தின் போது இறக்கும் இறப்பை 1000க்கும் 1 எனவும் குறைத்தல்.
* மொத்த கருவுறு விகிதத்தை 2 சதவிகிதம் குறைத்தல்.
* 2009 க்குள் அனைவருக்கும் சுகாதாரமான குடிநீர் வழங்குதல்.
* ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகள் விகிதம் 50 சதவிகிதம் குறைத்தல்.
மகளிர் மற்றும் குழந்தைகள்
* ஆண் பெண் பால்விகிதத்தை 2011 - 12க்குள் 935 ஆக உயர்த்துதல் மற்றும் 2016-17க்குள் 950 ஆக
உயர்த்துதல்.
* பெண்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளில் 33 சதவிகிதம் இடஒதுக்கீடு செய்து தருதல்.
உள்கட்டமைப்பு:
* அனைத்து கிராமங்களிலும் வசதி செய்து தருதல்.
* 500 மக்கள் தொகை உள்ள மலைவாழ் மக்களுக்கும் 1000 மக்கள் தொகை உடைய கிராமங்களுக்கும் சாலை வசதி செய்து தருதல்.
* 2007 க்குள் அனைத்து கிராமங்களிலும் தொலைபேசி வசதி செய்து தருதல்.
* 2012 க்குள் அனைத்து கிராமங்களிலும் இணையதள வசதி செய்து தருதல்.
சுற்றுப்புறச் சூழல்:
* வனம் மற்றும் மரங்கள் 5 சதவிகிதம் அதிகரித்தல்.
* உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்தவாறு தூய்மையான காற்று வழங்குதல்.
பனிரெண்டாவது ஐந்தாண்டு திட்டம்: 2012 - 2017
* பனிரெண்டாவது ஐந்தாண்டு திட்டத்திற்குத் தேசிய வளர்ச்சிக்குழு இறுதி அங்கீகாரம் அளித்த நாள் டிசம்பர் 2012.
பனிரெண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் பொருளாதார வளர்ச்சி:
* மொத்த உள் நாட்டு வளர்ச்சி 8 சதவிகிதம்.
* விவசாயத் துறை வளர்ச்சி 4 சதவிகிதம்
* உற்பத்தி துறை வளர்ச்சி 7 சதவிகிதம்
* தொழிற்சாலை வளர்ச்சி 7.6 சதவிகிதம்
* சேவைத்துறை வளர்ச்சி 9.0 சதவிகிதம்
வறுமை மற்றும் வேலைவாய்ப்பு:
* 10 சதவிகிதம் வறுமையை ஒழித்தல்
* 50 மில்லியன் வேலைவாய்ப்பு உருவாக்குதல்
கல்வி:
* 2 மில்லியன் புதிய கல்வி இடத்தை உருவாக்குதல்
* ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இஸ்லாம் மாணவர்கள் பள்ளி இடைநிறுத்தத்தைக் குறைத்தல்.
சுகாதாரம்:
* பிறந்த குழந்தை இறப்பு விகிதம் 25 ஆக குறைத்தல்
* பேறுகால இறப்பு 1000க்கு 1 ஆக குறைத்தல்.
உள்கட்டமைப்பு:
* விவசாய நிலத்தை 90 மில்லியனிலிருந்து 103 மில்லியனாக அதிகரித்தல்.
* அனைத்து கிராமங்களிலும் மின் வசதி செய்து தருதல்.
* அனைத்து கிராம சாலைகளை இணைத்தல்
* தொகைதொடர்பு நெருக்கத்தை 70 சதவிகிதம் அதிகரித்தல்.
சுற்றுப்புறச் :சூழல்:
* ஆண்டுக்கு 1 மில்லியன் ஹெக்டர் வனங்களை உருவாக்குதல்
* காற்று மாசுபடுதலை 20 முதல் 25 சதவிகிதம் 2020க்குள் குறைத்தல்.
சேவைத் துறை:
* 90 சதவிகித இல்லங்களுக்கு வங்கி சேவைகள் அளித்தல்.
* அனைத்து குடும்பங்களுக்கு ஆதார் அட்டை வழங்குதல்.
நன்றி ; புத்தன் சாத்தூர்

No comments:

Post a Comment