Friday, August 18, 2017

துஆ

அல்ஹம்துலில்லாஹ்! புகழனைத்தும் ஏக இறைவனுக்கே!
ஸலாத்தும்,ஸலாமும் அண்ணல்நபி ﷺ அவர்களின் மீது பொழியட்டுமாக!
யா அல்லாஹ் ! பரக்கத்தான இன்றைய ஜும்மா நாளில் உன்னுடைய மஃபிரத்தையும்,ஆபியத்தையும், ரஹ்மத்தையும் எங்களின் மீது இரக்குவாயாக!
யா அல்லாஹ்! எங்களின் துஆக்களை ஏற்றுக்கொண்டு உன்னுடைய அற்புதத்தை நிகழ்த்திக்காட்டுவாயாக!
யா அல்லாஹ்! அடியார்களின் மீது நீ வைத்துள்ள உள்ளன்பை எங்களின் மீது
வெளிப்படுத்துவாயாக!
எங்களின் காரியங்களை இலேசாக ஆக்குவாயாக!
பெற்றோர்களான நாங்கள் செய்த பாவங்களின் காரணமாக எங்களின் பிள்ளைகளின் வாழ்க்கையில் சிரமத்தை ஏற்படுத்திவிடாதே!
எங்களை மன்னித்து எங்களின் மீது கருணை காட்டுவாயாக!
எங்களின் பிள்ளைகளின் இம்மை,மறுமை வாழ்க்கையை நீ திருப்தியுறும் வகையில் அமைத்துத் தருவாயாக!
ஆமீன்.

No comments:

Post a Comment