Thursday, February 26, 2015

பொது அறிவு தகவல்கள்...!

* முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான்.
* கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறையைக் கண்டறிந்தவர் எட்வர்ட் ஹென்றி.
* மீன் தன் வாழ்நாள் இறுதி வரை வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும்.

* எறும்புகள் தூங்குவதில்லை.
* கங்காரு குட்டி பிறக்கும் போது ஒரு இன்ச் நீளம் மட்டுமே இருக்கும்.
* உதட்டுச் சாயத்தில்(லிப்ஸ்டிக்) மீனின் செதில்கள் பயன்படுத்தப்படுகின்றன.
* இறால்மீனின் இதயம் அதன் தலையில் இருக்கிறது.
* ஒரு பசு தன் வாழ்நாளில் 2 லட்சம் குவளைகள் பால் வழங்குகிறது.
* ஈ என்ற ஒலியுடன் முடியும் சொற்களுக்கு பூனைகள் உடனே செவிமடுக்கும்.
* பூனைகளால் நூறு விதமாக ஒலியெழுப்ப முடியும்.
* நாய்களால் பத்து விதமாக ஒலியெழுப்ப முடியும்.
* கரப்பான் பூச்சியால் ஒன்பது நாள்கள் தலை இல்லாமல் வாழ முடியும்.அதன் பின்னரே பசியால் செத்துப் போகும்.
* ஒரு மரம்கொத்தியால் ஒரு நொடியில் இருபது முறை மரத்தைக் கொத்த முடியும்.
* பச்சோந்தியின் நாக்கு அதன் உடம்பைப் போல் இரண்டு மடங்கு நீளம் கொண்டது.
* பாலூட்டிகளின் இரத்தம் சிவப்பு,பூச்சிகளின் இரத்தம் மஞ்சள்,நீர்வாழ் உயிரினங்களின் இரத்தம் நீள நிறமுடையது.
* எறும்புகள் 16 வருடம் வரை வாழக் கூடியவை.
* எறும்பின் வாசனை நுகரும் சக்தி,நாயின் மோப்பச் சக்திக்கு ஒப்பானது.
* பன்றிகளால் அண்ணாந்து பார்க்க முடியாது.
* முதலைகளால் தன் நாக்கை வெளியே நீட்ட முடியாது.
* ஒரு நத்தை மூன்று ஆண்டுகள் வரை தொடர்ந்து தூங்கும்.
* பனிக்கரடிகள் எல்லாவற்றையும் தம் இடது கைகளாலேயே செய்யும்.
* பட்டாம்பூச்சிகள் தம் பாதங்கள் வழியே சுவையை உணரும்.
* யானைகளால் குதிக்க முடியாது.
* மாகரெல் என்ற மீன் வகை ஒரே நேரத்தில் ஐந்து லட்சம் முட்டைகளை இடும்.
* ஆமைகளுக்கு பற்கள் கிடையாது.
* கடல் ஆமைகளில் ஆயிரத்தில் ஒன்று தான் குஞ்சு பொறித்தபின் உயிர் வாழும்.
* ஒட்டகங்களால் உமிழ் நீரை துப்ப முடியும்.
* நெருப்புக் கோழியால் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட முடியும்.
* பிளாஸ்டிக் உடைவதற்கு 500 ஆண்டுகள் ஆகின்றன.
* உலகில் மிக கொடூரமான நில நடுக்கம் 1557ல் சீனாவில் நடந்தது. இதில் சுமார் 8 லட்சம் மக்கள் இறந்தனர்.

No comments:

Post a Comment